Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி அலுவலகத்தில்...

Print PDF

தினமணி              16.08.2013

மாநகராட்சி அலுவலகத்தில்...

ஈரோடு மாநகராட்சியில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை துணைமேயர் கே.சி.பழனிசாமி ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.

அதைத்தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

 50 பேருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மண்டலத் தலைவர்கள் இரா.மனோகரன், கேசவமூர்த்தி, முனியப்பன், காஞ்சனா பழனிசாமி, மாநகராட்சிப் பொறியாளர் ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் அசோக்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி              16.08.2013

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

அபிராமம் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி, வியாழக்கிழமை நடைபெற்றது.

   பேரூராட்சித் தலைவர் (பொறுப்பு) எம். மாரி தலைமையில் நடைபெற்ற பேரணியை செயல் அலுவலர் ஆர். ராஜாராம் துவக்கி வைத்தார். பேரணியில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், பேட்டை தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர். 

  முக்கிய வீதிகள் வழியாக பேரணியினர் மழை நீர் சேகரிப்பு குறித்த கோஷங்களை  முழங்கியபடி சென்றனர். சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கோ. தெய்வநாயகம் ஆலோசனையில் பேரணி ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜாராம் உள்ளிட்டோர் கவனித்தனர்.

 

நகராட்சியில் சுதந்திர தின விழா

Print PDF

தினமணி              16.08.2013

நகராட்சியில் சுதந்திர தின விழா

பழனி நகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.   நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நகராட்சிப் பொறியாளர் வரவேற்புரை வழங்கினார். நகர்மன்றத் தலைவர் வேலுமணி தேசியக் கொடி ஏற்றி சிறப்புரை நிகழ்த்தினார். நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

 


Page 117 of 841