Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாடம்பாக்கத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினத்தந்தி             08.08.2013

மாடம்பாக்கத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சி பகுதியில், அரசு பள்ளிக்கூட மாணவ–மாணவிகள் மற்றும் மாடம்பாக்கம் பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

பேரணியை பேரூராட்சி தலைவர் விமலா தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் தேவந்திரன், செயல் அலுவலர் சுமா, மாடம்பாக்கம் லோகநாதன், கவுன்சிலர்கள் சாய்சங்கரி, நித்யஉமாபதி உட்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்          07.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

அந்தியூர்: அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணியை, எம்.எல்.ஏ., ரமணீதரன் துவக்கி வைத்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர். ஒன்றிய அதிமுக செயலாளர் செல்வராஜ், ஊராட்சி தலைவர் மீனாட்சி சுந்தரம், துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட மாணவரணி தலைவர் சண்முகானந்தம், கவுன்சிலர் குருராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல, அத்தாணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, தலைவர் செந்தில்கணேஷ் துவக்கி வைத்தார். அத்தாணி அரசு பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். நால்ரோடு, சந்தைபேட்டை வழியாக பேரணி பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர். வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் பேரணியில் பங்கேற்றனர்.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி           07.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

   பேரூராட்சித் தலைவர் கே. குணசேகரன் பேரணிக்கு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.ஆர்.ராஜேந்திரன், செயல் அலுவலர் எம்.தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் உள்பட பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.     மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த பதாகைகளுடன் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பேரணி சென்ற வழியில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. பேரூராட்சி அலுவலகம் முன் பேரணி தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

 


Page 122 of 841