Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி           07.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

  திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேரூராட்சி மற்றும் மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  பேரணியை பேரூராட்சித் தலைவர் சுசித்ரா பாண்டியன் துவக்கிவைத்தார். அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் எம்.வி.எம். பாண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் எம்.ஏ. பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில் மழை சேகரிப்பு குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினமணி             07.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

செஞ்சி பேரூராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் செஞ்சிமஸ்தான் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் தமிழ்ச்செல்வம் முன்னிலை வகித்தார். ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஊர்வலத்தில் கலந்து கொண்டு மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி கோஷமிட்டபடி சென்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. செஞ்சி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி             07.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

வளவனூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 இப் பேரணியை வளவனூர் பேரூராட்சித் தலைவர் ஆர்.டி.முருகேவல், கொடியசைத்து தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ந.வி.கன்னியப்பன் முன்னிலை வகித்தார்.

  வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு தொடர்பான பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு பிரசாரம் செய்தபடி அனைத்து வார்டுகளின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனர்.

இப் பேரணியில் துணைத் தலைவர் என்.தேன்மொழி நாராயணன், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், இளநிலை உதவியாளர் ஷேக்லத்தீப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 


Page 123 of 841