Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி             07.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

உத்தரமேரூர் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் சுமதி குணசீலன் தலைமை தாங்கி பேரணியை துவக்கிவைத்தார்.

   துணைத் தலைவர் இ.தயாளன் முன்னிலை வகித்தார்.

  பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.ஆரோக்கியதாஸ் வரவேற்றார்.

 பள்ளி மாணவ, மாணவியர்கள் மழைநீர் சேகரிப்பு அவசியம் பற்றி துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர். 

இளநிலை உதவியாளர்  மே.ச.வெ. ஆனந்தசயனம் நன்றி கூறினார்.

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் ஊர்லவத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

ஊர்வலம் பஸ் நிலையத்தில் தொடங்கி, ராஜவீதி, மார்க்கெட், வி.வி. கோயில்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பஸ் நிலையத்தில் ஊர்வலம் முடிந்தது.

இந்த ஊர்வலத்தில் உத்தரமேரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் செல்வம், பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி, ஒன்றியக் குழுத் தலைவர் வரதராஜுலு, பேரூராட்சித் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் கோவிந்தம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சித் தலைவர் தாவூத்பீ உஷேன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள், மழைநீர் சேகரிப்பு பதாகைகளுடன் வந்தனர். ஊர்வலம் பஜார் வீதி, 4 மாட வீதிகள் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

இதில் துணைத் தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி             07.08.2013

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


 

 

 

 

சென்னிமலை பேரூராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் ஜம்பு என்கிற சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சென்னிமலையின் 4 ராஜவீதிகள், பார்க் ரோடு, சந்தை பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். ஊர்வலத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் கே.தெய்வசிகாமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 07 August 2013 06:23
 

வீரபாண்டி பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி             07.08.2013

வீரபாண்டி பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள நெ.4 வீரபாண்டி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு பணிகள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் கே.வி.என்.ஜெயராமன் தொடங்கிவைத்தார். செயல் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் பேரூராட்சி அலுவலர் நம்மாழ்வார் நன்றி கூறினார்.
 


Page 124 of 841