Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF
தினகரன்        06.08.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி


அந்தியூர்: அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணியை, எம்.எல்.ஏ., ரமணீதரன் துவக்கி வைத்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர். ஒன்றிய அதிமுக செயலாளர் செல்வராஜ், ஊராட்சி தலைவர் மீனாட்சி சுந்தரம், துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட மாணவரணி தலைவர் சண்முகானந்தம், கவுன்சிலர் குருராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல, அத்தாணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, தலைவர் செந்தில்கணேஷ் துவக்கி வைத்தார். அத்தாணி அரசு பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். நால்ரோடு, சந்தைபேட்டை வழியாக பேரணி பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர். வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் பேரணியில் பங்கேற்றனர்.
 

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF
தினகரன்        06.08.2013

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம்


கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் மழை சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடந்தது. அதை பேரூராட்சி தலைவர் விஜயா கதிர்வேல் துவக்கி வைத்தார்.

கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சி மெயின் ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம், தேரோடும் வீதி, ஆர்.எஸ் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.  இதில் பேரூராட்சி துணைத்தலைவர் தேவராஜ், செயல் அலுவலர் ரவிக்குமார், கவுன்சிலர்கள் பாலக்குமார், சின்ன பெருமாள், உமா கந்தசாமி, சாவித்திரி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.
 

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி               06.08.2013 

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

திருப்பத்தூரில் பேரூராட்சி சார்பாக மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப்  பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

  ஆறுமுகம்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் ஆர். சேமசுந்தரம் தலைமை வகித்து பேரணியை தொடக்கி வைத்தார். செயல் அலுவலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் தங்கதுரை வரவேற்றார்.

  பேரணியில் மாணவர்கள் மழை நீர் உயிர் நீர், மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்த வாசக அட்டைகளை ஏந்தி வந்தனர். மதுரை சாலை, அண்ணா சிலை, பேருந்து நிலையம், தபால் அலுவலக சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.

  மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்து விளக்கவுரையளிக்கப்பட்டது.

  இதில் துணைத் தலைவர் சையது, பேரூராட்சி உறுப்பினர்கள் சண்முகமுத்து, வைரவராஜ், ஆனந்த், உதயசண்முகம், பாண்டி மீனாள்சேகர், அங்காள பரமேஸ்வரி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 125 of 841