Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி ஊழியர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

Print PDF

தினத்தந்தி          05.08.2013

மாநகராட்சி ஊழியர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

 

 

 

 

 

 

திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. முகாமை மேயர் விசாலாட்சி தொடங்கி வைத் தார். இந்த முகாமில் லோட் டஸ் கண்மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் மாநகராட்சி ஊழி யர்கள் 106 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.

முகாமில் துணைமேயர் குணசேகரன், மாநகர் நல அதிகாரி செல்வகுமார், உதவி ஆணையர் (கணக்கு) சந்தான நாராயணன் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

மழைநீர் சேகரிப்புவிழிப்புணர்வு

Print PDF

தினமலர்             03.08.2013

மழைநீர் சேகரிப்புவிழிப்புணர்வு

பல்லடம்:பல்லடம் கண்ணம்மாள் நேஷனல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன் துவங்கிய ஊர்வலத்தை, பள்ளி முதல்வர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கோவை மெயின் ரோடு, கொசவம்பாளையம் ரோடு, என்.ஜி.ஆர்., ரோடு பகுதிகள் வழியாக சென்று, திருப்பூர் ரோட்டில் உள்ள பள்ளியில், ஊர்வலம் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து, கோஷம் எழுப்பினர். இதேபோல், அவிநாசியிலும், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், நேற்று நடந்தது.

அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் துவங்கிய ஊர்வலத்துக்கு, பேரூராட்சி தலைவி ஜெகதாம்பாள் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சரவணபவன், ஊர் வலத்தை துவக்கி வைத்தார். மெயின் ரோடு, மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதிகள்வழியாக சென்ற ஊர்வலம், மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், துணை தலைவர் மூர்த்தி, அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

 

அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசு மாநகராட்சி ஆணையாளர் மதுமதி வழங்கினார்

Print PDF

தினத்தந்தி              03.08.2013

அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசு மாநகராட்சி ஆணையாளர் மதுமதி வழங்கினார்

அரசு தேர்தல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ– மாணவிகளுக்கு தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளர் மதுமதி பரிசு வழங்கினார்.

பரிசு வழங்கும் விழா

தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும், பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.

காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.நடராஜன், விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயாபால், சட்ட ஆலோசகர் எம்.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் எம்.எஸ்.பி.தேன்ராஜ் வரவேற்று பேசினார். செயலாளர் டி.எஸ்.பி.ஜெயபாலன், பொருளாளர் சி.பொன்பாண்டியன் ஆகியோர் பேசினர்.

மதுமதி வழங்கினார்

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி கலந்து கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மதிப்பெண்கள் பெற்ற 110 மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜெ.வெண்முகிலுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், மாநில அளவில் தங்கப்பதக்கமும் பெற்ற ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி ஏ.பிரீத்திக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் சங்க துணைத்தலைவர்கள் எஸ்.எஸ்.வி.ரங்கநாதன், சீனிவாசன், துணை செயலாளர் அன்பழகன் மற்றும் சங்க உறுப்பினர்கள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 


Page 128 of 841