தினமலர் 27.07.2013
அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம்
சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம் அலுவலக மன்றக் கூடத்தில் நடந்தது.
பேரூராட்சி தலைவர் கீதா கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சேவியர் அமலதாஸ், துணைத் தலைவர் செந்தில்குமார், அனைத்து கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட பலபட்டறை சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை பராமரிப்பு பணியினை மூன்று ஆண்டு காலம் அண்ணாமலைநகர் காஸ்மோபாலிடன் அரிமா சங்கத்திற்கு அளிக்க ஒப்புதல்.
பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் எம்.எல்,ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பணிகள் செய்வது. 5வது வார்டு வடக்கிருப்பு தெருவில் பொதுநிதி மூலம் வடிகால் வாய்க்கால் அமைப்பது.
கே.ஆர்.எம்., நகரில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைப்பது.திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு பிளாஸ்டிக் தூள் ஆக்கும் இயந்திரம் வாங்க அனுமதி. குடிநீர், சுகாதார பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.