Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி              17.07.2013

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

தேவகோட்டையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

  நகராட்சி அலுவலகம் அருகே பேரணியை நகர்மன்றத் தலைவர் சுமித்ரா தொடக்கி வைத்தார். இதில் மேலாளர் பிச்சை மைதீன், மகளிர் மன்றத்தினர், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

  பேரணி தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

  பேரணி நிறைவில் மழை நீர் சேகரிப்பின் நோக்கம் குறித்து நகர்மன்றத் தலைவர் உரையாற்றினார்.

 

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

தினத்தந்தி              16.07.2013

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த தீவிர நடவடிக் கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேரூராட்சி தலைவர் ஆனந்தன் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர், ராக்கிபாளையம், புதுப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தபால்நிலையம், சமுதாயகூடங்களில் 2 மீட்டர் ஆழம் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்கள் வினியோகம் செய்தனர். அப்போது மழைநீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினார்கள்.

 

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

தினத்தந்தி            15.07.2013

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த தீவிர நடவடிக் கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேரூராட்சி தலைவர் ஆனந்தன் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர், ராக்கிபாளையம், புதுப்பாளையத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தபால்நிலையம், சமுதாயகூடங்களில் 2 மீட்டர் ஆழம் 1 மீட்டர் அகலமுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்கள் வினியோகம் செய்தனர். அப்போது மழைநீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினார்கள்.

 


Page 137 of 841