Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டம் விழுப்புரம் நகராட்சியில் "டெமோ'

Print PDF

தினமலர்              09.07.2013

அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டம் விழுப்புரம் நகராட்சியில் "டெமோ'


விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விளக்கி "டெமோ' வைத்துள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட் சிகளில் வீடு கட்ட அனுமதி கோரும் போது, மழைநீர் சேகரிப்பு திட்டம் இருந்தால் மட்டுமே அனுமதியளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நகரம் மற்றும் கிராமங்களில் செயல்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

டெமோ

இதில், விழுப்புரம் நகராட்சி அலு வலகத்தில் மழை நீர் சேகரிப்பின் அவ சியம் குறித்த மழைநீர் சேகரிப்பு தொட்டியின் "டெமோ' ஏற்பாடு செய்து பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். ஒரு கூடாரத்தில் இரும்பு சீட்டுகள் அமைத்து, அதற்கு மேல் மழைநீர் பெய்வது போன்ற தோற்றத்தில், பைப் லைன் பொருத்தப்பட்டுள்ளது.

அதிலிருந்து, தண்ணீர் கொட்ட விட்டு கூடாரத்திலிருந்து, பி.வி.சி., பைப் மூலம், மணல் கற்கள் கலந்த ஒரு சிறிய குடுவைக்குள் தண்ணீர் ஊற் றப்படுகிறது. அந்த தண்ணீரில் மாசு நீக்கி சின்டெக்ஸ் டேக்கில் பைப் மூலம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் சின்டெக்ஸ் டேங் நிரம்பியவுடன், அதிலிருந்து பூமியில் பொருத்தியுள்ள பைப் மூலம் நிலத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். சின்டெக்ஸ் டேக்கில் தேக்கி வைத்துள்ள தண்ணீரை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.

நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த நகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

 

வீதி நாடகங்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

Print PDF

தினமணி              09.07.2013

வீதி நாடகங்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு


திருச்சி மாநகரில் ஜூலை 31-ம் தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வீதி நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த வீதி நாடக விழிப்புணர்வு நிகழ்ச்சி, திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு  தொடங்கியது.

மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி இதைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், கோட்டத் தலைவர் எம். லதா, நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், எக்ஸ்னோரா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவர் எக்ஸ்னோரா சார்பில் நடைபெறும் வீதி நாடகங்களில், ஜமால் முகம்மது கல்லூரி மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் பங்கேற்றனர்.

திருச்சி மாநகரம் முழுவதும் இரு குழுக்களாக சுமார் 100 மையங்களில் வரும் ஜூலை 11-ம் தேதி வரை இந்த நாடகங்கள்  நடைபெறவுள்ளன.

 

கோவை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி               08.07.2013

கோவை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவை குனியமுத்தூரில் மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுவ தற்கு சர்வே எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் தொடங்கி வைத்தார்.

இந்த பணி பற்றி மேயர் செ.ம.வேலுச்சாமி பேசுகையில், ‘புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளான குனியமுத்தூர், குறிச்சி, வடவள்ளி, வீரகேரளம், விளாங்குறிச்சி, காளப்பட்டி, வெள்ளகிணறு, துடியலூர், சின்னவேடம்பட்டி மற்றும் சரவணம்பட்டி ஆகிய இடங்களில் சுமார் 151 சதுர கி.மீட்டர் மற்றும் 750 கி.மீட்டர் நீளத்தில் மழைநீர் வடிகால் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தமிழ்நாடு நகர மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலமாக தனியார் நிறுவனத்துக்கு வேலை உத்தரவு வழங் கப்பட்டுள்ளது. எனவே திட்ட அறிக்கை தயாரிக்க தொடக்கமாக நில அளவுகள் சர்வே செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் லதா, மண்டல தலைவர் கள் ஆதிநாராயணன், பெருமாள்சாமி, நிலைக்குழுத் தலைவர்கள் அர்ச்சுணன், சாந்தாமணிராஜ், சிட்டிகோ–ஆப்ரேடிவ் தலைவர் கே.பி.ராஜ், துணை ஆணையர் சு.சிவராசு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 09 July 2013 10:09
 


Page 143 of 841