Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Print PDF

தினமணி             03.07.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்ற இக்கருத்தங்கை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வளர்மதி தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஆர்.ஞானசேகரன், துணை நிலநீர் வல்லுநர் ஏ.ஜனகராஜ், உதவி பொறியாளர் பற்குணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மாநகராட்சியில் 90 ஊழியர்கள் பணி ஓய்வு

Print PDF

தினமணி              02.07.2013

மாநகராட்சியில் 90 ஊழியர்கள் பணி ஓய்வு

மதுரை மாநகராட்சியில் திங்கள்கிழமை ஒரே நாளில் நிர்வாக அலுவலர், மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 90 பேர் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு சேமநல நிதி உள்ளிட்ட ரூ. 60 லட்சம் உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டது.

 மாநகராட்சி வடக்கு மண்டல நிர்வாக அலுவலர் சுமதி, மருத்துவ அலுவலர் ஆனந்தி உள்ளிட்ட இளநிலை உதவியாளர், பிட்டர் மஸ்தூர், மின் உதவியாளர், அலுவலக உதவியாளர்கள் என 90 பேர் திங்கள்கிழமை பணி ஓய்வு பெற்றனர்.

 இந்த ஊழியர்களுக்கு பணி ஓய்வு பாராட்டுவிழா, மாநகராட்சி மைய  அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.

   இவர்களுக்கான சேமநல நிதி, சிறப்பு சேமநல நிதி மற்றும் கடைசி மாத சம்பளம் ஆகியவை காசோலைகளாக  மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர். நந்தகோபால் ஆகியோர் வழங்கினர். இந்த ஊழியர்களை பாராட்டி துணை ஆணையர் (பொறுப்பு) சின்னம்மாள், நகரப் பொறியாளர் (பொறுப்பு) அ.மதுரம், நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையர்கள் ஆ.தேவதாஸ், ரெகோபெயாம், பாஸ்கரன், மாநகராட்சி அனைத்து ஊழியர் கூட்டமைப்புத் தலைவர் ப.சுரேஷ்குமார், எழுத்தர் சங்கத் தலைவர் முகம்மது ரபீக் மற்றும் அலுவலர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

 ஏற்கெனவே, மாநகராட்சி மருத்துவமனைகளில் 18 மருத்துவர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ள நிலையில், மேலும் ஒருவர் பணி ஓய்வு பெற்றுள்ளார்.

 விரைவில், மருத்துவர் பணியிடம் மட்டுமின்றி அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.

 

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி               01.07.2013

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

  சிவகாசி நகராட்சி சார்பில் சனிக்கிழமை மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

   முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ. முனுசாமி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன், துணைத் தலைவர் கா.அ.அ. அசன்பதுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பொறியாளர் மா. முத்து வரவேற்றார். செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சிறப்புறையாற்றி பேசியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மழைநீர் சேமிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில் மழைநீரை சேமிக்க வேண்டும். வீடுகளில் மழைநீர் சேமிக்கப்பட்டால், வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரும் நல்ல தண்ணீராக மாறிவிடும். எதிர்காலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மழைநீர் சேமிப்பு மிகவும் அவசியமாகும் என்ற அவர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் . பேரணி  நகரின் பிரதான வீதிகளில் சென்று, மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது.    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் டி. ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், திருத்தங்கல் நகர்மன்றத் துணைத் தலைவர் சக்திவேல், வட்டாட்சியர் மைகேல்ராஜ், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 145 of 841