Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னை மாநகராட்சியில் முதல்வரை பாராட்டி தீர்மானம்

Print PDF

தினபூமி          27.06.2013

சென்னை மாநகராட்சியில் முதல்வரை பாராட்டி தீர்மானம்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Jaya1(C)_100.jpg 

சென்னை, ஜூன்.27 - மலிவு விலையில் காய்கறி, மினரல் வாட்டர் விற்பனை போன்ற மக்களுக்கான திட்டங்களைக் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை மாநகராட்சிமன்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இன்னல்களை போக்கும் வகையில் விலையில்லா அரிசி, கிலோ 20 ரூபாய்க்கு மலிவு விலையில் தரமான அரிசி, குறைந்த விலையில் சுவையான குடிநீர் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.

காய்கறி விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க பசுமை பண்ணை மலிவு விலை காய்கறி கடையை திறந்து வைத்த முதல்-அமைச்சரை மனதார பாராட்டுகிறோம். குன்னூர் ராணுவப் பயிற்சி முகாமிலிருந்து இலங்கை ராணுவ வீரர்களை வெளியேற்ற வைத்த முதல்வரின் கம்பீரத்துக்கும், ஆளுமைக்கும் இம்மாநகராட்சி பாராட்டு தெரிவிக்கிறது.இலங்கை கடற்படையின் வெறிச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க சட்டப் போர் நடத்தி வரும் முதல்வரை  இம்மன்றம் வணங்கி மகிழ்கிறது.என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் தவறான நடவடிக்கையை தடுத்து நிறுத்திட மத்திய அரசிடம் போராடி வருகிற தமிழக முதல்வரை பாராட்டுகிறோம். உத்தரகாண்ட் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு வந்து அரவணைத்து பாதுகாத்த முதல்-அமைச்சருக்கு மாநகராட்சி நன்றி தெரிவிக்கிறது.வெள்ளத்தால் பாதித்த உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கிய முதல்வருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ாஅம்மா மினரல் வாட்டர்ா உற்பத்தி நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டும், கும்மிடிப்பூண்டியில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் தயாரிக்கும் உற்பத்தி நிலையம் அமைக்க உத்தரவிட்டும், ஒரு லிட்டர் குடிநீர் 10 ரூபாய்க்கு வழங்க செய்த முதல்-அமைச்சரை சென்னை மாநகராட்சி பாராட்டுகிறது.தமிழக சட்டமன்ற வைர விழா, நினைவு வளைவை குறுகிய காலத்தில் கம்பீரத்தோடு நிறுவிய முதல்-அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.பிரதமராகும் தகுதி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உள்ளது என்ற கருத்து கணிப்பில் கலந்து கொண்ட வெளிநாடு வாழ் இந்தியருக்கு மாநகராட்சி நெடுஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கிறது.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி               27.06.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதில் நகர்மன்ற உறுப்பினர்களும், நகராட்சி ஊழியர்களும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

 ராசிபுரம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

 தமிழகத்தில் பருவ மழை குறைந்து, இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து போனதால், பல்வேறு இடங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் தீவிரமாக அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

 இந்த நிலையில், ராசிபுரம் நகராட்சி அலுவலகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக, நகராட்சி நடுநிலைப் பள்ளி முன்பாக தொடங்கிய பேரணியை நகர்மன்ற தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

 இதில், பேண்ட் வாத்தியங்கள் முழங்க திரளான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, மழைநீரின் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தட்டிகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியவாறும் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர். பின்னர், நகர்மன்ற கூட்ட அரங்கில் நகராட்சி ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்புத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 இதில் நகர்மன்ற தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் பேசியது:

 முதலில் நகர்மன்ற உறுப்பினர்களும், நகராட்சி பணியாளர்களும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். குடியிருப்புகள், அரசுக் கட்டடங்கள், தொழில்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

 இதில், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.வெங்கடாஜலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்         27.06.2013

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சியில், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதில், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., ரெங்கராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் ஜவகர்பாபு தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாரதி, கவுன்சிலர்கள் செல்ல நாகராஜன், மோகன் உள்ளிட்டோர் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.

நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு கூறியதாவது:

மழை நீரை சேகரித்தால் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம். நீர்வளத்தை அதிகரிக்கலாம். நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தடுக்கலாம். நீரின் தரம் கெடாமல் பாதுகாக்கலாம். இப்பகுதியில், கடல் நீர், குடிநீருடன் கலப்பதை தவிர்க்கலாம். வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தலாம், களிமண் பகுதியில் அமைந்துள்ள கட்டிங்களில் விரிசல் ஏற்படுவதை தடுக்க முடியும்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன், மொட்டை மாடியில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும், மழைநீர் சேகரிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மழைநீர் தொட்டிகளை புனரமைக்கவும், புதுப்பிக்கவும், புதிய கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பை அமைக்கவும் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இலவசமாக ஆலோசனை வழங்கி வருகின்றனர். இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 


Page 150 of 841