Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி         25.06.2013

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி

திருச்செங்கோட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுப்  பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி  மாணவிகள் மற்றும் அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மகளிர் மேல்நிலைப் பள்ளி வாயில்  அருகில் பேரணியை நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி தொடக்கிவைத்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பதாகைகளை ஏந்திச் சென்றனர். மழைநீர் சேமிப்பின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அவர்கள் பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து குரல்  எழுப்பப்பட்டன. பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

பேரணியில் நகர்மன்றத் தலைவர் பொன். சரஸ்வதி, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், தன்னார்வலர்கள்  கலந்து கொண்டு நடந்து சென்றனர்.

Last Updated on Tuesday, 25 June 2013 08:51
 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

Print PDF

தினமணி               24.06.2013 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

 நீர் ஆதாரம் வெகுவாக குறைந்து வருவதாலும், மழை இல்லாத காரணத்தாலும் தமிழக அரசு இனிமேல் கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்தும் விதமாக நகராட்சியில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர்மன்றத் தலைவர் சுமித்ரா தலைமை வகித்தார். அனைத்து வார்டுகளிலும் உள்ள மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினமணி               24.06.2013 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போடி நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு ஊர்வலம் நடைபெற்றது.

 ஊர்வலத்துக்கு நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் தலைமை வகித்தார். ஆணையர்  எஸ். சசிகலா ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். மேலாளர் (பொறுப்பு) முருகதாஸ், பொறியாளர் ஆர்.திருமலைவாசன், சுகாதார ஆய்வாளர் சுல்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 ஊர்வலத்தில் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, மழை நீரைச்  சேகரிப்பதால் நிலத்தடி நீர் உயர்வதையும், அதன்மூலம் ஏற்படும் நன்மைகளையும் விளக்கும் வகையில் எழுதப்பட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி சென்றனர். மழைநீர் சேகரிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன.

  பேரணிக்கான ஏற்பாடுகளை நகராட்சி பொறியியல் பிரிவு, சுகாதாரப் பிரிவு  அலுவலர்கள், பிச்சாண்டி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 


Page 154 of 841