Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைநீர் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்        21.06.2013

மழைநீர் விழிப்புணர்வு பேரணி


திருமழிசை: மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருமழிசையில் நடந்த மழை நீர் சேகரிப்பு குறித்து நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு, பேரூராட்சி தலைவர் அமுதா முனுசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகாதேவன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி அலுவலர் ஜோசப் வரவேற்புரையாற்றினார். பேரூராட்சிகளின் இணை இயக்குனர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்த விளம்பர பதாகைகள் ஏந்தி, முக்கிய வீதிகளின் வழியாக பேரணி நடந்தது.

 

ராணிப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி               21.06.2013

ராணிப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்


ராணிப்பேட்டையில் நகரசபையின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு நகரசபை தலைவர் சித்ரா சந்தோஷம் தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகரசபை துணை தலைவர் ஜே.பி.சேகர், ஆணையாளர் (பொறுப்பு) மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி மாணவிகள் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், அதற்கான வழிமுறை குறித்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியவாறும் ஊர்வலமாக சென்றனர்.

நகரசபை வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகரசபை அலுவலகத்திலேயே முடிவடைந்தது.

ஊர்வலத்தில் நகரசபை உறுப்பினர்கள் கே.பி.சந்தோஷம், மணிமேகலை, கீதா, சுகாதார அலுவலர் சரவணன், ஆய்வாளர் அப்துல் ரகீம், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி 1000 மாணவ, மாணவிகள் பேரணி

Print PDF

தினகரன்             20.06.2013

மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி 1000 மாணவ, மாணவிகள் பேரணி

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி சார்பில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

இதனை மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். துணை மேயர் பழனிசாமி, கமிஷ்னர் விஜயலட்சுமி, செயற்பொறியாளர் ஆறுமுகம், மண்டல தலைவர் மனோகரன், கேசவமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மழைநீர் சேமிப்பை வலியுறுத்தும் கட் அவுட், பேனர்களை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர். பேரணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பிரப் ரோடு, எம்ஜிஆர்., சிலை, மேட்டூர் ரோடு வழியாக சென்று வஉசி., பூங்கா மைதானத்தில் பேரணி நிறைவடைந்தது. பேரணியில் மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்பு அடங்கிய வாகனமும் இடம் பெற்றது.

பேரணி குறித்து மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கூறுகையில், ‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களிலும், ஏற்கனவே உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். ஏற்கனவே வறட்சியால் கடும் பாதிப்புகள் ஏற்படுவதால் வரவிருக்கும் மழைகாலத்தின் போது மழைநீரை சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியே இந்த பேரணி நடத்தப்படுகிறது, என்றார்.

 


Page 155 of 841