Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஆவடி நகராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி             20.06.2013 

ஆவடி நகராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

ஆவடி நகராட்சியில், பள்ளி மாணவர்களின் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

அம்பத்தூரை அடுத்த ஆவடி நகராட்சியில், மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, புதன்கிழமை பெருநகராட்சி ஆணையர் மோகன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சிப் பொறியாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி நகர்மன்ற தலைவர் சா.மு.நாசர் பங்கேற்று கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் ஆவடி விவேகானந்தா பள்ளி மாணவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆவடி பஜார் வீதி, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்த மாணவர்கள், மழை நீர் சேகரிப்பு குறித்து நகராட்சி நிர்வாகத்தினரால் அச்சடிக்கப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் மழை நீர் சேகரிப்பு அமைப்புடன் கூடிய மாதிரி வீடு வடிவமைக்கப் பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் மோகன் கூறியது: நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீரின் தன்மையும் உவர்ப்பாக மாறி வருகிறது. இனி வரும் காலத்தில் இந்த நகராட்சியில் குடிநீர் பிரச்னை ஏற்படாத வகையிலும் நீரின் தன்மை கெட்டு விடாமலும் இருக்கும் வகையிலும் மழை நீர் சேகரிப்பை மக்களிடம் தீவிரமாக வலியுறுத்த உள்ளோம். புதிய வீடு கட்டுபவர்களிடம் கண்டிப்பாக மழை நீர் சேகரிப்பு அமைக்க உத்தர விடுகிறோம். என்றார்.

Last Updated on Thursday, 20 June 2013 07:14
 

அம்மா' உணவகங்களில் தயிர் சாதத்திற்கு ஊறுகாய் : செப்.15ம் தேதி முதல் மாலையில் சப்பாத்தி, குருமா

Print PDF

தினமலர்               19.06.2013

அம்மா' உணவகங்களில் தயிர் சாதத்திற்கு ஊறுகாய் : செப்.15ம் தேதி முதல் மாலையில் சப்பாத்தி, குருமா

திருநெல்வேலி : நெல்லையில் "அம்மா' உணவகங்களில் தயிர் சாதத்திற்கு ஊறுகாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், செப்.15ம் தேதி முதல் மாலையில் சப்பாத்தி, குருமா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேயர் விஜிலா சத்தியானந்த் கூறினார்.இதுகுறித்து மேயர் விஜிலா சத்தியானந்த் கூறியதாவது: நெல்லை மாநகராட்சி பகுதியில் ஜூன் 2ம் தேதி முதல் 10 இடங்களில் "அம்மா' உணவகங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்துவருகின்றன.

பாளை., மனகாவலம்பிள்ளை நகர் (மார்க்கெட் பகுதி), மேலப்பாளையம், நெல்லை டவுன் தொண்டர் சன்னதி, பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பொதுமக்களின் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. தயிர் சாதத்திற்கு "ஊறுகாய்' வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நடந்துவரும் 10 உணவகங்களில் இதுவரை 58 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.

முதல்வர் உத்தரவுப்படி செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாலையில் சப்பாத்தி, குருமா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகத்திற்கு ஆகும் செலவுகள் யாவும் மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவழிக்கப்படுகிறது. விரைவில் இதற்கான தொகையை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்வார். நெல்லை மாநகராட்சியில் விரைவில் கூடுதலாக அம்மா உணவகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மேயர் விஜிலா சத்தியானந்த் கூறினார்.

 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அம்மா திட்ட முகாமில் 35 முதியோருக்கு உதவித்தொகை உத்தரவு மேயர் மல்லிகா பரமசிவம் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி               19.06.2013

ஈரோடு கருங்கல்பாளையத்தில் அம்மா திட்ட முகாமில் 35 முதியோருக்கு உதவித்தொகை உத்தரவு மேயர் மல்லிகா பரமசிவம் வழங்கினார்


ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் 35 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை மேயர் மல்லிகா பரமசிவம் வழங்கினார்.

அம்மா திட்ட முகாம்

தமிழக வருவாய்த்துறை சார்பில் ஒவ்வொரு உள்வட்டத்திலும் மக்களைத்தேடி வருவாய்த்துறை என்ற அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிக்கான அம்மா திட்ட முகாம் நேற்று காலை கருங்கல்பாளையம் ரங்கபவனம் திருமணமண்டபத்தில் நடந்தது. முகாமுக்கு ஈரோடு மாநகராட்சி மண்டல தலைவர் ரா.மனோகரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் காஞ்சனா பழனிச்சாமி, கவுன்சிலர்கள் குப்புசாமி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

35 பேருக்கு உதவித்தொகை

நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கலந்து கொண்டு 35 முதியோருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை வழங்கினார்.

முகாம் குறித்து ஈரோடு சமூகபாதுகாப்பு திட்ட சிறப்பு தாசில்தார் சுப்பராயன் விளக்கி பேசினார். முகாமில் சுமார் 400 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக ஈரோடு வட்ட வழங்கல் தாசில்தார் ஆறுமுகம் வரவேற்று பேசினார். மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அதிகாரிகள் ராமகிருஷ்ணன், சுதாப்பிரியா, நாட்ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 157 of 841