Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தமிழக அரசு விருது பெற்ற சுயஉதவிக் குழுவுக்கு மேயர் பாராட்டு

Print PDF
தினமணி               14.06.2013

தமிழக அரசு விருது பெற்ற சுயஉதவிக் குழுவுக்கு மேயர் பாராட்டு


தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது பெற்ற கோவையைச் சேர்ந்த பனிமலர் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு கோவை மேயர் செ.ம.வேலுசாமி வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.

தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்த பனிமலர் மகளிர் சுயஉதவிக் குழு பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து அதை மறுசுழற்சி செய்வதில்  மாநிலத்தில் 2-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இதற்காக தமிழக அரசால் இரண்டாம் பரிசாக ரூ. 3 லட்சம் பெற்றுள்ளது.

இக்குழுவினர் மேயர் செ.ம.வேலுசாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். திடக்கழிவு மேலாண்மையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்வதிலும் தாங்கள் செயல்பட்ட முறை குறித்து மேயரிடம் விளக்கினர்.

பனிமலர் மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைவி ராணி கூறியது: கடந்த 2010-ல் எங்கள் குழுவினர் பஞ்சாயத்து வாரியாகச் சென்று பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தோம். அதற்கு முன்னதாக ரூ. 2 லட்சம் மதிப்பில் இயந்திரத்தை வாங்கினோம்.

நேரடியாகச் சென்று பிளாஸ்டிக் பொருள் சேகரிப்பதில் சிரமம் இருந்ததால், பிளாஸ்டிக் கழிவுப்பொருள் வியாபாரம் செய்பவர்களிடமும் சில நிறுவனங்களிடமிருந்தும் பிளாஸ்டிக் பொருள்களை நேரடியாக வாங்கினோம். நாளொன்றுக்கு 500 கிலோ வரை அரைத்து ஒரு கிலோ ரூ. 25 வீதம் விற்பனை செய்து வருகிறோம்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பிளாஸ்டிக் கலவையை சாலை அமைக்கப் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் செய்யும் இத்தொழிலைப் பாராட்டி தமிழக அரசு மாநிலத்தில் இரண்டாமிடமாகத் தேர்வு செய்து எங்களுக்கு ரூ. 3 லட்சம் பரிசு அளித்துள்ளது என்றார்.

பிற மகளிர் சுயஉதவிக் குழுவினரும் இது போன்ற தொழில்களைச் செய்து பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்று மேயர் செ.ம.வேலுசாமி கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் க.லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

காலாவதியாகிறது வ.உ.சி., உயிரியல் பூங்கா அனுமதி!

Print PDF

தினமலர்              14.06.2013

காலாவதியாகிறது வ.உ.சி., உயிரியல் பூங்கா அனுமதி!


கோவை:கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவுக்கு, மத்திய வனஉயிரின பூங்கா ஆணையம் வழங்கியுள்ள அனுமதி வரும் ஜூலை 31ம் தேதியோடு நிறைவடைகிறது. அனுமதி புதுப்பிக்கப்படாததால் பூங்காவிலுள்ள வன உயிரினங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை மாநகராட்சியில் நேரு ஸ்டேடியம் அருகில், 9.5 ஏக்கர் பரப்பில் கடந்த 1965ல், வ.உ.சி., பூங்கா அமைக்கப்பட்டது. அதில், 4.5 ஏக்கர் பரப்பில் வ.உ.சி., விலங்கியல் பூங்கா அமைக்கப்பட்டு, மாமிச உண்ணிகள், பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன வகைகள் பராமரிக்கப்படுகின்றன. உயிரியல் பூங்கா நடத்துவதற்கான அனுமதியை, மத்திய வனஉயிரின பூங்கா ஆணையத்திடம், மாநகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். கடந்தாண்டு வழங்கப்பட்ட அனுமதி வரும் ஜூலை 31ம் தேதியோடு நிறைவடைகிறது.

உயிரியல் பூங்காவில், பறவைகள், பாம்புகள் உள்ளிட்ட வனஉயிரினங்கள் உள்ளதால், அதற்கேற்ப பூங்கா பரப்பு இருக்க வேண்டும். அப்போதுதான், ஆணையம் மூலம் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம், கோவை மத்திய சிறை அருகே, சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 25 ஏக்கரில் உயிரியல் பூங்கா அமைக்க, அரசிடம் அனுமதி கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. ஆனால், அரசிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை; உயிரியல் பூங்கா அனுமதியை ஆணையமும் புதுப்பிக்கவில்லை.

அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல், மாநகராட்சி அதிகாரிகள் தவிக்கின்றனர்.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கோவை மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு அம்சம் இல்லாததாலும், பூங்கா மூலம் வன உயிரின விழிப்புணர்வு ஏற்படும் என்பதாலும், சிறைத்துறை இடம் உயிரியல் பூங்காவுக்கு கிடைக்கும் என நம்புகிறோம். உயிரியல் பூங்காவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 500 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விசிட் செய்துள்ளனர். கடந்தாண்டில் 12 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மத்திய வன உயிரியல் பூங்கா ஆணையத்தின் அனுமதி கிடைத்தால், ஆணையத்தின் நிதியும், சிங்கம், புலி, ஒட்டகச்சிவிங்கி போன்ற உயிரினங்களை வளர்க்க முடியும்'' என்றார்.

 

32, 47–வது வார்டில் 6,500 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர் அமைச்சர் வழங்கினார்

Print PDF
தினத்தந்தி          11.06.2013

32, 47–வது வார்டில் 6,500 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர் அமைச்சர் வழங்கினார்


திருப்பூர் மாநகராட்சி 32, 47வது வார்டில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. விழா வுக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் ஆர்.டி.ஓ. பழனிகுமார் வர வேற்றார்.

மாவட்ட ஊராட்சி தலை வர் சண்முகம் முன்னிலை வகித்தார். துணைமேயர் குணசேகரன், மண்டல தலை வர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துச்சாமி, கிருத்திகா ஆகியோர் வாழ்த்தி பேசி னார்கள். இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 6,500 பேருக்கு இல வச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவைற்றை வழங்கி பேசினார்.

விழாவில் தாசில்தார் அகமத்துல்லா, வருவாய் ஆய் வாளர் சமரசம், கிராம நிர்வாக அதிகாரி கருணாநிதி, நிலைக் குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் சுப் பிரமணியம், சுஜாதா, கீதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள், பொது மக்கள் கலந்து கொண்ட னர். முடிவில் சிறப்பு அமலாக்க திட்ட தனி துணை கலெக் டர் தர்மராஜ் நன்றி கூறினார்.
 


Page 163 of 841