தினத்தந்தி 29.05.2013
மலிவு விலை உணவகத்தால் திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.2¾ கோடி கூடுதல் செலவு
மலிவு விலை உணவகத் தால் திருப்பூர் மாநக ராட்சிக்கு ரூ.2¾ கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.
மலிவு விலை உணவகம்
திருப்பூர் மாநகராட்சியில் மலிவு விலை உணவகம் 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஒரு உணவகத்தில் காலையில் தலா 4 இட்லி, சாம்பார் 300 பேருக்கும், மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம் தலா 300 பேருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு இட்லிக்கு ரூ.3.64ம், சாம்பார் சாதத் துக்கு ரூ.14.73ம், தயிர் சாதத் துக்கு ரூ.7.44ம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் ஒரு இட்லி ரூ.1க் கும், சாம்பார் சாதம் ரூ.5க் கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்பனை செய்ய உள்ளது.
ரூ.2¾ கோடி செலவு
இதன்படி பார்த்தால் ஒரு நபருக்கு ஒரு இட்லி, சாம்பார் சாதம், தயிர்சாதம் விற்பனை செய்தால் மாநகராட்சிக்கு ரூ.16.81 பற்றாக்குறை ஏற் படும். ஒரு உணவகத்துக்கு நாள் ஒன்றுக்கு பற்றாக்குறை ரூ.7 ஆயிரத்து 419 ஆக இருக்கும். மாநகராட்சியில் 10 உண வகங்கள் செயல்பட்டால் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 71 லட்சம் கூடுதல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை பொது நிதியில் இருந்து ஈடுகட்ட மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுபோல் மலிவு விலை உணவகங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க மாநகர நல அதிகாரி தலைமையில் உதவி ஆணை யர், இளநிலை பொறியாளர், கணக்கு அதிகாரி, வரித்தண் டலர் மற்றும் சுகாதார ஆய் வாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருகிற 31ந் தேதி மேயர் விசாலாட்சி தலைமையில் நடக்கும் மாமன்ற கூட்டத்தில் தீர் மானம் கொண்டுவரப்படுகி றது.
மலிவு விலை உணவகத்தால் திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.2¾ கோடி கூடுதல் செலவு
மலிவு விலை உணவகத் தால் திருப்பூர் மாநக ராட்சிக்கு ரூ.2¾ கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.
மலிவு விலை உணவகம்
திருப்பூர் மாநகராட்சியில் மலிவு விலை உணவகம் 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஒரு உணவகத்தில் காலையில் தலா 4 இட்லி, சாம்பார் 300 பேருக்கும், மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம் தலா 300 பேருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு இட்லிக்கு ரூ.3.64ம், சாம்பார் சாதத் துக்கு ரூ.14.73ம், தயிர் சாதத் துக்கு ரூ.7.44ம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் ஒரு இட்லி ரூ.1க் கும், சாம்பார் சாதம் ரூ.5க் கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்பனை செய்ய உள்ளது.
ரூ.2¾ கோடி செலவு
இதன்படி பார்த்தால் ஒரு நபருக்கு ஒரு இட்லி, சாம்பார் சாதம், தயிர்சாதம் விற்பனை செய்தால் மாநகராட்சிக்கு ரூ.16.81 பற்றாக்குறை ஏற் படும். ஒரு உணவகத்துக்கு நாள் ஒன்றுக்கு பற்றாக்குறை ரூ.7 ஆயிரத்து 419 ஆக இருக்கும். மாநகராட்சியில் 10 உண வகங்கள் செயல்பட்டால் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 71 லட்சம் கூடுதல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை பொது நிதியில் இருந்து ஈடுகட்ட மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுபோல் மலிவு விலை உணவகங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க மாநகர நல அதிகாரி தலைமையில் உதவி ஆணை யர், இளநிலை பொறியாளர், கணக்கு அதிகாரி, வரித்தண் டலர் மற்றும் சுகாதார ஆய் வாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருகிற 31ந் தேதி மேயர் விசாலாட்சி தலைமையில் நடக்கும் மாமன்ற கூட்டத்தில் தீர் மானம் கொண்டுவரப்படுகி றது.