தினத்தந்தி 26.05.2013
வாடிப்பட்டியில் தென்னிந்திய அளவிலான ஆக்கி போட்டி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
வாடிப்பட்டியில் தென்னிந்திய அளவில் ஆக்கி போட்டியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய அளவில் ஆக்கி போட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி எவர்கிரேட் ஆக்கி கிளப் சார்பாக தென்னிந்திய அளவிலான கோதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 16வது ஆண்டு ஆடவர் ஆக்கி போட்டி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5நாட்கள் நடக்கிறது.
இதன் தொடக்க விழாவிற்கு பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ரத்தினஜோதி, பெற்றோர்– ஆசிரியர் கழக தலைவர் போஸ்பாப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கி கிளப் தலைவர் ராமானுஜம் வரவேற்றார்.
முதலாவது ஆட்டத்தில் மதுரை தென்மண்டல போலீஸ் அணி, கோவில்பட்டி ராஜீவ்காந்தி ஆக்கி கிளப் அணியை 3க்கு 0 என்ற கோல்கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில சென்னை சிட்டி போலீஸ் அணி, கோவை கல்லாறு ஆக்கி கிளப் அணியை 5க்கு 0 என்ற கோல்கணக்கில் வென்றது.
இன்றைய போட்டிகள்
மாலையில் நடந்த முதலாவது போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி அணி 2க்கு 1என்ற அடிப்படையில் பாளை நண்பர்கள் ஆக்கி அணியை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் வாடிப்பட்டி எவர்கிரேட் ஆக்கி கிளப் அணி கோவில்பட்டி தாமஸ் நகர் ஆக்கி கிளப் அணியை 4க்கு 0 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
இரண்டாம் நாள் இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி அணியும், சென்னை மாநகர காவல்துறை ஆக்கி அணியும், மதுரை ஜி.கே. மோட்டார் அணியும், வேலூர் லெவன்தண்டர்ஸ் அணியும், மதியம் மதுரை தென்மண்டல காவல்துறை அணியும், சென்னை எப்.சி.ஐ. அணியும் விளையாடுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை எவர்கிரேட் ஆக்கி கிளப் குழுவினர் செய்து வருகின்றனர்.
வாடிப்பட்டியில் தென்னிந்திய அளவிலான ஆக்கி போட்டி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
வாடிப்பட்டியில் தென்னிந்திய அளவில் ஆக்கி போட்டியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய அளவில் ஆக்கி போட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி எவர்கிரேட் ஆக்கி கிளப் சார்பாக தென்னிந்திய அளவிலான கோதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 16வது ஆண்டு ஆடவர் ஆக்கி போட்டி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5நாட்கள் நடக்கிறது.
இதன் தொடக்க விழாவிற்கு பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ரத்தினஜோதி, பெற்றோர்– ஆசிரியர் கழக தலைவர் போஸ்பாப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கி கிளப் தலைவர் ராமானுஜம் வரவேற்றார்.
முதலாவது ஆட்டத்தில் மதுரை தென்மண்டல போலீஸ் அணி, கோவில்பட்டி ராஜீவ்காந்தி ஆக்கி கிளப் அணியை 3க்கு 0 என்ற கோல்கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில சென்னை சிட்டி போலீஸ் அணி, கோவை கல்லாறு ஆக்கி கிளப் அணியை 5க்கு 0 என்ற கோல்கணக்கில் வென்றது.
இன்றைய போட்டிகள்
மாலையில் நடந்த முதலாவது போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி அணி 2க்கு 1என்ற அடிப்படையில் பாளை நண்பர்கள் ஆக்கி அணியை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் வாடிப்பட்டி எவர்கிரேட் ஆக்கி கிளப் அணி கோவில்பட்டி தாமஸ் நகர் ஆக்கி கிளப் அணியை 4க்கு 0 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
இரண்டாம் நாள் இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி அணியும், சென்னை மாநகர காவல்துறை ஆக்கி அணியும், மதுரை ஜி.கே. மோட்டார் அணியும், வேலூர் லெவன்தண்டர்ஸ் அணியும், மதியம் மதுரை தென்மண்டல காவல்துறை அணியும், சென்னை எப்.சி.ஐ. அணியும் விளையாடுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை எவர்கிரேட் ஆக்கி கிளப் குழுவினர் செய்து வருகின்றனர்.