Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பெங்களூர் வளர்ச்சி குறித்து முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசிப்பேன்: மேயர் வெங்கடேஷ்மூர்த்தி

Print PDF
தினமணி          24.05.2013

பெங்களூர் வளர்ச்சி குறித்து முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசிப்பேன்: மேயர் வெங்கடேஷ்மூர்த்தி


பெங்களூர் வளர்ச்சி குறித்து முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மேயர் வெங்கடேஷ்மூர்த்தி தெரிவித்தார்.

பெங்களூரில் வியாழக்கிழமை மாநகர மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியது, முதல்வர் சித்தராமையாவை ஏற்கெனவே சந்தித்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவரை சந்தித்து பெங்களுர் மாநகர வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்படும். ஆலோசனையில் அடிப்படை கட்டுமானப் பணிகள், குப்பை, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார். முன்னதாக மாமன்ற கூட்டத்தில் ஆளும்கட்சித்தலைவர் நாகராஜ், எதிர்க்கட்சித்தலைவர் குணசேகர் ஆகியோர் முதல்வர் சித்தராமையா, பெங்களூரைச் சேர்ந்த அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், தினேஷ்குண்டுராவ், கிருஷ்ணேபைரேகெüடா, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மாமன்ற உறுப்பினர்கள் முனிராஜ், பைரதிபசவராஜ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 

மாநகராட்சி பகுதியில் அம்மா திட்ட உணவகம் ஜூன் 31ம் தேதி திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

Print PDF
தினமலர்        23.05.2013

மாநகராட்சி பகுதியில் அம்மா திட்ட உணவகம் ஜூன் 31ம் தேதி திறக்க ஏற்பாடுகள் தீவிரம்


ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், பத்து இடங்களில் இம்மாதம், 31ம் தேதி அம்மா திட்ட உணவகம் திறக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில், சென்னை மாநகராட்சியில் உள்ள, 200 வார்டுகளிலும், தலா ஒன்று வீதம் அம்மா திட்ட உணவகம் செயல்படுகிறது. தவிர, தமிழகத்தில் உள்ள ஒன்பது மாநகராட்சிகளிலும், தலா, 10 அம்மா உணவகம், இம்மாதம், 31ம் தேதிக்குள் திறக்க முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இதன்படி, ஈரோடு மாநகராட்சி பகுதியில் இதற்காக, 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைந்து பணிகள் நடக்கிறது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அஜய் யாதவ், ஈரோடு வருகை புரிந்து, உணவகம் அமையும் சோலார் நாடார் மேடு வளாகத்தை பார்வையிட்டார்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வரும், 31ம் தேதிக்குள் அம்மா உணவகம் அமைக்கும் பணியை முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இப்பணிகளை பார்வையிட, இணை ஆணையர் அஜய் யாதவ் வந்து ஆய்வு செய்துள்ளார்.

ஒவ்வொரு உணவகமும், ஒரு சுய உதவிக்குழுவால் நடத்தப்படும். இதற்காக குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்கு தேவையான, பாத்திரம் மற்றும் பிற பொருட்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. வரும், 31ம் தேதி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த உணவகங்களை முதல்வர் திறந்து வைக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப பணிகள் நடந்து வருகிறது, என்றனர்.
 

"அம்மா' உணவகம் புகார் மற்றும் ஆலோசனை தெரிவிக்க தொலைபேசி எண்கள்

Print PDF
தினமலர்                 23.05.2013

"அம்மா' உணவகம் புகார் மற்றும் ஆலோசனை தெரிவிக்க தொலைபேசி எண்கள்


சென்னை: மலிவு விலை உணவகத்தில், புகார் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்வதற்கு வசதியாக, மாநகராட்சி அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் எழுதி வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில், 200 மலிவு விலை உணவகங்கள் செயல்படுகின்றன.
 
இவற்றில், மக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்ய புத்தகம், புகார் பெட்டி ஏற்கனவே உள்ளன.மேயர் எண் இதையடுத்து, மலிவு விலை உணவகம் குறித்து, பொதுமக்களிடம் இருந்து முறையான ஆலோசனைகள், குறைகளை பதிவு செய்ய ஒவ்வொரு உணவகத்திலும் தொலைபேசி எண்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இதில், மாநகராட்சி புகார் பிரிவு, மேயர், ஆணையர், துணை ஆணையர் (சுகாதாரம்), மாநகர சுகாதார அலுவலர், கூடுதல் சுகாதார அலுவலர், மண்டல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், மலிவு விலை உணவகங்களில், சமைக்கும் பாத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் சாப்பிடும் தட்டுகளை வெந்நீரில் கழுவுவதற்கு வசதியாக, "வாட்டர் ஹீட்டர்களை' மாநகராட்சி வழங்குகிறது. ஓரிரு நாளில்... மணலி மண்டலத்திற்கு உட்பட்ட மலிவு விலை உணவகங்களில் அமைக்க, "வாட்டர் ஹீட்டர்கள்' வந்து இறங்கியுள்ளன. இவை ஒருசில நாட்களில் மலிவு விலை உணவகங்களில் பொருத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல, 200 மலிவு விலை உணவகங்களிலும் "வாட்டர் ஹீட்டர்' பொருத்தும் பணி நடந்து வருகிறது.
 


Page 184 of 841