Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மெனுவில் பொங்கல், எலுமிச்சைசாதம் சேர்ப்பு 10 மாநகராட்சியிலும் மலிவு விலை உணவகம் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

Print PDF

தமிழ் முரசு            15.05.2013

மெனுவில் பொங்கல், எலுமிச்சைசாதம் சேர்ப்பு 10 மாநகராட்சியிலும் மலிவு விலை உணவகம் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: தமிழக சட்டசபை இன்று காலை தொடங்கியதும் விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா 5 அறிக்கைகள் வாசித்தார். அவற்றில் கூறியிருப்பதாவது: நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் வட்டங்களில், 62 வட்டங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் புரசைவாக்கம், கிண்டி, மதுரவாயல், திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு, அணைக்கட்டு, விக்ரவாண்டி உள்ளிட்ட 51 வட்டங்களை பிரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 24 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும்.

மடத்துக்குளம், சோழிங்கநல்லூர், ஆம்பூர் உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும். கடலோர மாவட்டங்களில் கடலோர இன்னல் குறைப்பு திட்டம் ரூ.1481 கோடியில் உலக வங்கி நிதியுடன் இந்த நிதியாண்டு தொடங்கப்படும். இதன் மூலம் 121 கடலோர பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். கடலூர், நாகை நகர பகுதிகளில் பூமிக்கு அடியில் மின் இணைப்பு வழங்கப்படும்.10 மாநகராட்சிகளில்மலிவு விலை உணவகம்

சென்னையில் 200 இடங்களில் மலிவு விலை உணவகம் செயல்படுகின்றன. இதில் காலை 7 மணி முதல் 10 மணி வரை ரூ.1 விலையில் இட்லி, மதியம் 12 மணி முதல் 3 மணி வரையில் ரூ.5 விலையில் சாம்பார் சாதம், ரூ.3 விலையில் தயிர் சாதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மதுரை, திருப்பூர், கோவை, நெல்லை, சேலம், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு உள்ளிட்ட 10 மாநகராட்சியில் தலா 10 இடங்களில் இம்மாத இறுதியில் துவக்கப்படும்.

சென்னையில் காலை சிற்றுண்டியில் பொங்கல் கேட்கிறார்கள். மாலையில் சப்பாத்தி கேட்கிறார்கள். எனவே இம்மாத இறுதியில் காலையில் ஒரு ரூபாய் இட்லி கொடுப்பது போல ரூ.5 விலையில் பொங்கல், சாம்பார் வழங்கப்படும். மதியம் ரூ.5 விலையில் எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் வழங்கப்படும்.

மாலையில் சப்பாத்தி வழங்குவதற்கான இயந்திரம் கொள்முதல் செய்ய அவகாசம் தேவைப்படுவதால் செப்டம்பர் முதல் மாலை 2 சப்பாத்தி பருப்பு அல்லது குருமா ரூ.3 விலையில் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

 

மேலும் 9 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள்

Print PDF
தினமணி                 15.05.2013

மேலும் 9 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள்


மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் உட்பட மேலும் 9 மாநகராட்சிகளில், ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வரின் உரை,சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  200 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்களை தமிழக அரசு திறந்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்தத் திட்டம் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், மற்றும் ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்.

இந்த உணவகங்களிலும் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்றார் முதல்வர்.
 

சேலம் செவ்வாய்பேட்டை சுடுகாட்டில் ரூ.1¼ கோடி செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்

Print PDF
தினத்தந்தி         15.05.2013
 
சேலம் செவ்வாய்பேட்டை சுடுகாட்டில் ரூ.1¼ கோடி செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்


சேலம் செவ்வாய்பேட்டை சுடுகாட்டில் ரூ.1¼ கோடி செலவில் அமைக்கப்பட உள்ள எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினை மேயர் சவுண்டப்பன்  தொடங்கி வைத்தார்.

எரிவாயு தகனமேடை


சேலம் மாநகரில் சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டும், மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டும் சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள சுடுகாடுகளில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஏற்கனவே, சேலம் ஜான்சன்பேட்டை இடுகாட்டில் தனியார் பங்களிப்புடன் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் ரோட்டரி கிளப் சார்பில் சேலம் மெய்யனூர் சுடுகாட்டில் ரூ.3½ கோடி செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும்பணி நடந்து வருகிறது.

ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில்..

இந்த நிலையில் உட்கட்டமைப்பு இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சேலம் செவ்வாய்பேட்டை சந்தைப்பேட்டை சுடுகாட்டில் நவீன இருமேடைகளுடன் கூடிய எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு சேலம் மாநகராட்சியில் கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு, நேற்று பூமிபூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிக்கான பூமிபூஜையை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் எம்.அசோகன், துணை மேயர் நடேசன், செயற்பொறியாளர்கள் காமராஜ், அசோகன், உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, உதவி பொறியாளர் சுமதி, வார்டு கவுன்சிலர்கள் மார்கபந்து, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

6 மாதத்தில் பணி நிறைவு

இது குறித்து மேயர் எஸ்.சவுண்டப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘சேலம் மாநகரில் 5 இடங்களில் மயானம் உள்ளது. மக்கள்தொகை பெருகிவரும் சூழ்நிலையில் சுகாதாரத்தையும் சுற்றுப்புறத்தையும் பேணி காக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது செவ்வாய்பேட்டையில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும்பணி இன்னும் 6 மாத காலத்தில் முடிவடையும். மேலும் விரைவில் சேலம் அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய சுடுகாட்டிலும் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது‘‘ என்றார்.
 


Page 190 of 841