Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியில் நவீன புகார் மையம் இன்று திறப்பு

Print PDF
தினமணி                       13.05.2013

மாநகராட்சியில் நவீன புகார் மையம் இன்று திறப்பு


சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் நவீன புகார் மையம் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பொதுமக்கள் புகார் பிரிவு செயல்பட்டு வந்தது.

இந்தப் பிரிவில் 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் சாலைப் பிரச்னைகள், வரிகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான புகார்களை தெரிவித்து வந்தனர். இந்தப் புகார் பிரிவில் ஒரு கணினி மட்டுமே இருந்தது.

இந்த நிலையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள சுதந்திர தின பொன்விழா அரங்கில் நவீன புகார் பிரிவு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போது இந்தப் பிரிவு தயார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இதனை திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.

இந்தப் பிரிவில் 10 கணினிகள் பயன்படுத்தபடவுள்ளன. மேலும் இதில் ஷப்ட் முறையில் 23 அலுவலர்கள் பணியாற்றுவர். பொதுமக்கள் கூறும் புகார்களை கணினியில் பதிந்து, அதற்கான பதிவு எண்ணையும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிப்பார்கள். இந்த எண் மூலம் புகார் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறியலாம்.

இந்தப் பிரிவில் உள்ள தொலைபேசிகள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். புகார் பிரிவில் உள்ள அலுவலர்கள் இணைப்பை துண்டிக்க முடியாது. தொலைபேசியில் நடைபெறும் உரையாடல்கள் பதிவு செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தலித் மாணவ–மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுதல் முகாம் மேயர் தொடங்கி வைத்தார்

Print PDF
தினத்தந்தி                 12.05.2013

தலித் மாணவ–மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுதல் முகாம் மேயர் தொடங்கி வைத்தார்


தலித் மாணவ–மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம் இன்று கோவையில் நடைபெற்றது. மேயர் செ.ம.வேலுசாமி முகாமை தொடங்கி வைத்தார்.

கல்வி வழிகாட்டுதல் முகாம்

பிளஸ்–2 தேர்வில், வெற்றி பெற்ற தலித் மாணவ–மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு முகாம், கோவை தாமஸ் கிளப் அரங்கில் நேற்று நடைபெற்றது. தேசிய இளைஞர் விருதாளர் எஸ்.செல்வகுமார் தலைமை தாங்கினார். விழாவில் அரசு ஆணைகள் தொகுப்பை மேயர் செ.ம.வேலுசாமி வெளியிட்டார். பேராசிரியர் அரங்க மல்லிகா நூலை பெற்றுக்கொண்டார். விழாவில் மேயர் செ.ம.வேலுசாமி பேசும்போது கூறியதாவது:–

அரசு கல்வி திட்டங்கள்

தலித் மாணவ–மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இலவச கல்வி திட்டங்களால் நன்மை செய்து வருகிறார். மாணவ–மாணவிகள் பள்ளிக்கு வந்தால் மட்டும்போதும், புத்தகம் உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் இலவச லேப்–டாப் கிராமப்புற மாணவ–மாணவிகள் உள்பட பலருக்கும் மிக உபயோகமாக இருந்து வருகிறது. தலித் மாணவ–மாணவிகள் கல்வியில் அக்கறை செலுத்தி அரசின் உயர் பதவிகளுக்கு வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு செ.ம.வேலுசாமி கூறினார்.

உயர் கல்வி

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல் மற்றும் பயன்பாடுகள் குறித்து வேலைவாய்ப்பு உதவி இய்குனர் ஆர்.ஜோதி மணி விளக்கி கூறினார். தலித் மாணவர்களின் வங்கி கடன் பெறுவது, மருத்துவ கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்வி குறித்து துறை வல்லுனர்கள் விளக்கி கூறினார்கள்.

இந்த முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராஜு, எஸ்.எம்.சுரேஷ், கோவை ரவிக்குமார், ஓய்வுபெற்ற தாசில்தார் கே.சந்திரன், வெரோனிகா, வக்கீல் வெண்மணி, சி.எம்.மோத்திராஜ், பழனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிவில் ரவிக்குமார் நன்றி கூறினார்.
 

பாளையங்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் மேயர் விஜிலாசத்யானந்த் தொடங்கிவைத்தார்

Print PDF
தினத்தந்தி       10.05.2013

பாளையங்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் மேயர் விஜிலாசத்யானந்த் தொடங்கிவைத்தார்


பாளையங்கோட்டையில் இருந்து புறப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டத்தை மேயர் விஜிலாசத்யானந்த் தொடங்கி வைத்தார்.

நினைவு ஜோதி

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கதேவியின் ஆலய திருவிழாவையொட்டி வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு ஜோதி 14-ம் ஆண்டு தொடர் ஓட்டம் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மேயர் விஜிலாசத்யானந்த் மாலை அணிவித்து நினைவு ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நினைவு ஜோதி பாளையங்கோட்டையில் இருந்து தொடர் ஓட்டமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்றது.

இந்தநிகழ்ச்சியில் வணிகர் சங்க தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை மண்டல தலைவர் எம்.சி.ராஜன், அ.தி.மு.க. மாநகர மாவட்ட முன்னாள் செயலாளர் பாப்புலர் முத்தையா, வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
 


Page 191 of 841