Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விரைவில் "அம்மா' உணவகம்

Print PDF
தினமணி               06.05.2013

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விரைவில் "அம்மா' உணவகம்


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3000 சதுர அடியில் "அம்மா' உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் 15 ஆயிரம் புறநோயாளிகள் மற்றும் 3000 உள்நோயாளிகள் சிகிச்சைப் பெறுகின்றனர்.

இவர்களை நலம் விசாரிப்பதற்காக பல ஆயிரக்கணக்கில் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைகளுக்கு வந்து செல்கின்றனர்.

முதல்வர் அனுமதி: அரசு மருத்துவமனைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் "அம்மா' உணவகம் திறக்கப்படுமா என்று சில வாரங்களுக்கு முன்பு "தினமணி' நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடரந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை வளாகத்தில் "அம்மா' உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் "அம்மா' உணவகம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "அம்மா' உணவகத்துக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்வுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

3000 சதுர அடியில் உணவகம்: இது குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வே.கனகசபை கூறியது:

ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பல ஆயிரக்கணக்கில் நோயாளிகளும், பொது மக்களும் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக "அம்மா' உணவகம் இங்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் பெரிய அளவில் அமைப்பதற்காக 3000 சதுர அடி இடம், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்துக்கு எதிரில் ஒதுக்கப்பட்டுள்ளது.

விரைவில் அங்கு "அம்மா' உணவகம் அமைப்பதற்கான முயற்சியில் மருத்துவமனை நிர்வாகமும், மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளோம்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆங்காங்கே பார்வையாளர்கள் கூடத்தில் பார்சல் விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

ஆவின் பாலகம் அமைக்கப்படுமா? ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக ஒரு தனியார் கேன்டீனும், மருத்துவ மாணவர்களுக்காக கேன்டீன் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இங்கு இருக்கும் கேன்டீன்கள் அனைத்தும் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.

அதனால், நோயாளிகள், பொது மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் வசதிக்காக ஆவின் பாலகம் அமைந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

பேரூராட்சி செயல் அலுவலர்களை தொடர்பு கொள்ள புதிய எண்கள்

Print PDF
தினமணி        05.05.2013

பேரூராட்சி செயல் அலுவலர்களை தொடர்பு கொள்ள புதிய எண்கள்


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர், செயல் அலுவலர்கள் ஆகியோரை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் புதிய எண்களைக் கொண்ட "சிம்கார்டுகள்' வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இவற்றை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வழங்கினார்.

புதிய எண்கள்

மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் - 8883100127.

உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) - 8883100107.

ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் - 8883100160.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் - 8883100161.

மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் - 8883100162.

நாரவாரிக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் - 8883100163.

பள்ளிப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் - 8883100164.

பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் - 8883100165.

பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் - 8883100166.

திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் - 8883100167.

திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் - 8883100168.

ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் - 8883100169.
 

முன்னோடி வட்டமாக மேட்டுப்பாளையம் தேர்வு

Print PDF
தினமணி        04.05.2013

முன்னோடி வட்டமாக மேட்டுப்பாளையம் தேர்வு

இணையவழி மூலம் நில ஆவணங்களை பராமரிக்கும் முன்னோடி திட்டத்திற்கு முன்னோடி வட்டமாக மேட்டுப்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தெரிவித்தார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகதத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் சாந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நில அளவை பதிவேடுகள் துறை இணை இயக்குநர் முத்துக்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது: சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, வட்ட அலுவலகங்களில் நிலப் பதிவுகளுக்கும் பத்திரப் பதிவுத் துறைகளிலுள்ள ஆவணங்களுக்கும் தொடர்பின்றி இருப்பதை சுட்டி காட்டினார்.

பத்திர பதிவுத்துறை மற்றும் வட்ட அலுவலகங்களை இணைப்பதற்கு முதல் கட்டமாக வட்ட அலுவலகங்களில் உள்ள நிலப்பதிவுகளை இணையவழி (ஆன்-லைன்) மூலம் பதிய அவர் உத்தரவிட்டார்.

அதன்படி  தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டத்தை தேர்வு செய்து அந்த வட்டத்திலுள்ள நிலப்பதிவுகளை தேவையான தொழில்நுட்பங்களை கொண்டு ஆன்-லைன் மூலம் பதிய வைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வட்டம் முன்னோடி வட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதையொட்டி இந்த வட்டத்திலுள்ள நில உடமைதாரர்களின் நிலப் பதிவுகளை  கணினியில் பதிவு செய்வதற்கு முன்னர் தங்கள் ஆவணங்களை வட்ட அலுவலகங்களில் சென்று சரிபார்க்கவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நில ஆவணங்களின் பதிவுகள் குறித்து, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலுள்ள நில உடமைதாரர்களின் பதிவேடுகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

நில உடமை தொடர்பான அனைத்து திருத்தப்பணிகளும் வரும் ஜூன் 30-க்குள் முடிக்கப்பட்டு, அனைத்து ஆவனங்களும் செப்டம்பர் இறுதிக்குள் இணையவழி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் மணிசேகரன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வசந்தாமணி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 194 of 841