Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உடுமலை ஸ்டேட்வங்கி காலனியில் நகராட்சி நேரு பூங்கா மைதானம் திறப்பு விழா

Print PDF
தினத்தந்தி        15.04.2013

உடுமலை ஸ்டேட்வங்கி காலனியில் நகராட்சி நேரு பூங்கா மைதானம் திறப்பு விழா


உடுமலை ஸ்டேட் வங்கி காலனி திருவள்ளுவர் வீதியில் நகராட்சி நேரு பூங்கா மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா. கண்தான ஒப்புதல், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முப்பெரும் விழா ஸ்டேட் வங்கி காலனி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் நடந்தது. விழாவுக்கு சங்க கவுரவ தலைவர் ஏ. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் எஸ்.மாணிக்கம், துணை தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜி.மதுரை வீரன் வரவேற்று பேசினார்.

நகராட்சி நேரு பூங்கா மைதானத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரியத் தலைவர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார். கல்வெட்டை நகராட்சி தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனாவும், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை நகராட்சி கவுன்சிலர் என்.ராஜேந்திரனும் திறந்து வைத்தனர். நகராட்சி துணை தலைவர் எம்.கண்ணாயிரம் மரக்கன்றுகளை நட்டினார். கண்தானம் விழிப்புணர்வு குறித்து அரிமா சங்க மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியம் பேசினார். நேதாஜி நல சங்க முன்னாள் கவுரவ தலைவர் டி.கோவிந்தராஜ் வாழ்த்தி பேசினார். முடிவில் யு.கே.நந்தகுமார் நன்றி கூறினார். விழாவில் ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.ஜி.சண்முகம், நகராட்சி கவுன்சிலர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

கணித மேதை ராமானுஜன் பெயரில் வீதி:27-ஆவது வார்டு கவுன்சிலர் கோரிக்கை

Print PDF
தினமணி          14.04.2013

கணித மேதை ராமானுஜன் பெயரில் வீதி:27-ஆவது வார்டு கவுன்சிலர் கோரிக்கை


கணித மேதை ராமானுஜன் பிறந்த வீடு இருக்கும் அழகர்சிங்கர் வீதியை ராமானுஜன் வீதி என்று பெயர் மாற்ற வேண்டும் என, ஈரோடு மாநகராட்சி 27-ஆவது வார்டு கவுன்சிலர் (சுயேச்சை) ராதாமணி பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகத்திடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகராட்சி, 27-ஆவது வார்டுக்கு உள்பட்ட கோட்டை, தெப்பக்குளம் மைதானத்துக்கு அருகிலுள்ள அழகர்சிங்கர் வீதியில் குடியிருந்த சீனிவாச அய்யங்கார்- கோமாளத்தம்மாள் தம்பதியினருக்கு 1887-ல் ராமானுஜன் மகனாகப் பிறந்தார்.

உலகப் புகழ் பெற்ற கணிதமேதை பிறந்ததை நினைவுகூரும் வகையில், அவர் பிறந்த வீட்டை கணித அருங்காட்சியகமாக மாற்ற மாநகராட்சி முடிவுசெய்துள்ளது வரவேற்புக்குரியது.

ராமானுஜன் பிறந்த வீடுள்ள அழகர்சிங்கர் வீதிக்கும், தெப்பக்குளம் மைதானத்தைச் சுற்றியுள்ள கொத்துக்காரநல்லா வீதியின் ஒரு பகுதி வீதிக்கும் "கணிதமேதை ராமானுஜன் வீதி' என்று பெயர் சூட்ட வேண்டும்.

மேலும் ஈரோடு மாநகரில் கணிதப் பூங்காவை அமைக்க வேண்டும். கணிதமேதை ராமானுஜனுக்கு அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தோப்பூரில் அமையும்துணைக்கோள் நகரத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் மேயர் ராஜன் செல்லப்பா பேச்சு

Print PDF
தினத்தந்தி        14.04.2013

தோப்பூரில் அமையும்துணைக்கோள் நகரத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் மேயர் ராஜன் செல்லப்பா பேச்சு


தோப்பூரில் அமையவுள்ள துணை நகரத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட உள்ளது என்று மேயர் ராஜன் செல்லப்பா பேசினார்.

மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா


திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை மேயர் ராஜன்செல்லப்பா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பொன்னரசி வடிவேல், துணைத்தலைவர் ஜெயக்குமார் வரவேற்றனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தர்மராஜ், மாவட்ட கவுன்சிலர் டேவிட் அண்ணாத்துரை, யூனியன் தலைவர் நிர்மலாதேவி, துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் 766 பேருக்கு விலையில்லா பொருட்களை வழங்கி மேயர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:– மதுரை மாவட்டத்தில் இதுவரை 73 ஆயிரம் பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன. 70 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

தோப்பூரில் துணை நகரம்

தமிழகமும், தமிழக மக்களும் வளம் பெற வேண்டும் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அயராது பாடுபட்டு வருகிறார். தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.இதுவரை நீங்கள் மதுரையை தேடி கிழக்கே சென்று கொண்டிருந்தீர்கள். இங்கு அமையவுள்ள துணைக்கோள் நகரத்தில் 2 ஆயிரம் வீடுகள், பள்ளி, விளையாட்டு மைதானம் வர்த்தக மையம் என்று அனைத்து வசதிகளும் செய்து தரப்பட உள்ளது. எனவே மதுரையில் இருந்து தோப்பூருக்கு மேற்கு நோக்கி மக்கள் வர தொடங்கி விடுவார்கள்.விரைவில் தேர்தல் வர உள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா கைநீட்டும் வேட்பாளரை வெற்றிபெறச்செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், இந்தியாவிற்கே வெளிச்சம் கிடைக்கும். ஜெயலலிதா இந்திய பிரதமாவார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தாசில்தார் கங்காதரன், முன்னாள் எம்.எல்.ஏ.சீனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 204 of 841