Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஸ்ரீரங்கத்தில் "அம்மா' உணவகம் மாநகராட்சி "விறுவிறு' ஏற்பாடு

Print PDF
தினமலர்         10.04.2013

ஸ்ரீரங்கத்தில் "அம்மா' உணவகம் மாநகராட்சி "விறுவிறு' ஏற்பாடு

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் விரைவில், "அம்மா' உணவகம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் விஷம்போல உயரும் விலைவாசி காரணமாக, நடுத்தர, ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்று மாவட்டங்களுக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பவர்கள், மூன்று வேளையும் சாப்பிட முடியாமல் பெரும் அல்லலுக்கு உள்ளாயினர்.

அதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சிறப்பு நடவடிக்கையாக, மலிவு விலை உணவகத்தை திறக்க திட்டமிட்டு, கடந்த மாதம், சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையிலுள்ள, 200 வார்டுகளிலும், "அம்மா' உணவகம் திறக்கப்பட்டது.

அங்கு, இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம், 5 ரூபாய், தயிர்சாதம், 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பார்சல் வழங்கப்படுவதில்லை.

தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சியிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருச்சியில், "அம்மா' உணவகம் திறக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, கோ.அபிஷேகபுரம் கோட்ட சானிட்டரி இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் ஆகியோர் நேற்று முன்தினம் சென்னை சென்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள, "அம்மா' உணவகங்களை பார்வையிட்டனர்.

ஸ்ரீரங்கம் "ஃபர்ஸ்ட்': தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில், "அம்மா' உணவகத்தை முதலில் திறக்க திட்டமிட்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள், ஸ்ரீரங்கத்தின் மையப் பகுதியில் உணவகம் திறக்கப்படும் என்று தெரிகிறது.

திருச்சி மாநகராட்சியின் மையப்பகுதிகளான சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்தி மார்க்கெட், திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடங்கிய, 15 வார்டுகளில், (கூட்டுத்தொகை 6) முதற்கட்டமாக, "அம்மா' உணவகம் திறக்கப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

நான்கு மண்டலத்திலும் "அம்மா உணவகம்' ஈரோடு மாநகராட்சியில் விரைவில் துவக்கம்

Print PDF
தினமலர்                 10.04.2013

நான்கு மண்டலத்திலும் "அம்மா உணவகம்' ஈரோடு மாநகராட்சியில் விரைவில் துவக்கம்


ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் நான்கு இடங்களில், மலிவு விலையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும், "அம்மா உணவகம்' விரைவில் திறக்கப்படும், என துணை மேயர் பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் அத்யாவசிய பொருட்கள் விலையேற்றத்தால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களை தொடர்ந்து, சிறு நகரங்களிம் உணவு பொருட்களின் விலை உயர்ந்தது.

குறைந்த பட்ச விலையாக இட்லி, 5 ரூபாய்யும், சாப்பாடு, 40 ரூபாய், கலவை சாதங்கள், 22 ரூபாயாக அதிகரித்தது. பெரு நகரங்களில் விலை சொல்லவே முடியாத அளவுக்கு உயர்ந்தது.

பொதுமக்கள் நலன் கருதி, சென்னை மாநகரில் யாரும் எதிர்பாராத விலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாப்பாடு என குறைந்த விலையில் உணவு வழங்கிட, மாநகராட்சி மூலம் உணவகங்களை திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.

ஒரு மாத காலத்தில சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தமிழகத்தின் மற்றபிற மாநகராட்சிகளிலும் திறக்கப்படும், என பட்ஜெட்டில் அறிவித்தார். இதனை அடுத்து, ஈரோடு மாநகராட்சியில் முதற்கட்டமாக முதல்வரின் அம்மா உணவகம் நான்கு இடத்தில் திறக்க முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி துணைமேயர் பழனிச்சாமி கூறியதாவது,

தமிழக முதல்வர் உத்தரவுபடி, குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம், மாநகராட்சியில் மண்டலங்கள் தோறும் தலா ஒரு கடை திறக்கப்படும். சூரியம்பாளையம் முதல் மண்டலத்தில் ஆர்.என்.புதூரிலும், பெரியசேமூர் மண்டலத்தில் சூளை பகுதியிலும், சூரம்பட்டி மண்டலத்தில், காந்திஜி ரோடு தீயணைப்புத்துறை அலுவலகம் அருகிலும், காசிபாளையம் நான்காவது மண்டலத்தில் கொல்லம்பாளையம் ஆட்டோ ஸ்டாண்டிலும் உணவகம் திறக்கப்படும்.

மேற்கண்ட பகுதியில் விசைத்தறி, கூலித்தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால் இங்கு திறக்கப்படுகிறது.
தொடர்ந்து வார்டுகள் தோறும் உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
 

மாநகராட்சியில் சட்ட உதவி மையம் திறப்பு

Print PDF
தினகரன்         10.04.2013

மாநகராட்சியில் சட்ட உதவி மையம் திறப்பு


திருச்சி: திருச்சி மாநகராட்சியில் சட்ட உதவி மையத்தை முதன்மை நீதிபதி நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சட்டம் உதவி மையம் திறப்பு விழா மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் ஜெயா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதில் வேல் முருகன், உதவி மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில், சட்ட உதவி மையங்களை நாடி வரும் மக்கள் எவ்வித செலவின்றியும், இலவசமாக அவரது பிரச்னைகள் தீர வழி காணலாம். எவ்வித கட்டணமும், யாரிடமும் செலுத்த வேண்டிய தேவையில்லை. பொதுமக்கள் தேவையான சட்ட உதவி மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கும் மேலும் சட்டம் சாராத பிரச்சனைகளுக்கும் தீர்வு காண சட்ட உதவி மையங்களை நாடி பயன் பெறலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் நீதிபதி பாலராஜாமணிக்கம், சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் பார்த்தசாரதி, கூடுதல் நீதிபதிகள் சக்தி, ஜெயராஜ், மாநகராட்சி மேல் முறையீட்டு தீர்ப்பாய தலைவர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 


Page 208 of 841