Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வத்தலகுண்டு பேரூராட்சிக் கூட்டம்

Print PDF
தினமணி         01.04.2013

வத்தலகுண்டு பேரூராட்சிக் கூட்டம்


வத்தலகுண்டு பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் சுசிலா பாண்டியன் தலைமை வகித்தார். கவுன்சிலர் பாண்டியன்,  துணைத் தலைவர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் முருகேசன் வரவேற்றார்.   தனி ஈழம் அமைக்க, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
 

முறைப்படுத்தப்பட்ட காலனிகளில் சொத்து வரி வசூலிக்க கூடாது

Print PDF
தினமணி         31.03.2013

முறைப்படுத்தப்பட்ட காலனிகளில் சொத்து வரி வசூலிக்க கூடாது


"தலைநகரில் அண்மையில் முறைப்படுத்தப்பட்ட 895 காலனிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் வரை மாநகராட்சிகள் சொத்து வரி வசூலிக்க தில்லி பிரதேச அரசு அனுமதிக்காது'' என்று தில்லி முதல்வரின் பார்லிமெண்டரி செக்ரடரி முகேஷ் சர்மா தெரிவித்தார்.

அங்கீகாரமற்ற காலனிகள் கூட்டமைப்பு மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் குழு முகேஷ் சர்மாவை அவரது வீட்டில் சனிக்கிழமை சந்தித்தது.

முறைப்படுத்தப்பட்ட காலனிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து கவலை தெரிவித்த அவர்களிரிடம் இந்த உறுதியை முகேஷ் சர்மா அளித்தார். மேலும், பிந்தாபூர் பகுதியில் நடைபெற்ற கூட்டங்களில் இது தொடர்பாக முகேஷ் சர்மா மேலும் பேசியதாவது:

""தலைநகரில் அண்மையில் அங்கீகாரமற்ற 895 காலனிகளை தில்லிப் பிரதேச அரசு முறைப்படுத்தியது. இந்தக் காலனிகளில் தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் இன்னும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை. இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கும்வரை மாநகராட்சிகள் சொத்து வரி வசூலிக்க அனுமதிப்பதில்லை என்று தில்லிப் பிரதேச அரசு முடிவெடுத்திருக்கிறது.

மாநகராட்சிகளை ஆளும் பாஜக-வுக்கு முறைப்படுத்தப்பட்ட காலனிகள் மீது அக்கறை இல்லை. வீட்டு மனை வரைபடத்தை இறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதிலும் மாநகராட்சிகள் அக்கறை செலுத்தவில்லை. தில்லி பிரதேச அரசு வரைபட இறுதிக்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தது. ஆனால், இதை முடித்துக் கொடுப்பதில் மாநகராட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

எனினும், முறைப்படுத்தப்பட்ட காலனிகளில் தில்லி ஜல போர்டு, பொதுப்பணித் துறை, நீர்ப்பாசன, வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை மூலம் பல்வேறு பணிகளை தில்லி பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது'' என்றார் அவர்.
 

குப்பையில்லா நகரமாக உதகையை மாற்ற வலியுறுத்தல்

Print PDF
தினமணி         29.03.2013

குப்பையில்லா நகரமாக உதகையை மாற்ற வலியுறுத்தல்


உதகை நகரை குப்பையில்லா நகரமாக மாற்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென, நகர்மன்றக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

உதகை நகர்மன்றக் கூட்டம் தலைவர் சத்தியபாமா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் நடைபெற்ற விவாதம்:

ஏ.ரவி (திமுக): காந்தல் பகுதி உதகை நகரிலேயே அதிக அளவிலான மக்கள்தொகையை கொண்ட பகுதியாக இருந்தாலும், அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. குப்பைகள் கூட அகற்றப்படுவதில்லை.

சத்தியபாமா (நகர்மன்றத் தலைவர்): காந்தல் பகுதியில் பாதாளச் சாக்கடை அமைத்து நிரந்தர தீர்வு காண்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால திட்டம் என்பதால் நிறைவேற சிறிது காலமாகும். அதுவரை மாஸ் கிளீனிங் முறையில் குப்பைகள் அகற்றப்படும்.

கே.தம்பி இஸ்மாயில் (தேமுதிக): உதகை நகரப் பகுதியிலும் குப்பைகள்

அகற்றப்படுவதில்லை. இப்படியொரு நிலை இதுவரை இருந்ததில்லை.

ஜே.ரவிகுமார் (திமுக): உதகை நகர்மன்றத்தில் சுகாதார அலுவலர் பணியிடம் காலியாகி 6 மாதமாகியும் இதுவரை நிரப்பப்படவில்லை.

சத்தியபாமா: நகர்மன்ற ஆணையரே இப்பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது சீசன் நேரமாக உள்ளதால் புதிய அலுவலரை நியமிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

மாதவன் (அதிமுக): உதகையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் முறையாக பணிபுரியாததாலேயே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. நகர்மன்ற ஆணையரும் கண்டு கொள்வதில்லை. ஆட்சியர் அலுவலகம் எதிரே பல லட்ச ரூபாய் செலவழித்து நடைபாதை அமைத்தும், டைல்ஸ் கற்களைப் பதித்தும் புதுப்பிக்கப்பட்ட பகுதிகள், வாகன நிறுத்துமிடங்களாக மாறிவிட்டன. இதைத் தடுக்க கம்பி வேலி அமைக்க வேண்டும்.

சம்பத் (அதிமுக): நகரில் கடந்த 4 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 ஆவது குடிநீர் திட்டப் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

ராமமூர்த்தி (நகர்மன்ற பொறியாளர்): பார்சன்ஸ்வேலியிலிருந்து உதகைக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் வெள்ளிக்கிழமை முதல் குடிநீர் விநியோகம் சீராகும். 3 ஆவது குடிநீர் திட்டப் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும்.

கே.தம்பி இஸ்மாயில் (தேமுதிக): உதகை நகரில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளில் ஊழியர்கள் அக்கறையுடன் பணிபுரியாததால் சாக்கடைகளில் கழிவுகள் நிரம்பி அடைப்பு ஏற்படுகிறது.   கூட்டத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களை தொடர்ந்து 50 தீர்மானங்கள் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
 


Page 217 of 841