Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குரூப்–1 தேர்வில் வெற்றி பெற்றால் சொந்த மாநிலத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும் மாணவர்களுக்கு, கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

Print PDF
தினத்தந்தி                    28.03.2013

குரூப்–1 தேர்வில் வெற்றி பெற்றால் சொந்த மாநிலத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும் மாணவர்களுக்கு, கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை


குரூப்–1 தேர்வில் வெற்றி பெற்றால் சொந்த மாநிலத்திலேயே உயர்ந்த பதவி கிடைக்கும் என்று மாணவர்களுக்கு, கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா அறிவுரை கூறினார்.

சிவில் சர்வீசஸ் பயிற்சி

கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள உயர்கல்வி மையத்தில் இலவச சிவில் சர்வீசஸ் பயிற்சி பெறும் மாணவ–மாணவிகள் மற்றும் சிவில் சர்வீசஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப் பட்டு வருகிறது. இதில், சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புத்தகங்கள் தான் மனிதனுக்கு உற்ற துணைவனாக விளங்குகின்றன. இதன் மூலமே வாழ்க்கை பாடத் தை கற்றுக்கொண்டு, நம்முடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும். புத்தகங்கள் மூலமாக பரந்த அறிவை பெறுவதன் மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். நாம் பெற் றுள்ள அறிவை விட, மனநிலை மற்றும் எண்ண ஓட்டங்களே நம்முடைய வெற்றியை தீர்மானிக்கின்றன.

நேர்மறை எண்ணங்கள்

இதனால் மாணவர்கள் எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் மிக்கவர்களாக விளங்க வேண்டும். போட்டி தேர்வுகளில் தோல்வி அடையாமல் வெற்றி பெற முடியாது. சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது. ஏனெனில் தோல்விகள் தான் வாழ்க்கை பாடத்தை நமக்கு கற்றுத்தருகிறது.

கல்விதான் பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. பெண்களின் முன்னேற்றமே சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றம். மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சமுதாயத்தில் இருந்து களைய முடியும். ஆணும், பெண்ணும் சமம் என்பதை, ஆண்கள் குழந்தையாக இருக்கும் போதே ஏற்படுத்த வேண்டும்.

குரூப்–1 தேர்வு

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் குரூப்–1 தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் சொந்த மாநிலங்களில், உயர்ந்த பதவிகளில் பணியாற்ற முடியும். இதற்கு பள்ளி புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்களை நன்றாக படிக்க வேண்டும்.

செய்தித்தாள்களை படிப்பது, டி.வி.யில் செய்திகள் பார்ப்பதன் மூலம் மாணவர்கள் பொது அறிவு வளரும். கடின உழைப்பு, மனஉறுதி, நல்ல எண்ண ஓட்டங்கள் இருந்தால் தேர்வில் எளிமையாக வெற்றி பெற முடியும்.

இவ்வாறு ஆணையாளர் லதா கூறினார்.

மாற்றம் வேண்டும்

அதைத்தொடர்ந்து உயர்கல்வி மைய தலைவரும், அரசு கலைக்கல்லூரி பேராசியருமான கனகராஜ் பேசும் போது, சிவில் சர்வீசஸ் தேர்வில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு சர்ச்சை ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள தேர்வு முறை 34 ஆண்டுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. கால சூழ்நிலை மாறிவருகிறது. நாட்டின் தேவை, பொருளாதார நிலை மாறி உள்ளது. இதனால் சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் பிற்காலத்தில் மாற்றங்கள் வரும். அதற்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். புதிய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு படிப்பு மற்றும் தேர்வு அணுகுமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இலவச சிவில் சர்வீசஸ் பயிற்சி பெறும் மாணவ–மாணவிகள் 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உயர்கல்வி மையத்தை சேர்ந்த வசந்தகுமார் நன்றி கூறினார்.
 

"பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்க வேண்டும்'

Print PDF
தினமணி     28.03.2013

"பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்க வேண்டும்'

பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக நீலகிரியை உருவாக்க வேண்டும் என நீலகிரி ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பேசினார்.

1. புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழு சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக் குழுத் தலைவர் பசுவையா தலைமை வகித்தார். தொழிலதிபர் போஜராஜன் முன்னிலை வகித்தார். செயலரும், மாநில துணை தலைவருமான பி.ராஜன் வரவேற்றார்.

2. இதில், "பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் பேணல் சட்டம்-2007' என்ற புத்தகத்தை ஆட்சியர் வெளியிட, அதை முன்னாள் டி.எஸ்.பி. தர்மராஜ் பெற்றுக் கொண்டார். ஆட்சியர் பேசியது:பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக நீலகிரியை உருவாக்க வேண்டியது பொதுமக்களின் கடமை. சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாநிலத்திலேயே முதன்மை மாவட்டமாக நீலகிரியை மாற்ற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.÷நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு, கோத்தகிரி ஊராட்சித் தலைவர் மனோகரன், மாவட்ட போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன், மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

மாநகராட்சி கவுன்சிலர் செந்தில் அதிமுகவில் இருந்து நீக்கம்

Print PDF
தினகரன்     27.03.2013

மாநகராட்சி கவுன்சிலர் செந்தில் அதிமுகவில் இருந்து நீக்கம்


கோவை:  கோவை மாநகராட்சி 21வது வார்டு அதிமுக கவுன்சிலரான செந்தில்(38), மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் இருந்து வந்தார். இவரை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் இருந்ததாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கியதாலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செந்தில் நீக்கப்படுகிறார். அவரிடம், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது‘ எனக்கூறியுள்ளார்.

இனி, சுயேட்சை கவுன்சிலர்:

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் அதிமுக 80, திமுக 10, காங்கிரஸ் 3, பாரதிய ஜனதா 2, மதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், தமுமுக, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளில் தலா ஒரு கவுன்சிலர்கள் உள்ளனர். மாநகராட்சி வரலாற்றில் சுயேட்சை கவுன்சிலர்கள் இல்லாதது இதுவே முதல்முறை. தற்போது, செந்தில் நீக்கப்பட்டுள்ளதால் இனி இவர் சுயேட்சை கவுன்சிலராக அறிவிக்கப்படுவார்.
 


Page 218 of 841