Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

விவாதமின்றி 35 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Print PDF

தினமணி     02.03.2013

விவாதமின்றி 35 தீர்மானங்கள் நிறைவேற்றம்

வால்பாறையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் விவாதம் நடத்தப்படாமலேயே 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   நகராட்சி உறுப்பினர்களின் மாதாந்திரக் கூட்டம் மன்ற அரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தலைவர் சத்தியவாணிமுத்து தலைமை வகித்தார்.   ஆணையாளர் வெங்கடாசலம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

கணேசன் (வி.சிறுத்தைகள்): வால்பாறை ஸ்டேட் வங்கியில் வார்டு உறுப்பினர்கள் சென்றால் அவமதிக்கின்றனர். எனவே வங்கிக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும்.

வீரமணி (வி.சிறுத்தைகள்): வால்பாறை ஸ்டேட் வங்கியில் நகராட்சியின் மொத்த இருப்புத் தொகை எவ்வளவு என்பதை அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

சூரியபிரபா (திமுக): கூட்டுறவு காலனி ரேஷன் கடை முன் உள்ள தரைத் தளங்களை சீரமைக்க வேண்டும்.

செல்வம் (திமுக): முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் சென்றால், வட்டாட்சியர் அலுவலகத்தில் அதனைப் பெற மறுக்கின்றனர்.

சத்தியவாணிமுத்து (தலைவர்): அனைத்து வார்டு பகுதியைச் சேர்ந்தவர்களும் என்னிடம் கடிதம் அளித்தால் அதை பரிசீலனை செய்யப்படும்.

தனராஜ் (அதிமுக): கடந்த ஆட்சியில் நகராட்சி மூலமாக 2-ஆவது குடிநீர் திட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட ரூ. 2 கோடி 25 லட்சம் தொகைக்கு மேல், தற்போது மீண்டும் இந்த ஆட்சிக் காலத்தில் கூடுதல் தொகை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

சுதாகர் (திமுக): நகர்மன்றக் கூட்டத்தில் ஆட்சியைப் பற்றி பேசக்கூடாது.  இதையடுத்து திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 இந்நிலையில் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட 35 தீர்மானங்களும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.

 

நகராட்சி கூடுதல் கட்டடத்திற்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

Print PDF

தினமணி           01.03.2013

நகராட்சி கூடுதல் கட்டடத்திற்கு நிதி  ஒதுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

மேட்டுப்பாளையத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யுமாறு, உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நகர்மன்றத் தலைவர் டி.சதீஷ்குமார் அனுப்பிய மனுவின் விவரம்:

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பகுதி- 2, 2012-13ஆம் திட்டத்தின் கீழ், புதிய நகராட்சி அலுவலக கட்டடப் பணிக்கென அரசு சார்பில் ரூ. 50 லட்சமும், நகராட்சி நிதி சார்பில் ரூ. 50 லட்சமும் என ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணியை மே மாதத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டு, தற்போது அஸ்திவாரம் வரை முடிக்கப்பட்டு தரைத்தளம், ஆர்சிசி, கான்கிரீட் தூண்கள் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது ஒதுக்கப்பட்ட ரூ. ஒரு கோடி நிதியின் மூலம் தரைத்தளத்தில் நகராட்சி பகுதி அலுவலகக் கட்டடங்கள் மட்டுமே அமைக்க இயலும்.

புதிய அலுவலக கட்டடத்தில் முதல் தளத்தில் நகர்மன்றக் கூட்ட அரங்கமும் கூடுதல் அலுவலகப் பிரிவு கட்டடங்களும் கட்ட வேண்டியுள்ளது.

எனவே, ரூ. 1.45 கோடி மதிப்பில் மீண்டும் ஒரு மதிப்பீடு தயார் செய்து, சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் அலுவலகக் கட்டடத்தின் முக்கியத்துவம் கருதி, ரூ. 1.45 கோடி நிதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2013-14ஆம் ஆண்டிற்கான குடிநீர் வசதி (ரூ. 75.50 லட்சம்), சாலை மேம்பாடு (ரூ. 407.50 லட்சம்), திடக்கழிவு மேலாண்மை (ரூ. 82.50 லட்சம்), மழைநீர் வடிகால் (ரூ. 264.50 லட்சம்) என அத்யாவசியப் பணிகளுக்கென ரூ. 830 லட்சத்திற்கு திட்ட மதிப்பு தயார் செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நிலை நகராட்சியான மேட்டுப்பாளையம் நகராட்சி மக்களின் நன்மையையும், இந்நகராட்சியின் தற்போதைய மோசமான நிதி நிலைமையையும் கருத்திற்கொண்டு, இந்த திட்ட மதிப்பீட்டு நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு, மற்றொரு மனுவில் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு, நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் கோரியுள்ளார்.

Last Updated on Friday, 01 March 2013 10:43
 

திருச்செந்தூர் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF
தினமணி           01.03.2013

திருச்செந்தூர் பேரூராட்சிக் கூட்டம்


திருச்செந்தூர் பேரூராட்சியின் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சித் துணைத் தலைவர் தொ.ராஜநளா, உறுப்பினர்கள் ப.தா.கோட்டை மணிகண்டன், க.சுதா, மு.வடிவேல், அ.சண்முகசுந்தரம், ம.அரசு மீனா, செ.இசக்கியம்மாள், மு.காளிதாஸ், செ.சாந்தி, மு.சுப்புலட்சுமி, க.மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Last Updated on Friday, 01 March 2013 10:17
 


Page 227 of 841