Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காவிரி நடுவர் மன்ற ஆணையின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு மாநகராட்சி கூட்டத்தில் முதல்வரை பாராட்டி தீர்மானம்

Print PDF
தின மணி              26.02.2013

காவிரி நடுவர் மன்ற ஆணையின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு மாநகராட்சி கூட்டத்தில் முதல்வரை பாராட்டி தீர்மானம்

காவிரி நடுவர் மன்ற ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட போராடி வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு, திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேயர் அ.விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் சு.குணசேகரன், ஆணையர் செல்வராஜ், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேயர் வாசித்தார்.

அதன் விவரம்: 1991 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது. அதை ஏற்காமல் கர்நாடக அரசு சட்டப்பேரவையில் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் முடிவில், கர்நாடக அரசு கொண்டு வந்த சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை சட்ட ரீதியாக போராடி பெற்றுத் தந்தவர் முதல்வர் ஜெயலலிதா. இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தாவாவை விசாரிக்க நடுவர் மன்றத்தை அமைக்கிறபோது, அந்த நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கினாலும், இறுதித் தீர்ப்பை வழங்கினாலும் அதை செயல்படுத்த வேண்டுமென்றால் மத்திய அரசு அதனை அரசிதழில் வெளியிட வேண்டும்.

ஆனால், 1991-இல் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு தன்னுடைய அரசிதழில் வெளியிடவில்லை. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் வழக்கு தொடுத்தது. அதன் பின்னர் தான் 1991-ஆம் ஆண்டு டிசம்பரில் நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. அந்த இடைக்கால ஆணையை செயல்படுத்த மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் செய்யவில்லை.

இந்த அவலநிலையைக் கண்டித்து 1993-ஆம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் வாழ்நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த உண்ணாவிரதம் 4 நாள்கள் நீடித்தது.

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் வி.சி.சுக்லா சென்னைக்கு வந்து, இடைக்கால ஆணையை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்த பிறகு உண்ணாவிரதத்தை முதல்வர் கைவிட்டார்.

அதன்பின் உச்சநீதிமன்றத்தை அணுகி பல்வேறு வழக்குகளை தமிழக அரசு தொடுத்தது. அதன் விளைவாக தான் காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன.

ஆனால் கடந்த 9 ஆண்டு காலத்தில் ஒருநாளில் கூட காவிரி நதிநீர் ஆணையத்தினை மத்திய அரசு கூட்டவே இல்லை. 2011 ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர் காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசை பலமுறை வலியுறுத்தினார். இதற்கு செவி சாய்க்காததால் முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து 9 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப்பட்டது. இந்த தொடர்ச்சியான வரலாற்று நிகழ்வுகளுக்கு இடையில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. ஆனால், இந்த தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து,  2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுக்கும், மக்களுக்கும், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் எதிர்காலத்துக்கான உத்தரவாத பெற்றுத்தந்து, சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதாவை இம்மாமன்றம் பாராட்டுகிறது என்றார்.

துணை மேயர் சு.குணசேகரன், கவுன்சிலர்கள் க.மாரப்பன் (சிபிஎம்), தி.கல்யாணி (மதிமுக), எஸ்.ஆர். ஜெயகுமார் (அதிமுக) ஆகியோர் தீர்மானத்தை பாராட்டுப் பேசினர்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:56
 

பழனி நகராட்சியில் பல்வேறு இனங்கள் ஏலம்

Print PDF
தின மணி              26.02.2013

பழனி நகராட்சியில் பல்வேறு இனங்கள் ஏலம்

பழனி நகராட்சியில் திங்கள்கிழமை பல்வேறு இனங்கள் ஏலம் விடப்பட்டது.

பழனி நகராட்சியில் பேருந்து நிலையத்தில் உள்ள பல்வேறு இனங்களுக்கு புதிய மற்றும் மறு ஏலம் திங்கள்கிழமை விடப்பட்டது. நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன் ஏலத்துக்கு தலைமை வகித்தார்.  இதில் நகராட்சி பேருந்து நிலையத்தில் டிவி பெட்டிகள் வைத்து விளம்பரம் செய்யும் உரிமையை இந்துமதி என்பவர் ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும், சாமான்கள் பாதுகாக்கும் அறையை ஜோதி என்பவர் ஒரு லட்சத்துக்கு 35 ஆயிரத்துக்கும், எடை மிஷின் வைத்துக்கொள்ளும் உரிமத்தை நாராயணன் என்பவர் 18 ஆயிரத்து நூறுக்கும், கட்டண கழிப்பிடத்தை ஜோதி என்பவர் 12 லட்சத்து ஆறாயிரத்துக்கும், மற்றொரு கட்டண கழிப்பிடத்தை முருகன் என்பவர் 16 இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் எடுத்தனர்.  தவிர இடும்பன் இட்டேரி சாலையில் உள்ள வளாக கடையை திருச்செல்வம் என்பவர் இரண்டு லட்சத்து 31 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.  பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு நுழைவுச்சீட்டு கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கு யாரும் ஏலம் கோராததால் மறு ஏலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Last Updated on Tuesday, 26 February 2013 11:54
 

மாநகராட்சியில் ஓட்டுநர் பணியிடத்துக்கு பதிவுமூப்பு பரிந்துரை

Print PDF
தின மணி              26.02.2013

மாநகராட்சியில் ஓட்டுநர் பணியிடத்துக்கு பதிவுமூப்பு பரிந்துரை

மதுரை மாநகராட்சி ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் பணியிடத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள பதிவுமூப்பு விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்துக்கொள்ள இன்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பா.முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேற்படி ஓட்டுநர் பணியிடத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நாளது தேதிவரை புதுப்பித்துள்ள கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், 1.1.2013 ஆம் தேதி எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி.க்கு 35 வயதுக்குள்ளும், எம்.பி.சி., பி.சி., பி.சி. முஸ்லிம்களுக்கு 32 வயதுக்குள்ளும், ஓ.சி.க்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இப்பணிக்கு பரிந்துரை செய்யப்படவில்லை.

முன்னுரிமை அற்றவர்களில் எஸ்.சி. ஏ வகுப்பினருக்கு 29.1.2003, எஸ்.சி.  பொது வகுப்பினருக்கு 4.10.2011, எம்.பி.சி. வகுப்பினருக்கு 22.7.2010, பி.சி. முஸ்லிம்  வகுப்பினருக்கு 1.9.2008, பி.சி. பொது வகுப்பினருக்கு 5.1.2007, ஓ.சி. பொது  வகுப்பினருக்கு 5.7.2010 வரையிலும், முன்னுரிமை உள்ளவர்களுக்கு அனைத்து வகை முன்னுரிமை உள்ளவர் (அனைத்துப் பிரிவினர்) கலப்புத் திருமணச் சான்று பதிவுதாரர்கள் நீங்கலாக 17.1.2013 வரையிலும், பகிரங்கப் போட்டியாளர் முன்னுரிமை பிரிவில் மதுரை மாநகராட்சி எல்கைக்கு உட்பட்டு போதிய மனுதாரர்கள் இல்லாத காரணத்தினால், முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள மதுரை மாவட்ட பதிவுதாரர்களில், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தவர், மொழிப்போர் தியாகி, தமிழ்மொழிக் காவலர் 18.8.2011 பதிவுமூப்பு உடைய மனுதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்புக்குள்பட்ட,   வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, மாநகராட்சி எல்கைக்கு உள்பட்டு வசிக்கும் பதிவுதாரர்கள் மட்டும் அனைத்து கல்வி சான்றுகள்,  வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் குடும்ப  அட்டை நகல், முன்னுரிமை சான்றுடன் பிப்.26 ஆம் தேதி நேரில் வந்து பதிவுமூப்பினை சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் பெறப்படும் முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 26 February 2013 11:53
 


Page 231 of 841