Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பிறப்பு, இறப்பு சான்றிதழில் நேரம் குறிப்பிடப்படும்

Print PDF
தின மணி          23.02.2013

பிறப்பு, இறப்பு சான்றிதழில் நேரம் குறிப்பிடப்படும்

மாநகராட்சி மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கும்போது அதில் பிறந்த, இறந்த நேரம் குறிப்பது என மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேயர் பரிந்துரைப்படி, பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் மென்பொருளில் நேரம் குறிப்பிடும் வசதியை கணினி மையம் உருவாக்கியுள்ளது. எனவே பிறப்பு, இறப்பு நேரத்துடன் கூடிய சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கும் செய்யும் நடவடிக்கையை கணினி மையம் மேற்கொள்ள அனுமதி கோரி தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. அதிக உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Monday, 25 February 2013 11:21
 

மாநகராட்சி மலிவு விலை உணவகத்தின் பெயர் "அம்மா' உணவகம்

Print PDF
தின மணி          23.02.2013

மாநகராட்சி மலிவு விலை உணவகத்தின் பெயர் "அம்மா' உணவகம்

சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள மலிவு உணவகத்துக்கு "அம்மா' உணவகம் என்ற பெயரை வைப்பது தொடர்பான தீர்மானம் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மலிவு உணவகத்தின் பெயர் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் விவரம்: சென்னை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களை பிப்ரவரி 19-ம் தேதி முதல்வர் திறந்து வைத்தார்.

இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மலிவு விலை உணவகம் என்ற பெயரை "அம்மா' உணவகம் என்று மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, உணவகத்தின் பெயரை "அம்மா' உணவகம் என்று அரசின் அனுமதி பெற்று மாற்றுவதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு அனைத்து அதிமுக உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

முதல்வர் பிறந்த நாளில் 24 உணவகங்கள் திறப்பு: பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மேயர், முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று மேலும் 24 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும். மார்ச் மாத இறுதிக்குள் 200 வார்டுகளிலும் உணவகங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஒரு நாளைக்கு ரூ. 300 ஊதியம் வழங்கப்படுகிறது, என்றார்.

இப்போது 15 மண்டலங்களில் மொத்தம் 15 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Monday, 25 February 2013 11:18
 

தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் இடங்கள்

Print PDF
தின மணி           22.02.2013

தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் இடங்கள்

தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம், கைரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பணிக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் மற்றும் பொன்மலை கோட்ட அலுவலகங்களில் பிப். 22, 23, 24 ஆகிய மூன்று நாள்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் இந்த மூன்று நாள்களிலும் 1, 2, 3, 4 ஆகிய நான்கு வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். பொன்மலை கோட்ட அலுவலகத்தில் 30, 31, 34 ஆகிய மூன்று வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். ஏற்கெனவே தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது வீடுகளில் வழங்கப்பட்ட ரசீதுடன் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் போன்றவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

வெளியூரில் இருந்து திருச்சி இடம் பெயர்ந்துள்ள, இதுவரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இடம்பெறாதவர்கள் புகைப்படம் எடுக்கும் இடங்களிலேயே படிவங்களை வாங்கி நிரப்பி வருவாய் உதவியாளர்களிடம் அளிக்கலாம்.
Last Updated on Friday, 22 February 2013 12:00
 


Page 233 of 841