Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நீலகிரி வறட்சி மாவட்டமாக அறிவிப்பு:கோத்தகிரி பேரூராட்சிக் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி

Print PDF
தின மணி           22.02.2013

நீலகிரி வறட்சி மாவட்டமாக அறிவிப்பு:கோத்தகிரி பேரூராட்சிக் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் வறட்சி மாவட்டமாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து, கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோத்தகிரி பேரூராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்துக்கு தலைவர் சை.வாப்பு தலைமை வகித்தார். பேரூராட்சிச் செயலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீலகிரியை வறட்சி மாவட்டமாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கோத்தகிரி பேரூராட்சியில் சிசிடிவி யூனிட் வைக்கப்படும். நடப்பாண்டுக்கு தேவையான தெருவிளக்கு உபகரணங்கள், குடிநீர் உதிரி பாகங்கள், பொது சுகாதார பொருள்களை ஆட்சியரின் ஒப்புதல் பெற்று, கொள்முதல் செய்யப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின்கீழ் தவிட்டுமேடு பகுதியில் நடைபாதை அமைக்கப்படும். மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத் தின்கீழ் காந்தி மைதானத்தில் கழிப்பிடம் அமைக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரவணன், ஜாபர், கனகராஜ்,மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சுந்தரிநேரு நன்றி கூறினார்.

Last Updated on Friday, 22 February 2013 11:58
 

தேசிய அட்டை வழங்க கணக்கெடுப்பு

Print PDF
தின மணி           22.02.2013

தேசிய அட்டை வழங்க கணக்கெடுப்பு

கடலூர் நகரில் புதிதாக வந்தவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து நகர்மன்ற ஆணையர்(பொறுப்பு) ரவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூர் நகரில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை கொண்டு தேசிய அட்டை வழங்குவதற்காக முதல் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் விடுபட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக கடலூர் நகருக்கு புதிதாகக் குடிவந்தவர்களை கணக்கெடுப்பு செய்ய வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் தங்கள் வீடு தேடி வரும்போது அவர்களுக்கு பொதுமக்கள் சரியான விவரங்களைத் தெரிவித்து அடையாள அட்டை வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 22 February 2013 11:51
 

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

Print PDF
தின மணி                            22.02.2013

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

சென்னை மாநகராட்சியின் மன்றக்கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.22) ரிப்பன் கட்டடத்தில் நடைபெறுகிறது.

மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்துக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறும் மன்றக் கூட்டத்தின்போது, நிலுவையில் உள்ள தீர்மானங்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் சாலை வசதி, மழைநீர் வடிகால் பணிகள், கொசு ஒழிப்பு, குப்பை உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
Last Updated on Friday, 22 February 2013 11:47
 


Page 234 of 841