Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தில்லி மாநகராட்சிகள் சார்பில் 98 பேருக்கு நல்லாசிரியர் விருது

Print PDF
தினமணி                    06.09.2012

தில்லி மாநகராட்சிகள் சார்பில் 98 பேருக்கு நல்லாசிரியர் விருது

புது தில்லி, செப். 5: தில்லியில் மூன்று மாநகராட்சிகள் சார்பில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைக் கூறி மாணவர்கள் ஆசி பெற்றனர்.

வடக்கு தில்லி மாநகராட்சி: டாக்டர் ஷ்யாம பிரசாத் முகர்ஜி-சிவிக் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு தில்லி மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் 40 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வடக்கு தில்லி மேயர் மீரா அகர்வால் வழங்கினார். விருதில் பாராட்டுப் பத்திரமும், ரூ. 7,000 ரொக்கமும் அடங்கும்.

விருது பெற்றோர் விவரம்:

ஆர்.டி. சர்மா (தலைமை ஆசிரியர்-ரித்தாலா), சுதா சர்மா (தலைமை ஆசிரியை-ரோகிணி, 15வது செக்டர்), சாஹினா நிகர் (தலைமை ஆசிரியை-முஃப்தி வாலா), பல்ராஜ் பரத்வாஜ் (தலைமை ஆசிரியர்-ஈஸ்வர் காலனி), பிரேம் சந்த் குப்தா (தலைமை ஆசிரியர்-சந்த் நகர்), வீரேந்தர் சிங் (தலைமை ஆசிரியர்-பெஹலாத்பூர்), தேவி லேகா (தலைமை ஆசிரியை-மங்கோல்பூர் கலன்), அஞ்சு பாட்டியா (தலைமை ஆசிரியை-மோதி நகர்), சந்தேர் கலி (தலைமை ஆசிரியர்-7வது  செக்டர், ரோகிணி).

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்: கிஷன் தாஹியா (பங்கேர்), ரேணு (பானா உத்யான்), முக்தா தாஹியா (பீதம்புரா), ஜோஸ்தானா குப்தா (ராம் நகர்), சுஷ்மா வர்மா (ஈத்கா ரோடு), ரஜ்னி சர்மா (ஷாலிமார் பாக்), மகாவீர் பிரசாத் ( ரோஹினி), நர்வதா சோனி (ஜாவ்லாபுரி), ரஞ்சனா (முல்தானி தண்டா), சுரேந்தர் சிங் (சராய் பீபல் தலா), தர்ஷணா குமாரி (ஸ்வரூப் நகர்), நீரு மாலிக் ( பீதம்புரா), கமலேஷ் (ரோகிணி, 7வது செக்டர்), சுமித் சானி (பூசா கேம்பஸ்), சுதா சர்மா (கிழக்கு மோதி நகர்), வீணா பஜாஜ் (விஜய் நகர்), கமலேஷ் (ராமேஷ்வர் நகர்), சஷி (16வது செக்டர், ரோகிணி), சுனிதா ராணி (நாராயணா), உரூசா (முஃதி வாலா), விஜய் பால் சிங் (இந்தர்புரி), நிர்மலா (5வது செக்டர் - ரோகிணி), சந்த் பீபி (கம்பா), இந்திராணி (நபி கரீம்), மது மகீஜா (மோகன் பார்க்), மஞ்சு (நியூ தேவ் நகர்), மது கெüசிக் (ஹைதர்பூர்), பாரத் பூஷன் லால் (ஷாலிமார் பாக்), சந்தோஷ் ராணா (சப்த் டெய்ரி), மோனிகா கல்ரா (முகர்ஜி பார்க்).

விருது பெற்றவர்களில் ஒன்பது தலைமை ஆசிரியர்களும், 28 பொதுப் பாட ஆசிரியர்களும், ஒரு சிறப்பு ஆசிரியரும், இரண்டு நர்சரி ஆசிரியர்களும் அடங்குவர்.

கிழக்கு தில்லி மாநகராட்சி:  உத்யோக் சதனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு தில்லி மாநகராட்சி பள்ளிகளின் 25 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை  மேயர் அன்னபூர்ணா மிஸ்ரா விருதுகளை வழங்கினார். விருது பெற்றவர்களில் ஐந்து தலைமை ஆசிரியர்களும், 18 பொதுப் பாட ஆசிரியர்களும், ஒரு நர்சரி ஆசிரியரும், இசை ஆசிரியர் ஒருவரும் அடங்குவர்.

தெற்கு தில்லி மாநகராட்சி:

தெற்கு தில்லி மாநகராட்சி சார்பில் 33 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பீஷ்ம பிதாமக் மார்கில் ஸ்ரீ சத்யசாயி சர்வதேச மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு தில்லி மேயர் சவீதாகுப்தா விருதுகளை வழங்கினார்.

தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளின் நான்கு தலைமையாசிரியர்கள், 26 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், 2 நர்சரி பள்ளி ஆசிரியர்கள், ஒரு சிறப்புப் பயிற்சி ஆசிரியர் ஆகியோர் விருதுகளைப் பெற்றனர்.

விழாவில் துணை மேயர் வீர் சிங், நிலைக்குழுத் தலைவர் ராஜேஷ் கெலாட், அவைத் தலைவர் சுபாஷ் ஆர்யா, எதிர்க்கட்சித் தலைவர் ஃபர்ஹாத் சூரி, தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கல்விக் குழுத் தலைவர் சதீஷ் உபாத்யாய தலைமை வகித்தார். விழாவையொட்டி மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

மாநகரை சுகாதாரமாக பராமரிக்க வாய்ப்பு செப்.,15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Print PDF

தினமலர்          05.09.2012

மாநகரை சுகாதாரமாக பராமரிக்க வாய்ப்பு செப்.,15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி: திருச்சி மாநகராட்சியை சுகாதாரமாக பராமரிக்க தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் பங்கேற்க மாநகராட்சி கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளையும் பாரபட்சமில்லாமல் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை.மாநகர மக்கள் நலன் கருதி மாநகராட்சி குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலை வசதி, மழைநீர் வடிகால், புதை வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற பணிகளில் மக்கள் பங்கேற்புடன் செய்வது சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கும்.வரலாற்று சிறப்புமிக்க இம்மாநகரத்தை சிறப்பாக பராமரித்திட தன்னார்வம் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் செயலாற்றுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

எனவே, இம்மாநகர எல்லைக்குள் உள்ள 65 வார்டுகளில் இயங்கி வரும் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத குடியிருப்போர் நலச்சங்கங்கள், ஆண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பதிவுபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகள், மாநகராட்சி மூலம் பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்த உத்தேசித்துள்ள பல்வேறு மக்கள் நலன் கருதும் திட்டங்களுக்கு சிறந்த முறையில் தங்களை இணைத்துக் கொண்டு பங்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதுபோல பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர்களை செப்டம்பர் 15ம் தேதிக்குள், அந்தந்த பகுதிக்கான கோட்ட அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குதல், திடக்கழிவுகளை ஆரம்ப நிலையில் பிரித்து ஒப்படைத்தல், உள்ளூரில் இயங்கி வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களை மக்களின் பல்வேறு சேவை பணிகளுக்கு பயன்படுத்துதல், கால்நடைகளை கட்டுப்படுத்துதல், நகர்புற காடுகள் வளர்ப்பு, பூங்காக்கள் உருவாக்குதல், சமூக காவல் பணி, வார்டுகளை அழகுபடுத்தும் பணிகள் போன்ற பல்வேறு பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைத்து செயல்பட நலச்சங்கங்களின் பங்கேற்பும், வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.
 

மறைமலை நகர் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

Print PDF

தினமலர்       04.09.2012

மறைமலை நகர் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

மறைமலை நகர் : மறைமலை நகர் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைமலை நகர் நகராட்சி ஆணையர் லட்சுமி, இரண்டு மாதங்களுக்கு முன் பதவி உயர்வு பெற்று, செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகப் பொறுப்பேற்றார்.தாம்பரம் நகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம், கூடுதல் பொறுப்பாக, மறைமலை நகர் நகராட்சியை கவனித்து வந்தார். தற்போது சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டல அலுவலராகப் பணிபுரிந்த மனோகர், மறைமலை நகர் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
Last Updated on Wednesday, 05 September 2012 07:48
 


Page 237 of 841