தினகரன் 31.08.2012
மின்சாரம் தயாரிக்கும் வகையில் நவீன முறையில் குப்பைகள் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றுவதில் நவீன தொழில்நுடபத்தை செயலாக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல், எரிசக்தி பொருள் தயாரித்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நகரங்களில் சுகாதாரமற்ற நகரங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது திருப்பூர் மாநகரம்.குப்பை பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி போடும் அனைத்து திட்டங்களும், தோல்வியில் தான் முடிந்துள்ளன.இடுவாயில் நவீன குப்பை கிடங்கு செயல்படுத்தப்படும் என்றும், உரத்தொழிற்சாலை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் என்றும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால், இத்திட்டங்கள் செயல்வடிவம் பெறவில்லை. மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற இடுவாய் உரக்கிடங்கு திட்டத்துக்கான முதல்கட்ட பணிகள் கூட இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை.
மாநகரின் குப்பை பிரச்னைக்கு தனியார் நிறுவன பங்களிப்புடன் தீர்வு காண உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இந்த திட்டமும் செயல்வடிவம் பெற முடியவில்லை. ஏற்கனவே, பழைய மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டவே இடமில்லாத நிலையில், தற்போது ஒருங்கிணைந்த மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளின் குப்பைகளை எப்படி அள்ளுவது, எங்கு கொட்டுவது என தெரியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. மாநகராட்சி பகுதியில் தின மும் 500 மெட்ரிக் டன்னுக்கும் குறையாமல் குப்¬ பகள் கொட்டப்படும் என கூறப்படும் நிலையில், அவற்றை அள்ள போதிய வாகனங்கள் இல்லாதது, குப்பைகளை கொட்ட கிடங்கு இல்லாதது; போதிய ஊழியர்கள் இல்லாதது என மிக மோசமான கட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி இருந்து வருகிறது.
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ள நிலையில், துப்புரவு தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. குறைந்தபட்சமாக 2 ஆயிரம் பேர் தேவைப்படும் திருப்பூர் மாநகராட்சியில், ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் கூட இல்லை. போதிய அளவு குப்பைத் தொட்டிகளோ, அதை எடுத்து வர போதிய அளவு வாகன வசதிகளோ இல்லை. 50 சதவீதத்துக்கும் குறைவான வாகனங்கள் தான் உள்ளன.
இந்நிலையில், மாநகரின் குப்பை பிரச்னைக்கு, நவீன தொழில்நுட்பத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஈரமான குப்பைகள், உலர்ந்த குப்பைகள், மக்காத குப்பைகள், பயனற்ற குப்பைகள் என 4 ஆக பிரித்து அதில் இருந்து மின்சாரம், எரிபொருள், பிளாஸ்டிக் மறுபயன்பாடு தயாரிக்கும் வகையில் நவீன திட்டங்களை திருப்பூரில் செயலாக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் கூறுகையில், ‘திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னைக்கு நவீன முறையில் தீர்வு காண அரசு அறிவுறுத்தியுள்ளது