Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Print PDF

தினகரன்             04.02.2014

மாநகராட்சியில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருச்சி, - திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.  

இதில் சாலை மேம் பாடு, ஆக்கிரமிப்பு அகற் றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழிவறை மற்றும் பூங்காக் கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர் பாக 10 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடை யூறாக சாலை மற்றும் முக் கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பழுதடைந்த தெரு விளக்குகளை விரைந்து பழுது நீக்கம் செய்யவும், பொதுமக்களி டம் பெறப் படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு முழு மையான நடவடிக்கை எடுப்பதோடு, இதுகுறித்து மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என் றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார். கூட்டத்தில், துணை மேயர் மரியம் ஆசிக் மீரா, நகரப் பொறி யாளர் சந்தி ரன், நகர்நல அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

சுரண்டை பேரூராட்சியில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினகரன்             03.02.2014

சுரண்டை பேரூராட்சியில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

சுரண்டை, : சுரண்டை பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல் பாடு மற்றும் பொது சுகா தாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ஜெயராணிவள்ளி முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனி நாடார் முன்னிலை வகித் தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா வரவேற்றார்.

முகாமில் செயல் அலுவலர் பொன்னம்பலம் கலந்து கொண்டு பேசுகை யில், ‘சுரண்டை பேரூராட்சி பகுதியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய  மற்றும் மாநில அரசுகள் மானியத்துடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனி நபர் குழுக் கடன், சுழல் நிதி விரைவில் வழங்கப்படும். தனிநபர் கழிப்பிடம் அவசியம். பொது சுகாதாரத்தை பெரியோர், சிறியோர் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார். பின்னர் அவர் பொது சுகாதார விழிப்புணர்வு நோட்டீசை பொது மக்களிடம் வழங்கினார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், வசந்தா, செல்வி, கண்ணன், செல்வன், அருணாசலக்கனி, கல்பனா, சமுத்திரக்கனி, சங்கரா தேவி, இந்திரா, மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பொன்னுத்தாய், ஜீவக்கனி, சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலைப் போட்டிகள் பரிசளிப்பு

Print PDF

தினகரன்                03.02.2014

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலைப் போட்டிகள் பரிசளிப்பு

புதுக்கோட்டை,: புதுக் கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் மற் றும் போஸ் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி இணைந்து குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி களை நடத்தியது.

இப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கண்ணன், பள்ளி நிர்வாக தலைவி மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  ஓவியப் போட்டிகளில் ஹரிஹரன், அருண்குமார், அனுபாரதி ஆகி யோர் முதல் பரிசையும், சஞ்சய்குமார், துளசிவர்மா, ஆரோன் மோசே ஆகி யோர் 2ம் பரிசுகளையும், சிந்திகா, சந்தோஷ், தீபிகா ஆகியோர் 3ம் பரிசுகளை யும் பெற்றனர். 

பேச்சுப் போட்டிகளில் தனசேகர், துளசிவர்மா, கமலி ஆகி யோர் முதல் பரிசையும்,  சிந்திகா, அஸ்வினி, இஸ்மத்நூன் ஆகியோர் 2ம் பரிசுகளையும், ஜெய்கு மார், ரூபாசக்தி, மனோஜ் குமார் ஆகியோர் 3ம் பரிசுகளை யும்,  கட்டுரைப்போட்டிகளில் பானு பிரபா, ஆசிகா பேகம், அனுபாரதி ஆகி யோர் முதல் பரிசையும், ஹரிஹரன், துளசிவர்மா, கமலி இரண்டாம் பரிசை யும், நந்தினி, அருண்குமார், சந்துரு ஆகியோர் 3ம் பரிசையும் பெற்றனர்.

விழா வில் புத்தா மார்சியல் ஆர்ட் ஸ் நிறுவனர் சேது கார்த்திகேயன், பேலஸ் சிட்டி செயலாளர் இதயதுல்லா, ஒருங்கிணைப் பாளர் நவநீதகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர்கள், ஆசிரியைகள் உமாதேவி, மகேஸ் வரி, கீதா, மாணவ, மாண விகள், பெற் றோர் உள்பட பலர் கலந்து கொண் டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் லதா, சிவ ராணி, பேலஸ் சிட்டி ரோட் டரி சங்கத்தினர் செய்திருந்தனர். முன்ன தாக தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். ஆசிரியை அமிர்தகொடி நன்றி கூறினார்.

 


Page 25 of 841