Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் முடிவு

Print PDF

தினமலர்      27.08.2012

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் முடிவு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை பராமரிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும், 23 ஆயிரத்து 531 தெருவிளக்குகள் உள்ளன. பழைய மாநகராட்சி எல்லையில் இருந்த 12 ஆயிரத்து 418 தெருவிளக்குகள், கடந்த சில ஆண்டுகளாக தனியார் பராமரிப்பில் உள்ளன.மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 11 ஆயிரத்து 113 தெருவிளக்குகளை, மாநகராட்சி நிர்வாகமே பராமரித்து வருகிறது. போதுமான தொழில்நுட்ப பணியாளர்கள் கைவசம் இல்லாத நிலையில், தெருவிளக்கு பராமரிப்பு பணி நான்கு மண்டலங்களிலும் முறையில்லாமல் நடந்து வருகிறது.நடப்பு நிதியாண்டு துவக்கத்தில், தனியார், அரசு கூட்டு ஒப்பந்தத்தில் தெருவிளக்கு பராமரிப்பை கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு செய்யும்போது, மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ஒன்பது கோடி ரூபாய் அளவுக்கு சேமிப்பு உருவாகும். தனியார் பராமரிப்பு, நவீன மின்சார உபகரணங்கள், தெருவிளக்கு தானியங்கி கருவிகள் உட்பட, அரசு - தனியார் கூட்டு ஒப்பந்தத்துக்கான கருத்துரு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தெருவிளக்கு பராமரிப்பை தொடர முடியாமல், புதிய பகுதிகளில் உள்ள 11 ஆயிரத்து 113 தெரு விளக்குகளையும், தனியார் பராமரிப்பில் விட மாநகராட்சி உத்தேசித்துள்ளது. அதற்கான செலவு தொகையாக, ஆண்டுக்கு 39.75 லட்சம் ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநகராட்சியில், 23 ஆயிரத்து 531 தெருவிளக்குகள் உள்ளன. அவற்றில், 12 ஆயிரத்து 418 விளக்குகள் தனியார் பராமரிப்பிலும், 11 ஆயிரத்து 113 விளக்குகள் மாநகராட்சி பராமரிப்பிலும் உள்ளன. அரசு, தனியார் கூட்டு ஒப்பந்தம் முறையாக நிறைவேற, ஆறு மாத அவகாசம் தேவை. மின்சேமிப்பு தெருவிளக்கு பராமரிப்பு தொழில்நுட்பத்தை அமல்படுத்த 10 மாத அவகாசம் தேவை.தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாததால், அவ்வளவு நாட்களுக்கு மாநகராட்சியால் தெருவிளக்குகளை பராமரிக்க இயலாது. எனவே, அரசு, தனியார் கூட்டு ஒப்பந்தம் நிறைவேறும் வரை, அனைத்து தெருவிளக்குகளையும், தனியார் பராமரிப்பில் ஒப்படைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 11 ஆயிரத்து 113 விளக்குகளும் ஒராண்டு பராமரிப்புக்காக, தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன, என்றார்.
 

பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்      25.08.2012

பேரூராட்சி கூட்டம்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம், தலைவர் பால்பாண்டியன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களை பராமரிப்பதற்காக, ஆகஸ்ட் 3ல் நடந்த பொது ஏலம் தொடர்பாக விவாதம் நடந்தது.

ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,தங்கதமிழ்செல்வன் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, கழிப்பிட பராமரிப்புக்காக நடந்த பொது ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. 18 வார்டுகளிலும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

‘மக்களை தேடி மாநகராட்சி’ இரண்டு மண்டலங்களில் இன்று குறைதீர்ப்பு முகாம்

Print PDF

தினகரன்                      24.08.2012

‘மக்களை தேடி மாநகராட்சி’ இரண்டு மண்டலங்களில் இன்று குறைதீர்ப்பு முகாம்

மதுரை, : மாநகராட்சி சார்பில் இரு மண்டலங்களில் இன்று குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

மதுரை மாநகராட்சி சார்பில் மக்களைத் தேடி மாநகராட்சி என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வார்டுகளுக்குச் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுப்பார்கள். இதன்படி மண்டல எண் - 1 (மேற்கு ) 11 முதல் 15 வரையிலும் மற்றும் 20ம் வார்டுகளுக்கு ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் 7வது தெருவிலும், மண்டலம் - 2 (வடக்கு) 24, 25, 26, 48 ஆகிய ஐந்து வார்டுகளுக்கு நாகனாகுளம் வார்டு அலுவலகத்திலும் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

இந்த முகாமில் சொத்துவரி, பெயர் மாற்றம், பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள், கட்டிட வரைபட அனுமதி, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, புதிய வரி விதிப்பு, பொட்டல் வரி, தெருவிளக்குகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு செய்யப்படும். நிகழ்ச்சியில் மேயர், துணைமேயர், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற உள்ளனர். பொதுமக்கள் தங்கள் குறைகளை இம்முகாமில் தெரிவித்து பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

Last Updated on Friday, 24 August 2012 11:12
 


Page 242 of 841