Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வணிக நிறுவனங்களில் நிலுவை வரி வசூலிக்க மேட்டூர் நகராட்சி தீவிரம்

Print PDF

தினமலர்              22.08.2012

வணிக நிறுவனங்களில் நிலுவை வரி வசூலிக்க மேட்டூர் நகராட்சி தீவிரம்

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி வணிக நிறுவனங்கள் சொத்துவரி குறைப்படாதததால், 18 லட்சம் ரூபாய் வரை வரி நிலுவையில் உள்ளது. நிலுவை சொத்து வரி வசூலிக்க நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேட்டூர் நகராட்சியில் கடை, ஹோட்டல் உள்பட, 800க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். இரு ஆண்டுக்கு முன் நகராட்சி நிர்வாகம் வர்த்தக நிறுவனங்களுக்கான வரி வசூலை, 150 சதவீதம் உயர்த்தியது.திடீரென சொத்துவரியை, 150 சதவீதம் உயர்த்தியதற்கு வர்த்தகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இதை எதிர்த்து வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனினும், சொத்துவரியை உள்ளாட்சி நிர்வாகமே முடிவு செய்யலாம் என, நீதிமன்றம் கூறி விட்டது.அதை தொடர்ந்து உயர்த்தப்பட்ட சொத்துவரி சதவீதத்தை குறைக்ககோரி வர்த்தகர்கள் நகராட்சியில் கோரிக்கை விடுத்தனர். சொத்துவரி சதவீதம் குறைக்க வேண்டும் என, எழுந்த கோரிக்கையால், வர்த்தகர்கள் பலர் சொத்துவரி செலுத்தவில்லை. இதனால், மேட்டூர் நகராட்சிக்கு, 18 லட்சம் ரூபாய் வரை வர்த்த நிறுவனங்கள் வரி சொத்துவரி வசூலாகாமல் நிலுவையில் உள்ளது.வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று, 150 சதவீதம் உயர்த்தப்பட்ட வரியை, 110 சதவீதமாக குறைக்க நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அனுமதியை நகராட்சி நிர்வாக ஆணையம் வழங்கியவுடன் நிலுவை சொத்துவரியை முழுமையாக வசூலிக்க மேட்டூர் நகராட்சி முடிவு செய்துள்ளது.

 

மரக்காணம் கோவில் குளம் ரூ. 20 லட்சத்தில் சீரமைப்பு

Print PDF

தினமலர்              22.08.2012

மரக்காணம் கோவில் குளம் ரூ. 20 லட்சத்தில் சீரமைப்பு

மரக்காணம் : மரக்காணம் திரவுபதியம்மன் கோவில் குளம் 20 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படுகிறது.மரக்காணம் திரவுபதியம்மன் கோவில் குளத்தை சீரமைத்திட கடந்த ஆட்சியின்போது 14 லட்சம் ரூபாய் நிதியை பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. அதற்கான டெண்டர் விடப்பட்டு, குளத்தின் உள்பகுதியை சுற்றிலும் கான்கிரீட் அமைத்தனர். அடுத்த சில மாதங்களில் கான்கிரீட் உள்வாங்கியதால் பணியை சரியான முறையில் முடிக்கவில்லை.ஆனால் பணிகள் நிறைவடைந்ததாக அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. தற்போதுள்ள பேரூராட்சி தலைவர் குளத்தை அழகுபடுத்த அரசுக்கு பரிந்துரை செய்ததின் பேரில் மீண்டும் அரசு 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.குளத்தை சுற்றி கான்கிரீட் மற்றும் கருங்கல் பொருத்தும் பணியை பேரூராட்சி தலைவர் சேகர், இளநிலை பொறியாளர் அருண் நேரில் பார்வையிட்டனர். பணிகளை துரிதப்படுத்துமாறு பேரூராட்சி தலைவர் சேகர் அறிவுறுத்தினார்.

Last Updated on Wednesday, 22 August 2012 06:22
 

தஞ்சை கலெக்டர், நகராட்சி தலைவர்தலைமையில் நல்லிணக்க உறுதியேற்பு

Print PDF

தினமலர்                       21.08.2012

தஞ்சை கலெக்டர், நகராட்சி தலைவர்தலைமையில் நல்லிணக்க உறுதியேற்பு

தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலக வளாகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியை அதிகாரிகள், அலுவலர்கள் எடுத்தனர்.மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்தநாளான ஆகஸ்ட் 20ம் தேதி நல்லிணக்க நாளாக அனுசரித்து, உறுதிமொழி ஏற்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில், நல்லிணக்க நாள் உறுதிமொழியை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.இதையொட்டி ராஜீவ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், கலெக்டர் உதவியாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மதிவாணன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பரமசிவம், தாசில்தார் முருகதாஸ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.இதேபோல் தஞ்சை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நகராட்சி தலைவர் சாவித்திரி தலைமை வகித்து, நல்லிணக்க உறுதிமொழியை வாசிக்க, கவுன்சிலர்கள், அலுவலர்கள் நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நகராட்சி கமிஷனர் ஜானகி, கவுன்சிலர்கள் சரவணன், சிவக்குமார், பாலசுப்பிரமணியன், காயத்ரி, அமுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 245 of 841