Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ரூ. 13.50 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டருக்கு பூஜை

Print PDF

தினமணி                                 02.08.2012

ரூ. 13.50 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டருக்கு பூஜை

செங்கல்பட்டு, ஆக 1: செங்கல்பட்டில் குடிநீர் தட்டுபாட்டை போக்கும் வகையில் நகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட ரூ.13.50 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டருக்கு செவ்வாய்க்கிழமை பூஜை நடைபெற்றது.  நகரமன்ற தலைவர் அன்புச்செல்வன் பூஜை நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.  நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புராஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.பூஜையில் தேங்காய், எலுமிச்சை ஆகியவற்றைக் கொண்டு இயல்பான பூஜையும், கோழியை வெட்டி காவுக் கொடுக்கும் பூஜையும் நடைபெற்றது.

 

கோவில்பட்டியில் நகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர்   02.08.2012

கோவில்பட்டியில் நகராட்சி கூட்டம்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சியில் அவசரக்கூட்டம் நடந்தது. இதில் வழக்கம் போல் அடிப்படை வசதிகள் இல்லையென கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி பேசினர்.
கோவில்பட்டி நகராட்சியின் அவசரக்கூட்டம் முன்றைய தினம் நடந்தது. கோ வில்பட்டி நகராட்சி கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் ஜான்சிராணி சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்

. துணை சேர்மன் ராமர், கமிஷ்னர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வரும் ஆக.23ந்தேதி கோவில்பட்டி இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்கு டெண்டர் விடப்படுவதாக சேர்மன் அறிவித்து கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதையடுத்து கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது. இதில் திமுக கவுன்சிலர் கருணாநிதி பேசும்போது, அவசரக்கூட்டம் என திடீரென அறிவிக்க இருக்கும் விதிமுறைகள் என்ன, இக்கூட்டம் குறித்த பொருட் குறிப்புகள் எப்போது எழுதப்படும், கவுன்சிலர்கள் எப்படி தெரிந்து கொள்வது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் நகராட்சி கட்டடம் புதியதாக கட்டப்படுவதாக சென்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது, ஆனால் இருக்கின்ற கட்டடத்தை இடித்து புதுப்பித்து கட்டப்போவதாக தற்போது தெரிய வருகிறது. ஆகவே கூட்டத்தில் அறிவிக்கும் அறிவுப்புகளை தெளிவாக புரியும்படி அறிவிக்க வேண்டுமென பேசினார். திமுக கவுன்சிலர் நாகராஜ் பேசும்போது கோவில்பட்டி பகவத்சிங் தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிமெண்ட் ரோடு போடப்பட்டது. தற்போது அதன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்காக சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் திட்டம் என்னவானது என்று தெரிய வில்லை என்பதால் பகவத்சிங் தெருவில் ரோடு வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். மற்றொரு திமுக கவுன்சிலர் தவமணி பேசும்போது கோவில்பட்டியில் மூன்று குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மலைப்பகுதிக்கு மட்டும் மாதம் மூன்றுமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

நகரின் மற்ற இடங்களுக்கு இரண்டு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. எனவே கோவில்பட்டி நகராட்சி முழுவதும் ஒரே மாதிரியான குடிநீர் விநியோக முறையை கொண்டு வர வேண்டும் என்றார். இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென கமிஷ்னர் வரதராஜன் தெரிவித்தார். பாமக கவுன்சிலர் மாரியப்பன் பேசும்போது, வார்டுகளில் தெருவிளக்கு எரியவில்லை, பழுதாகி இருக்கும் விளக்குகளை சரிசெய்ய போதுமான ஊழியர்கள் இல்லையென்பதால், பற்றாக்குறை உள்ள ஊழியர்களை நியமனம் செய்து தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திமுக கவுன்சிலர் ஏஞ்சலா பேசும்போது ஜோதிநகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. இப்பகுதிகளில் தெருவிளக்கு, வாறுகால், ரோடு வசதிகள் ஏதுவும் இல்லை. ஆகவே உடனடியாக அப்பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினார்.

நகராட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் அங்கீகாரம் இல்லாத பகுதிகளுக்கு வசதிகள் கிடைப்பதில் ஆய்வு செய்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்று கமிஷ்னர் கூறியதையடுத்து சிறிதுநேரம் காரசார விவாதம் நடந்தது.

மேலும் வழக்கம் போல் பல கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் காணப்படும் குறைபாடுகள், கிடப்பில் போடப்பட்ட பணிகள் குறித் து முறையிட்டு பேசினர். கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சுகாதார அலுவலர் ராஜசேகரன், பொறியாளர் முத்து, மேலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

செங்கோட்டை நகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர்                31.07.2012

செங்கோட்டை நகராட்சி கூட்டம்

செங்கோட்டை : செங்கோட்டை நகராட்சி கூட்டம் நடந்தது.

செங்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் வக்கீல் மோகனகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கணேசன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரமேஷ் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

சங்கரலிங்கம் : எங்கள் பகுதியில் 5 மாத காலமாக குடிநீர் சீராக வரப்படவில்லை. குடிநீர் சீரமைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் காட்சி தருகிறது.

தலைவர் : எத்தனை நாட்கள் தண்ணீர் வரவில்லை.

சங்கரலிங்கம் : தண்ணீர் வந்தால் தானே நாட்களை சொல்லலாம்.

இன்ஜினியர் : அப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நெடுஞ்சாலைதுறை ரோட்டில் தோண்டப்பட்டுள்ள இரண்டு இடங்களில் உடைப்பு குறித்து பார்க்கப்பட்டுள்ளது. அதில் அவற்றில் உடைப்பு இல்லாத நிலையில் வேறு எங்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் தண்ணீர் சரியாக கிடைக்கப்பெறவில்லை என்றால் தனி லைன் மூலம் குடிநீர் கொடுப்பதற்கான மதிப்பீடு செய்து அதற்கான ஏற்பாடு மேற்கொள்ளலாம்.

சங்கரலிங்கம் : அதுவெல்லாம் இருக்கட்டும். குடிநீர் சப்ளை எங்கள் பகுதிக்கு எப்போது கிடைக்கும் என கூறுங்கள். குழியை தோண்டி போட்டுவிட்டு அப்படியே போய்விட்டனர். முக்கிய பகுதியில் அந்த குழிகள் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். பலமுறை சொல்லியும் இதற்கு பலனில்லை.

இன்ஜினியர் : குடிநீர் சப்ளை விரைவில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைவர் : குறிப்பிட்ட வார்டில் குடிநீர் சப்ளை கிடைக்காததற்கு சரியான குறைபாடு என்ன என்பதை உடனடியாக ஆராயப்படும். மீண்டும் அதற்கான பிரச்னை ஏற்பட்டால் அதற்கு நிரந்தர தீர்வு காணும் ஏற்பாட்டினை நிச்சயமாக மேற்கொள்ளலாம்.

மேரி : எங்களது வார்டில் அடிபம்புகள், பைப்புகள் ஆங்காங்கே பழுதாகி கிடக்கிறது என 15 நாட்களாக புகார் தெரிவித்து வருகிறேன். அடிபம்புகள் எப்போது சீரமைத்து தரப்படும்.

தலைவர் : இந்த வார இறுதிக்குள் அதற்கான பணிகள் நிச்சயமாக செய்து தரப்படும்.

திலகர் : 50 லட்ச ரூபாய் செலவில் தியாகி வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு பணிகள் நடந்து வருகிறது. அவற்றை பொறுத்தவரை மிகவும் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

தலைவர் : தியாகி வாஞ்சிநாதன் மணிமண்டபம் கட்டும் பணியை பொறுத்தவரை பொதுப்பணித்துறை தான் அதனை மேற்கொண்டு வருகிறது. அதனை முடித்த பிறகு தான் நகராட்சி நிர்வாகத்திடம் மணிமண்டப பராமரிப்பு ஒப்படைக்கப்படும். இருந்தபோதிலும் பணிகளை விரைந்து மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு பரிந்துரை செய்யலாம்.

திலகர் : செங்கோட்டை நகர மையப்பகுதியில் மின்வாரிய அலுவலகம் அமைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

தலைவர் : இதற்கான பணியினை அமைச்சர் செந்தூர்பாண்டியன் பரிந்துரையின்படி மேற்கொள்ள ஏற்பாடு செய்யலாம்.

ஐயப்பன் : நகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தலைவர் : இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐயப்பன் : நகராட்சி கவுன்சில் பதவியேற்பு விழா கடந்த ஜனவரி மாதம் நடந்தபோது விழாவிற்கான செலவினம் என 19 ஆயிரம் ரூபாய்க்கு செக் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணம் உரியவர்களுக்கு இதுவரை பட்டுவாடா செய்யப்படவில்லை.

இன்ஜினியர் : இதுகுறித்து உடனடியாக ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு, முத்துசாமி பூங்கா பகுதியில் சிமென்ட் சாலை, மழைநீர் ஓடை போன்ற பணிகளை மேற்கொள்ள 54 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் ஐயப்பன், குடிநீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி தலைவர், துணைத் தலைவர், நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்ட பணிகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

 


Page 259 of 841