Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு வருவாய் துறையினர் ஒதுக்கிய பகுதியில் : குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு

Print PDF
தினகரன்      06.01.2011
 
குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு வருவாய் துறையினர் ஒதுக்கிய பகுதியில் : குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு
 
கூடலூர், ஜன.6:

வருவாய் துறையினர் சுட்டிகாட்டிய பகுதியில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் கூடலூர் நகராட்சிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கடந்த பல ஆண்டுகளாகவே வனப்பகுதியில் ஆங்காங்கே கொட்டப்பட்டது. ஆனால் குப்பைகளை வனப்பகுதியில் கொட்டக்கூடாது என்று நகராட்சிக்கு வனத்துறை அறிவுறுத்தியது. குப்பைகளை கொட்ட உரிய இடம் கிடைக்காததால் நகராட்சி நிர்வாகம் பல்வேறு இன்னல்களை கடந்த காலங்களில் எதிர்கொண்டு வந்தது.

பாதுகாப்பான முறையில் குப்பைகளை ஓரிடத்தில் கொட்டி உரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாகவே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கூடலூர் வருவாய் துறையினர் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செலுக்காடி கிராமத்தில் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்த வருவாய் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி குப்பைகளை கொட்டி உரமாக்கும் பணிகளை மேற்கொள்ள கூடலூர் நகராட்சிக்கு இடத்தை ஒதுக்கியது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை உரமாக்கும் கிடங்கு அமைக்க கூடலூர் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேவர்சோலை பேரூராட்சி 9வது வார்டு உறுப்பினர் வீராசாமி, தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

குப்பைகளை இப்பகுதியில் கொட்டுவதால் அப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் நீர் ஊற்றுகள் மாசடையும். இதனால் இப்பகுதி மக்களின் குடிநீர், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடையும். எனவே வருவாய் துறையினர் இந்த நிலத்தை தவிர்த்து வேறு இடத்தில் நகராட்சி குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இந்த மனுவின் நகல்கள் கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை கொட்ட இடம் கிடைத்த நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் கூடலூர் நகராட்சிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
 

முக எம்.எல்.ஏ-க்கள் மாநகராட்சி கூட்டத்தில் கருத்துகளைத் தெரிவிக்கலாம்: மேயர் மா.சுப்பிரமணியன்

Print PDF

தினமணி      06.01.2011

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மாநகராட்சி கூட்டத்தில் கருத்துகளைத் தெரிவிக்கலாம்: மேயர் மா.சுப்பிரமணியன்



சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு புதிய வாகனங்களை வழங்குகிறார் மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன். உடன் மாநகர

 சென்னை, ஜன. 5: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் நலப் பணி குறித்து கருத்துக்களை சொல்லலாம் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு புதிய வாகனங்களை வழங்கி மேயர் பேசியது:

 சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டல சுகாதார அலுவலர்களுக்கும், ஒரு கால்நடை மருத்துவ அலுவலருக்கும் 11 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் சுமார் ரூ. 71.90 லட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளன.

 கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 356 வாகனங்கள் ரூ.43 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளன.

 கடந்த மாதம் சென்னை நகரத்தில் உள்ள 1320 சாலைகளை ரூ.117 கோடியில் சீரமைக்கும் பணியினை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால் அதிமுகவினர், அரசியல் செய்வதற்காக சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள்.

 கடந்த 4 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை உயர்த்தாமல் மக்கள் நலப்பணிகள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சொத்து வரி சரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

 அதேபோல 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 3,500 கோடி மதிப்பிலான சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காகப் பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன.

 பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்டு, தமிழர் பண்பாட்டை விளக்கும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. சென்னையில் அதிமுகவைச் சேர்ந்த 7 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் தமிழக அரசு மூலமும், சென்னை மாநகராட்சி மூலமும் நடைபெறும் பணிகளை அறிந்து கொண்டு, உண்மைகளை பேச வேண்டும்.

 மேலும் அவர்கள் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மக்கள் பணி குறித்து கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். உண்மைகளை மறைத்து தவறான பிரசாரம் செய்ய வேண்டாம் என்றார் மா.சுப்பிரமணியன்.

 இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர் (சுகாதாரம்) ஆஷிஷ்குமார், ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ப.ரவி, நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) மணிவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

செப்டிக் டேங்க் பராமரிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்       05.01.2011

செப்டிக் டேங்க் பராமரிப்பு விழிப்புணர்வு பேரணி

 

ஈரோடு மாநகராட்சி சார்பில் செப்டிங் டேங்கை பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதை கலெக்டர் சவுண்டையா கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில், மேயர் குமார் முருகேஷ் உள்ளிட்டோர்.

ஈரோடு, ஜன. 5:

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப் புகள், வியாபார நிறுவனங் கள்,மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் உள்ள கழிவுநீர் செப்டிக்டேங்க் தொட்டி களை சுத்தம் செய்வதற்கு ஆட் களை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. எனவே கழிவுநீர் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்கள் தகுந்த பணி அனுபவம் பெற்றுள்ளவராக வும், அவருக்கு போதிய பாது காப்பு கவசங்கள் வழங்கி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இப்பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் முறை யாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனு மதி மற்றும் தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும்.

சேமிக்கப்பட்ட கழிவு களை நீர்படுகைகள், பொது வடிகால்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பின்றியும், சுற்றுச்சூழல் மாசுபடாமலும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் வெளியேற்றப்பட வேண்டும். கழிவுகளை அகற் றும் பணியை துவக்குவதற்கு முன்பு மாநகராட்சியில் முறை யான அனுமதி பெற வேண் டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. செப்டிக் டேங்க் சுத்தம் செய்வது தொடர் பான விழிப்புணர்வை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி சார்பில் நேற்று பேரணி நடந் தது. மாநகர மேயர் குமார்முருகேஷ், மாநகராட்சி ஆணையர் பாலசந்திரன் முன்னிலை வகித்தனர்.

பேரணியை மாவட்ட ஆட்சியர் சவுண்டையா துவ க்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது, ஈரோடு மாநகராட்சியில் ரூ.209 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 கட்ட மாக பணிகள் செய்ய திட்டமிட்டு தற்போது இரண்டு கட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வரும் 2013ம் ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும், என்று தெரிவித்தார்.

பேரணியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயபாஸ்கர், சண்முகம், மாநகராட்சி பொறி யாளர் வடிவேல், உதவி பொறியாளர் ஆறுமுகம், மா நகர் நல அலுவலர் ரமேஷ்குமார், நகரமைப்பு அலுவலர் சதாசிவம், துப்புறவு ஆய்வா ளர் பூபாலன், விஏஓ. அழகு ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகளும், மகளிர் சுய உதவிக்குழுவினரும், உணவு கழிவுகளை கழிவறையில் போடவும், சிகரெட், பீடித்துண்டுகள், தீக்குச்சிகள், பயன்படுத்திய டாய்லெட் ரோல்கள், சானி டரி நாப்கின்கள், பேனாக்கள், ரீபில்கள் மற்றும் நூல், குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள் போன்றவற்றை கழிவறையில் போடுவதை தடுக்கும் தட்டிகள், பேனர் களை கையில் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். பேரணி பிரப் ரோடு வழி யாக அரசு மருத்துவமனை யில் நிறைவு பெற்றது.

 


Page 272 of 841