தினகரன் 227.12.2010
கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வது குறித்து நகராட்சி சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம்
பொள்ளாச்சி, டிச 27:
பொள்ளாச்சி நகரில் உள்ள கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வது குறித்து நகராட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் விடுத்துள்ள அறிக்கையில், கழிவு நீர்த் தொட்டிகளை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோரை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இக்கூட்டம் 27ம் தேதி (இன்று) நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கழிவு நீர்த் தொட்டிகளை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது, அதற்கென இயங்கும் மின் மோட்டார் பொருத்திய வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.