Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வது குறித்து நகராட்சி சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினகரன் 227.12.2010

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வது குறித்து நகராட்சி சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம்

பொள்ளாச்சி, டிச 27:

பொள்ளாச்சி நகரில் உள்ள கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வது குறித்து நகராட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் விடுத்துள்ள அறிக்கையில், கழிவு நீர்த் தொட்டிகளை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோரை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இக்கூட்டம் 27ம் தேதி (இன்று) நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கழிவு நீர்த் தொட்டிகளை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது, அதற்கென இயங்கும் மின் மோட்டார் பொருத்திய வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வது குறித்து நகராட்சி சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினகரன்            27.12.2010

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வது குறித்து நகராட்சி சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம்

பொள்ளாச்சி, டிச 27:

பொள்ளாச்சி நகரில் உள்ள கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வது குறித்து நகராட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் விடுத்துள்ள அறிக்கையில், கழிவு நீர்த் தொட்டிகளை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோரை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இக்கூட்டம் 27ம் தேதி (இன்று) நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கழிவு நீர்த் தொட்டிகளை பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது, அதற்கென இயங்கும் மின் மோட்டார் பொருத்திய வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி 5வது வார்டு இடைதேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

Print PDF

தினகரன் 23.12.2010

மாநகராட்சி 5வது வார்டு இடைதேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஈரோடு, டிச.23:

ஈரோடு மாநகராட்சியில் 5வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் ராஜீ()முத்துசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து இந்த வார்டுக்கு இடைத்தேர்தல் வரும் 10ம்தேதி நடைபெறவுள்ளது. இந்த வார்டில் கடந்த அக்டோபர் 25ம்தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி ஆண் வாக்காளர்கள் 1,288 பேரும், பெண் வாக்காளர்கள் 1,219 பேரும் என 2,507 பேர் உள்ளனர். நேற்று முதல் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்டது. நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் 29ம்தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. 30ம்தேதி மனு பரிசிலனையும், 3ம்தேதி வேட்புமனு வாபஸ் பெறவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். 10ம்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு 12ம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நேற்று மனுதாக்கல் தொடங்கிய நிலையில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

 


Page 277 of 841