Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி இல்லை செங்கல்பட்டு நகராட்சி அறிவிப்பு

Print PDF
தினகரன்        16.12.2010

பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி இல்லை செங்கல்பட்டு நகராட்சி அறிவிப்பு

செங்கல்பட்டு, டிச. 16: செங்கல்பட்டு நகராட்சி கூட்டம், அதன் தலைவர் ஜெயா தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் கிரிபாபு, ஆணையர் (பொறுப்பு) சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சுரேஷ் (தேமுதிக): 1வது வார்டு ஜேசிகே நகரில் அம்மன் கோயில் கட்ட அனுமதி தர வேண்டும்.

ஆணையர்: கோயில் கட்ட அனுமதி கேட்கும் இடம் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கோயில் கட்ட அனுமதிக்க முடியாது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தேமுதிக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், ‘அண்ணாநகர், வேதாசலம் நகர் பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பிளாட் போட்டு சிலர் விற்றுள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என கேட்டனர்.

ஆணையர்: முன்பு நடந்த சம்பவத்தை முன்னுதாரணமாக காட்ட வேண்டாம். பூங்கா அமைக்கும் இடத்தில் கோயில் கட்ட அனுமதி இல்லை. மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், காணாமல் போன பூங்கா குறித்து ஆய்வு செய்யப்படும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அலமேலு (மதிமுக): எனது வார்டில் 2 வாரங்களாக குடிநீர் வரவில்லை. குப்பை மலைபோல் குவிந்துள்ளது.

ஆணையர்: நகர் முழுவதும் ஒழுங்காக குப்பை அள்ளப்படுகிறது.
(இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து கவுன்சிலர்களும், ‘அவைக்கு தவறான தகவல் தரக்கூடாது’ என கோஷமிட்டனர்).

தொடர்ந்து பேசிய ஆணையர், ‘நகராட்சியில் வரும் வருமானத்தில் பாதி, நிர்வாக செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் வேலைக்கு புதிதாக அட்களை அமர்த்த முடியாது. வேண்டுமானால் ஒரு பகுதியில் மட்டும் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு வழங்கலாம்’ என்றார்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.

மழைநீர் வடிகால்வாய், சாலைகள் அமைப்பது மற்றும் குடிநீர் விநியோகம் குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே அடிக்கடி தகராறு நடக்கிறது. இதை தடுக்கும் வகையில் மன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்க நகராட்சிகள் மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று நடந்த மன்ற கூட்டம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
 

நாளை நடக்கவிருந்த நெல்லை மாநகராட்சி கூட்டம் ‘திடீர்’ ஒத்திவைப்பு பின்னணி என்ன?

Print PDF

தினகரன்         15.12.2010

நாளை நடக்கவிருந்த நெல்லை மாநகராட்சி கூட்டம் திடீர்ஒத்திவைப்பு பின்னணி என்ன?

நெல்லை, டிச.15: நெல்லை மாநகராட்சியில் நாளை நடக்கவிருந்த சாதாரண கூட்டம் சில காரணங்களால் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் இம்மாதத்திற்கான சாதாரண கூட்டம் நாளை (16ம் தேதி) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தீர்மான நகல்களும் அச்சடிக்கப்பட்டு, அனைத்துக் கவுன்சிலர்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன. இந்நிலையில் திடீரென நாளை நடக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் வருவதாலும், துணை முதல்வர் வருகை இருப்பதாலும், கூட்டத்தை முன்ன ரே நடத்துவதாக மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது கூட்டத் தை மீண்டும் மாத இறுதிக்கு ஒத்தி வைத்திருப்பதற்கு, சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மாநகராட்சியில் சிறப்பு சாலைகள் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியை 'முறையாகபயன்படுத்துவது தொடர் பாக சில கவுன்சிலர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். கடந்த 11ம் தேதி இந்நிதி தொடர்பாக ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள் ளன. நாளை நடக்கும் கூட்டத்தில் தர்ணா இருப்போம். கூட்டத்தில் நூதன போராட்டங்கள் மேற்கொள்வோம்என 5 கவுன்சிலர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது. மாமன்ற கூட்டத்தில் நடக்கவுள்ள பிரச்னைகளை தவிர்க்கும் வகையில், நாளை நடக்கவிருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக நெல்லை மேயர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாமன்ற சாதாரண கூட்டம் நாளை(16ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநில நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து மாநில நிதிக்குழு ஆணையத்தின் ஆலோ சனை கூட்டம் இன்று (15ம் தேதி) மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என தகவல் வந்துள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு ஆணையக்குழு மேயர்களின் கருத்துகளை கேட்க இருப்பதால், கட்டா யம் கலந்து கொள்ள வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து மறுநாள் (16ம் தேதி) தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது. எனவே 16ம் தேதி நடக்கவிருந்த மாநகராட்சி கூட்டம் வரும் 29ம் தேதி காலை 10.30 மணிக்கு நடை பெறும் என தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

 

தெருக்களில் திரியும் நாய், பன்றி, குரங்கு பிடிக்கப்படும் : பேரூராட்சி கூட்டத்தில் தகவல்

Print PDF

தினகரன்               15.12.2010

தெருக்களில் திரியும் நாய், பன்றி, குரங்கு பிடிக்கப்படும் : பேரூராட்சி கூட்டத்தில் தகவல்

சீர்காழி, டிச. 15: சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி கூட்டம் மன்ற கூடத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் அன்புசெழியன், செயல் அலுவலர் தங்கையன் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை பாரதிமோகன் வாசித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர் மூர்த்தி பேசுகையில், அனுமதி பெறாத மனைகளுக்கு வீடுகட்ட எப்படி அனுமதி வழங்கினீர்கள் என்றார். கவுன்சிலர் சுந்தரமூர்த்தி பேசுகையில், வீடுகட்ட அனுமதி வழங்கும் போது கழிவு நீர் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்த பின் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் சரவணன் பேசுகையில், குடிநீர் குழாயில் புழுக்கள் கலந்து வருகிறது. குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுகிறதா இல்லையா. தெருக்களில் திரியும் நாய்கள், பன்றிகள், குரங்குகளால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளதால் இவற்றை உடனே பிடிக்கவேண்டும்.

இல்லாவிட்டால் பேரூராட்சி மன்றம் முன் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். கவுன்சிலர் நாடிராஜேந்திரன் பேசுகையில், கறிக்கடை, கட்டண கழிப்பறை, வாகன வரி வசூல் ஆகியவறை பொது ஏலம் விடவேண்டும் என்றார்.

கவுன்சிலர் செந்தில்முருகன் பேசுகையில், தீர்மான நகல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சியில் உள்ள கருவை முள் புதர்களை அகற்றவேண்டும் என்றார். கவுன்சிலர் கோவிந்தராஜ் பேசுகையில், மேல்பாதி சாலையை சீர்செய்ய வேண்டும் என்றார். கவுன்சிலர் அலெக்ஸாண்டர் பேசுகையில், தீர்மான நகல்கள் வெளி நபர்களுக்கு எப்படி செல்கிறது.

இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். துணை தலைவர் அன்புசெழியன் பேசுகையில், பேரூராட்சி பகுதியில் பைப் லைன் போட்ட ஒப்பந்ததாரருக்கு உரிய தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ் பேசுகையில், வீடு கட்ட அனுமதி பெறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேல சன்னதி தெருவில் பாதையை அடைத்து கடை கட்டியுள்ளனர். கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.

எனவே பேரூராட்சி மூலம் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். நாய், பன்றி, குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


Page 282 of 841