தினகரன் 13.12.2010
முன்னாள் பேரூராட்சி தலைவர்களுக்கு சலுகைகள்
தக்கலை, டிச.13: குமரி மாவட்ட முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் பி.டி.எஸ் மணி குமரி மாவட்டம் வந்த துணை முதல்வரிடம் நேரில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
குமரி மாவட்டத்தில் 1970 முதல் இன்று வரை பெரும்பான்மையான பஞ்சாயத்து தலைவர் வறுமையால் வாடுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது போன்ற சலுகைகள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கிடைப்பது இல்லை.
முன்னாள் பேரூராட்சி தலைவர்களுக்கு பென்சன், இலவச பஸ்பாஸ், மருத்துவ அலவன்ஸ், எல்லா நோய்களுக்கும் சிசிச்சை பெற காப்பீடு திட்ட வசதி, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை உள்பட சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.