Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி பரபரப்பு நீடிக்கிறது மீன் வியாபாரிகள் மீண்டும் முற்றுகை

Print PDF

தினகரன்            09.12.2010

மாநகராட்சி பரபரப்பு நீடிக்கிறது மீன் வியாபாரிகள் மீண்டும் முற்றுகை

கோவை, டிச. 9: கோவை மாநகராட்சி அலுவலகத்தை மாநகராட்சி மீன் வியாபாரிகள் நேற்றும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் செல்வபுரம் ரோட்டில் 1.37 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஒருங்கிணைந்த மீன் மார்க் கெட் கட்டப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் கூடிய இந்த கட்டடத்தில் 68 கடை அமைந்துள்ளது.

இந்தகடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய மின் ஏலத்திற்கான விண் ணப்ப பதிவு நடக்கிறது.தற் போது உக்கடத்தில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு முன்னுரி மை தரவேண்டும்.

வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்த பின்னரே, மற்றவர்களுக்கு கடை ஒதுக்கவேண்டும் என மாநகர வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட் டது. நேற்று முன் தினம், இது தொடர்பாக வியாபாரிகள், மாநகராட்சி கமிஷனரை சந்சித்து பேசினர். பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், நேற்றும் வியாபாரிகள் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் குவிந்தனர்.கடை ஒதுக்கீட் டில் வியாபாரிகளின் முடி வை ஏற்கவேண்டும். இல்லாவிட்டால் வியாபாரிகள் மாநகராட்சிக்கு செலுத்திய 50 ஆயிரம் ரூபாய் வரைவோ லையை திருப்பி தரவேண் டும் என வலியுறுத்தினர்.

ஆனால் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் சம்மதிக்கவில்லை. இதில் அதிருப்தியடைந்த வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த னர். காலை முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் முற்றுகை நடந்தது. வியாபாரிகள் முற்றுகையால் மாநகராட்சி அலுவலக வளாகத் தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

22 பெண்கள் உட்பட 120 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மாநகர மீன் வியாபாரிகள் சங்க தலைவர் சுபேர் கூறுகையில், "உக்கடத்தில் செயல்பட்டு வரும் கடையில் 70க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர். சில கடை இடிந்து விட்டது. இதனால் வியாபாரிகள் சிலர் கடை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

புதிதாக மீன் மார்க்கெட் திறக்கும் போது இங்கேயுள்ள வியாபாரிக ளுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்கள். ஆனால், மின் ஏல முறை யை காரண மாக காட்டி இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் செலுத்திய வரைவோலையை திருப்பி தர மறுக்கிறார்கள். எங்களு க்கு கடை ஒதுக்கீடு செய்யாவிட்டால் ஏற்கனவே உள்ள மீன் மார்க்கெட்டில் தொடர் ந்து கடை நடத்துவோம். மின் ஏல முறையால் வியாபாரிகள் அல்லாத நபர்கள் கடையை கைப்பற்றும் வாய் ப்புள்ளது, " என்றார். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், " இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் ஒப்பந்தபடி கடைகள் ஒதுக்கப்படும்.

இதில் இடைத்தரகர்கள் சிலர் ஏலம் தொடர்பாக தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் ஏலத் தில் பங்கு பெறுபவர்கள் அவர்களை நம்ப வேண் டாம்.

புதிய மீன் மார்க்கெட் கடைகளுக்கான ஏலம் திட்டமிட்டபடி 9ம் தேதி(இன்று) காலை 10 மணி முதல் 11 மணிக்குள் ஏலம் கண்டிப் பாக நடக்கும். என்று கோ வை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தங்களுக்கு தகவல் வேண்டுமாயின் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் குறியீடு மற்றும் ஐடி குறியிடு போன்றவற்றினைக் கொண்டு நீஷீவீனீதீணீtஷீக்ஷீமீநீஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ.நீஷீனீ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். என்றும் கூறினார்.

முறைப்படி கடைகள் ஒதுக்கப்படும். ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கு ஒதுக்கீடு செய்த பின்னர் தான் மற்றவர்களுக்கு கடை ஒதுக்கப்படும் என்பதை ஏற்க முடியாது, " என்றார். கோவை உக்கடம் மீன் மார்க்கெட் வியாபாரிகள் டெண்டர் பணத்தை திருப்பித்தர கோரி நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

தினகரன் செய்தி எதிரொலி உயிரியல் பூங்கா சீரமைக்க உத்தரவு

Print PDF

தினகரன்            09.12.2010

தினகரன் செய்தி எதிரொலி உயிரியல் பூங்கா சீரமைக்க உத்தரவு

கோவை, டிச. 9: கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவை சீரமைக்க உத்தரவிடப்பட்டது. கோவை மாநகராட்சியின் உயிரியல் பூங்காவை மூட மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்து கடந்த 4ம் தேதி தினகரனில் பூங்கா தொடர் பான விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

இதைதொடர்ந்து கோவை மாநகராட்சியின் கல்வி, பூங் கா, மைதான குழுவினர் உயிரியல் பூங்காவில் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில், பூங்கா குழு தலைவர் கல்யாணசுந்தரம், செயற்பொறியாளர் கணேஷ்வரன், உதவி பொறியாளர் சுந்தர்ராஜன், உயிரியல் பூங்கா இயக்குநர் பெருமாள்சாமி, கவுன்சிலர்கள் செந்தில்குமார், மீனா, ஷோபனா ஆகியோர் பங்கேற்றனர்.

பூங்காவில் விலங்கு பற வை கூண்டுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதை பார்த்தனர். வெளிநாட்டு பறவை கள் அமைக்கப்பட்ட கூண் டின் மேல் பகுதி வலை பழுதடைந்து காணப்பட்டது. இந்த வழியாக காக்கைகள் புகுந்து உணவாக வழங்கப்படும் மீன், நண்டுகளை தூக்கி சென்று சாப்பிட்டன. இதை பார்த்த குழுவினர், வலை அமைக்கவேண்டும் தெரிவித்தனர்.

பூங்கா குழு தலைவர் கல்யாணசுந்தரம் கூறுகையில், ‘’ உயிரியல் பூங்கா மாற்றப்படும் நிலையில் இருக்கிறது. கடமான், புள்ளி மான் அடைக்கப்பட்ட இடம் சே றும், சகதியுமாக காணப்பட் டது. இப்பகுதியில் கிணற்று மண் குவிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பார்வையாளர்கள் வந்து செல்லும் பகுதியில் நடை பாதை அமைக்கவும், பழுதடைந்த குரங்கு, பறவை கூண்டுகளை சீரமைக்கவும் குழுசார்பில் கோரிக்கை விடப்பட்டது," என்றார். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், பூங்கா சீரமைப்பிற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

பூங்கா குழுவினர் தமிழ் நாடு வேளாண் பல்கலைகழக வளாகத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளி கட்டடத்தை பார்வையிட்டனர். முழுவதும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையிருந்தது. இந்த பள்ளியை 47 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. விரைவில் கட்டட பணியை துவக்க உத்தரவிடப்பட்டது.

 

டோல்கேட்டில் கண்காணிப்பு இல்லாததால் இழப்பு: கண்டு கொள்ளாத நகராட்சி அதிகாரிகள்

Print PDF

தினமலர்             09.12.2010

டோல்கேட்டில் கண்காணிப்பு இல்லாததால் இழப்பு: கண்டு கொள்ளாத நகராட்சி அதிகாரிகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் நுழைவு வாயிலிலுள்ள டோல்கேட்டில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லாததால், தினமும் பல ஆயிரம் ரூபாய் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே நகராட்சி கட்டுப்பாட்டில் "டோல்கேட்' உள்ளது. இந்த வழியாக கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் டூரிஸ்ட் பஸ்சிற்கு ரூ.125, அரசு பஸ்சிற்கு ரூ.100, கார் ரூ.40, இருசக்கர வாகனத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. காலை 6 முதல் மதியம் மணி 2, மதியம் 2முதல் இரவு மணி10, இரவு 10 முதல் மறுநாள் காலை மணி6 வரை என தினசரி மூன்று ஷிப்களில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரமும், வார விடுமுறை, தொடர் அரசு விடுமுறை நாட்களில் மும்மடங்கு வசூலாகும்.

குறிப்பாக வரும் வெளி மாநிலத்திலிருந்து வரும் பயணிகளிடம், டிக்கெட் கொடுக்காமல் பணத்தை வாங்கிவிட்டு அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த உயர் அதிகாரியிடம் இதுபோன்று ஊழியர்கள் பணம் வசூலிக்க அவர் மேலிடத்தில் புகார் செய்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரச்னையில் தலையிட்டு தீர்வு கண்டனர். நுழைவு கட்டணம் முறைப்படி வசூல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க நகராட்சித்தலைவர் ,கமிஷனர் அறை, வருவாய் ஆய்வாளர் அறையில் கணினி பொருத்துவதற்காக திட்டம் வகுக்கப்பட்டு, இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. ஆண்டுதோறும் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 


Page 286 of 841