Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நீர்வரத்து அதிகம் உள்ளதால் 2 முறை குடிநீர் விநியோகம் குடந்தை நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

Print PDF

தினகரன்         02.12.2010

நீர்வரத்து அதிகம் உள்ளதால் 2 முறை குடிநீர் விநியோகம் குடந்தை நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

கும்பகோணம், டிச.2: கும்பகோணம் நகர்மன்ற கூட்டம் தலைவர் தமிழழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் தர்மபாலன், ஆணையர் வரதராஜன், பொறியாளர் கனகசுப்புரத்தினம் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

சுந்தரபாண்டியன் (திமுக): கும்பகோணத்தில் வீட்டு வரி விதிக்கப்படாததால் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க முடியவில்லை. எனவே சாலை, புறம்போக்கு கூரை வீடு களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

கிருஷ்ணமூர்த்தி (திமுக): நகரில் சுற்றித்திரியும் மாடுகளையும், நாய்களையும் கட்டுப்படுத்தவேண்டும் என்றார்.

ஆணையர்: மாடுகளை அப்புறப்படுத்த நிரந்தர முடிவாக சட்டப்பூர்வமாக செய்யவேண்டும். தட்சிணாமூர்த்தி (திமுக): தெரு வில் சுற்றித்திரியும் மாடு, நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர்: நாய், பன்றிகளை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். வருவாய்துறையில் கேட்டால் மாடுகளை கொண்டு வந்துவிடுவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

ஆதிலட்சுமி(அதிமுக): தெருவிளக்கு அமைப்பதற்கு இரண்டு வார்டுகளுக்கு மின்கட்டண காப்புத் தொகை செலுத்துவதற்கு பொருள் வைக்கப்பட்டுள் ளது. எனது வார்டில் நீண்ட நாட்களாக வடக்குவீதியில் தெருவிளக்கு வசதி கேட்டு வருகிறேன். கவுன்சிலர்கள் கொடுக்கும் மனுக் கள் பதிவேடுகளில் பதியவைத்து பராமரிக்கப்படுகிறதா?

பொறியாளர்: வார்டு வாரியாக சொல்லப்படும் பொதுவான செய்திகள் பதியப்படுகிறது.

துளசிராமன்(அதிமுக): மேட்டூரில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இப்போதாவது இரண்டுமுறை தண்ணீர் விடக்கூடாதா?

ராஜாநடராஜன் (அதிமுக): கரும்பாயிரம் பிள்ளையார்கோவில் அருகில் குழந்தைகள் அங்கன் வாடி மையத்திற்கு உடன் சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தலைவர்: உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பீட்டர்பிரான்சிஸ் (பாமக): எம்.ஜி.ஆர். நகரில் குளம்போல் தண்ணீர் சூழ்ந்து ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது. உடன் நகராட்சி அதிகாரிகளுக்கு போன் செய்தேன். யாரும் போன் எடுக்கவில்லை என்றார்.

கூட்டத்தில், மின்இணைப்பு காப்புத்தொகை செலுத்துவது, வீரபத்திரசந்து மண்சாலையை சிமெண்ட் தளமாக்குவது என்பது உட்பட ரூ.32.90 லட்சத்திற்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Thursday, 02 December 2010 11:31
 

மழைநீரை அகற்ற முடியாமல் மாநகராட்சி திணறல்

Print PDF

தினமலர்             02.12.2010

மழைநீரை அகற்ற முடியாமல் மாநகராட்சி திணறல்

தூத்துக்குடி : தூத்துக்குடி பகுதியில் தொடர்ந்து பெ ய்து வரும் மழையால், பல பகுதிகள் தீவு போல் காட்சி அளித்து வருகிறது. அமைச்சர், மாநகர மேயர் ஆகியோர் வசித்து வரும் போல்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி உட்பட பல இடங்களில் பொதுமக்கள் செல்ல முடியாத அள விற்கு மழைநீர் ரோடுகளில் தேங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழை கொ ட்டி தீர்த்து வருகிறது. சாதாரண தூரல் மழை பெய்தாலே மழை நீரினால் தாக்குபிடிக்க முடியாத தூத்துக்குடி மாநகர் பகுதி, கடும் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் தண்ணீர் தேங்காமல் ஏதாவது ஒரு ரோடு இருந்தால், அது நிச்சயம் ஆச்சரியமானதாகும். அந்தளவிற்கு மாநகர் பகுதி முழுவதும் மழைநீர் தெப்பம் போல் பெரும்பாலான இடங்களில் தேங்கியுள்ளது.

இத்துடன் பல இடங்களில் பாதாளசாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் எல்லாம் குட்டை குட்டையாக தண்ணீர் தேங்கியுள்ளது. அறைகுறையாக மூடப்பட்டுள்ள பள்ளங்களில் ஒரு சில இடங்களில் தோன்றியுள்ள மரணக்குழிகள் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளை காயப்படுத்தி வருகிறது. ஒரு சில பகுதிகளில் உள்ள ரோடுகள் எல்லாம் உழவு செய்த வயல்கள் போல் காட்சி அளித்து வருகிறது. தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவில் மழை காலம் என்று கூட பார்க்காமல் ரோடு போடுவதற்காக பரப்பபட்ட செம்மண் முழுவதும் மழைநீரில் கரைந்து கழிவுநீர் வாய்காலில் வீணாக சென்று வடுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த ரோட்டில் தற்போது குவித்து வைக்கப்பட்டுள்ள கற்களினால், அந்த வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகரத்தின் புறநகர் பகுதியாகவும், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாகவும் இருப்பது பி அன்டு டி காலனியாகும். இந்த காலனிக்கு செல்வது என்றால் பக்கிள் ஓடையை கடந்து தான் செல்ல வேண்டும்.

பக்கிள் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக தண்ணீர் சரியான முறையில் செல்லாததால் பி அன்ட் டி காலனிக்கு செல்லும் பிராதான நுழைவு பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தில் சில அடி தூரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பல மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. பக்கிள் ஓடையில் உள்ள அடைப்புகளை சரி செய்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றாலும், இதுவரையிலும் அதற்கான முயற்சிகள் செய்யப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல் ஸ்டேட் பாங்க் காலனி, போல்பேட்டை போ ன்ற பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் வெளியேற வழியில்லாமல் பல இடங்களில் தேங்கியுள்ளது. தூத்துக்குடி தொகுதி எம்.எல். ஏ.,வும், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் வீடு உள்ள பகுதியான போல்பேட்டை பகுதியில் உள்ள பெரிய ரோடுகள் பலவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதோடு, சேறும் சகதியுமாக காட்சி அளித்து வருகிறது. இதே நிலையில் தான் மேயர் கஸ்தூரி தங்கத்தின் வீடு அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியிலும் காணப்படுகிறது.

மேயர் வீட்டினை சுற்றியுள்ள நான்கு தெருக்களிலும் மழை நீர் பல நாட்களாக தேங்கியுள்ளது. அந்த பகுதிவாசிகள் தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பெரிய சாகசம் செய்து தான் ரோட்டில் நடந்து செல்ல வேண்டும். தொகுதியின் எம்.எல் .ஏ., மாநகர மேயர் வீடுகள் அø மந்துள்ள பகுதிகளில் உள்ள ரோடுகள் எல்லாம் அலங்கோலமாக காட்சி அளிப்பதை கொ ண்டே, தூத்துக்குடி மாநகராட்சியின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை எடைபோட்டு விடலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் இதுபோன்று மழைநீர் தேங்கி வரும் சம்பவம் பல ஆண்டுகளாக தொ டர்ந்து வந்தாலும் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இத ற்காக நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் ஈடுபாடு காட்டவில்லை. மழை தண்ணீர் தேங்கும் சமயங்களில் மட்டும் மாநகராட்சியில் உள்ள ஒரு சில கழிவுநீர் வெளியேற்றும் லாரிகளை கொண்டு தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றி வருகின்றனர். இந்த லாரிகளை கொண்டு கழிவுநீர் குழாய்களில் திடீரென ஏற்படும் அடைப்புகளை மட்டுமே சரி செய்ய முடியுமே தவிர, மாநகரின் அனைத்து பகுதியிலும் தேங்கியுள்ள மழை தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற முடியாது என்றும், ஒரு வேளை இதே முறையை தொடர்ந்தால் இன்னும் ஆயிரம் லாரிகளை கொ ண்டு தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றினாலும் மழை தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு எட்ட முடியாது என்று பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

 

சேலத்தில் நில மோசடிகளை தடுக்க வெப்சைட் விதி மீறி கட்டப்பட்ட 80 கட்டடங்களுக்கு நோட்டீஸ் நகர ஊரமைப்புத் துறை அதிரடி

Print PDF

தினகரன்                  02.12.2010

சேலத்தில் நில மோசடிகளை தடுக்க வெப்சைட் விதி மீறி கட்டப்பட்ட 80 கட்டடங்களுக்கு நோட்டீஸ் நகர ஊரமைப்புத் துறை அதிரடி

சேலம், டிச.2: சேலம் சுப்ரமணியம் நகரில் அமைந்துள்ள நகரமைப்பு மண்டல அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. இதில் நகர ஊரமைப்புத் துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்து கொண்டு மனுக்களைப் பெற்றார். மேலும் நகரமைப்பு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்பொழுது நிலத்தில் முதலீடு செய்யும் போக்கு மக்களிடம் அதிகளவில் காணப்படுகிறது. நடுத்தர மக்கள் தவணைத் திட்டங்களில் நிலம் வாங்குகின்றனர். நில விற்பனையில் ஈடுபடும் பல தனியார் நிறுவனங்கள் கவர்ச்சி விளம்பரத்தை வெளியிடுகின்றன. இதில் பல மோசடிகளும் நடப்பதாக மக்கள் புகார் அளிக்கின்றனர். இது போன்ற மோசடிகளைத் தடுக்கும் விதமாக நகர ஊரமைப்புத் துறை மூலம் சேலம் மண்டல அளவிலான தகவல்களை உள்ளடக்கிய வெப்சைட் வெளியிடப்பட உள்ளது.

இதில் குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதி பெற்ற பிளாட்டுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கும். நிலம் வாங்க உள்ளவர்கள் குறிப்பிட்ட பிளாட் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை வெட்சைட்டில் தெரிந்து கொள்ள முடியும். மண்டல அலுவலகத்தில் ரூ200 கட்டினால் குறிப்பிட்ட பிளாட்டுக்கான லே அவுட் காப்பியைப் பெறலாம்.

அனுமதி பெறப்படாத பிளாட்டுகளை வாங்கும் பட்சத்தில் அவைகளுக்கு தண்ணீர், சாக்கடை உள் ளிட்ட வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்து தரப்படாது. எனவே மக்கள் நிலம் வாங்குவதற்கு முன் அனுமதி பெறப்பட்டதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். நகரம் மற்றும் மலைப்பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 80 கட்டங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இது குறித்து விளக்கம் பெறப்பட்ட பின்னர் மீறிய கட்டடங்கள் இடிக்கப்படும். மலைப்பகுதியில் 250 சதுர அடி வரை கட்டடம் கட்ட உள்ளாட்சி அமைப்பு அனுமதிக்கும். 300 சதுர அடி கட்டடத்துக்கு ஆட்சியர் தலைமையிலான குழு அனுமதிக்கும். 300 சதுர அடிக்கு மேல் கட்டடம் கட்டும் பொழுது எங்களிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறப்படாத மலைப்பகுதி கட்டடங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நகர ஊரமைப்புத் துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறினார்.

 


Page 291 of 841