Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பழநி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் நகர்மன்ற தலைவர் உறுதி

Print PDF

தினகரன்                01.12.2010

பழநி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் நகர்மன்ற தலைவர் உறுதி

பழநி, டிச.1: பழநி அடிவாரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

பழநி நகர்மன்ற கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹக்கீம், ஆணையர் மூர்த்தி, பொறியாளர் முத்து மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

துணைத்தலைவர்: நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரி மேல்முறையீட்டு குழு நடவடிக்கை சரியில்லை. வரி நிர்ணயிப்பில் முறைகேடு நடந்துள்ளது.

தலைவர்:ஒரு வார காலத்திற்குள் வரி முறையீட்டு குழு கூட்டம் நடத்தப்பட்டு இதுகுறித்து விவாதிக்கப்படும்.

கந்தசாமி:பழநி நகரில் பலருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை. பலரது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. வருவாய்த்துறையின் அலட்சியத்தை கண்டிக்க வேண்டும்.

(இக்கருத்தை வலியுறுத்தி கந்தசாமி மற்றும் கவுன்சிலர் கன்னிகா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.)

தலைவர்:கணிப்பொறியில் ஏற்பட்ட குளறுபடியால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.

மல்லிகா:அடிவாரம் ரவுண்டானா அருகில் உள்ள நகராட்சி சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.

தலைவர்:நகராட்சி நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாப்பாத்திசேட்:காமராசர் வீதியில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி இடிந்து விழும் தருவாயில் உள்ளது.

பொறியாளர்: விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழனிச்சாமி: நகரில் பன்றிகள் சுற்றி திரிவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

தலைவர்:அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மணிராஜ்:நகரில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

தலைவர்:கொசுமருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்படும்.

ஷாகுல்அமீது:பழநி அரசு மருத்துமனையில் டாக்டர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை.

தலைவர்:மருத்துவ அலுவலரிடம் இப்புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

பத்மினி முருகானந்தம்:நாடாளுமன்ற உறுப்பினர் நிதி சுமார் ரூ.20 லட்சம் அளவிற்கு பழநி நகருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் நடக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தலைவர்:மாற்று பணிக்கு நிதியை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஜீப்தீன்:காந்தி சாலையில் சாக்கடை வடி கால் வசதியின்றி உள்ளது.

தலைவர்:சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

 

அதிகாரிகளை கண்டித்து தீர்மானம் கம்பம் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு

Print PDF

தினகரன்          01.12.2010

அதிகாரிகளை கண்டித்து தீர்மானம் கம்பம் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு

கம்பம், டிச.1: கம்பம் நகர்மன்ற கூட்டத்தில், அதிகாரிகளின் செயல்பாட்டு குறையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம் நகர்மன்ற மாதாந்திர கூட்டம், தலைவர் அம்பிகாபாண்டியன் தலைமை வகித்தனர். நகராட்சி உதவி பொறியாளர் (பொ) பன்னீர்செல்வம், மேலாளர் புஷ்பலதா கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதம்:

அஜ்மல்கான்: நகர்மன்ற கூட்டத்தில் ஆணையாளர், பொறியாளர், சுகாதார அலுவலர் இல்லாமல் கூட்டம் எப்படி நடத்துவது? உறுப்பினர்களின் கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பது?

தலைவர்: உதவி பொறியாளர், மேலாளர், கட்டிட ஆய்வாளர் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்கள் பதில் அளிப்பார்கள்.

அப்பாஸ்: உயர் அதிகாரிகள்தான் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த மாதம் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள பாம்போ கழிப்பறை சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிப்பது யார்?

தவமணி, அப்பாஸ், அஜ்மல்கான்: அதிகாரிகள் திட்டமிட்டு நகர்மன்ற கூட்டத்தை நிராகரித்துள்ளனர். அதனால் இக்கூட்டத்தை ரத்து செய்து விட்டு அதிகாரிகள் பங்கேற்கும் தேதியில் வைக்க வேண்டும்.

தலைவர்: நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் நடத்தும் கூட்டத்திற்கு தவிர்க்க முடியாத காரணத்தில் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

கவுன்சிலர்கள்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பாம்போ கழிப்பறை சம்பந்தமாக முறையாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

நக்கீரபாண்டியன்: கம்பம் வாரச்சந்தையில் எம்பி நிதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி யை சிலர் நீச்சல் குளமாக பயன்படுத்துகின்றனர்.

தலைவர்: குளிப்பவர்கள் யார் என்று தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வாசு, சிவமணி, கனகவள்ளி: புதிய குடிநீர் திட்டத்தில் 4, 19, 20, 21, 22, 28 வார்டு மக்கள் பயன் பெறும் வகையில் பார்க் திடலில் புதியதாக குடிநீர் மேல் நிலை தொட்டி அமைக்க வேண்டும்.

தலைவர்: புதிய குடிநீர் திட்டபணிகளின் வரைபடம். டெல்லிக்கு அதிகாரிகள் அனுமதிக்கு சென்று விட்டது. பொது நிதியில் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஸ்கரன்: 33வது வார்டில் ஒரு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை தொட்டியை காணவில்லை.

உதவிபொறியாளர்: ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணியை டெண்டர் எடுத்த ஒப்பந்தகாரர் மாற்றப்பட்டுள்ளார். அதிவிரைவில் அமைக்கப்படும்.

மேலும் பல பொருள்கள் மீது விவாதம் நடைபெற்றது.

 

ஊழியர்களை மிரட்டுகிறார்கள் மாநகராட்சியில் இடைத்தரகர்கள் மன்ற கூட்டத்தில் கமிஷனர் பகிரங்கம்

Print PDF

தினகரன்              01.12.2010

ஊழியர்களை மிரட்டுகிறார்கள் மாநகராட்சியில் இடைத்தரகர்கள் மன்ற கூட்டத்தில் கமிஷனர் பகிரங்கம்

கோவை, டிச 1: கோவை மாநகராட்சி அலுவலகங்களில் இடைத்தரகர்கள், புரோக்கர்கள் நடமாட்டம் இருப்பது உண்மை தான். இதை களையெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று மேயர் வெங்கடாச்சலம் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பல் வேறு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.

கவுன்சிலர் பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் புரோக்கர்கள், இடைத்தரகர்கள் தலையீடு உள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் அரசியல் கட்சிகளின் போர்வையில் வரும் இத்தகைய புரோக்கர்கள், ஊழியர்களை மிரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்.

ஆணையர், துணை ஆணையர் அவ்வப்போது அதிரடி ஆய்வு நடத்தி இடைத்தரகர் தலையீட்டை தடுக்கவேண்டும்," என்றார். அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர்கள் பலரும் இந்த கருத்தை அமோதித்தனர்.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் அன்சுல்மிஸ்ரா, "வடக்கு மண் டல அலுவலகம் மட்டுமில் லை. மாநகராட்சியின் பல் வேறு பிரிவு அலுவலகங்களிலும் புரோக்கர்கள் தலை யீடு உள்ளது.

மாநகராட்சியில் வெளிப் படையான நிர்வாகம் இருக்கவேண்டும் என்பதற்கான சில நடவடிக்கைகள் எடுக்கிறோம். சில விண்ணப்பங்களில் பயனாளிகள் போட் டோ ஒட்டுவது கட்டாயமாக்கப்படுவது கூட இது போன்ற குறைகளை தவிர்ப்பதற்கு தான்.

இதற்கு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பும் அவசியம். புரோக்கர்கள் நடமாட்டம் உள்ள அலுவலகங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என் றார்.

கோவை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் சுயேட்சை கவுன்சிலர் வேல்முருகன் மேயரை வரம்பு மீறி பேசியதால் அவரை மேயர் இரண்டு கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்தார். அதனால் மேயரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு அவர் மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

 


Page 293 of 841