Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

Print PDF

தினமணி           29.01.2014 

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) எம்.கே.ஜெயசேவியர், மேயர் (பொறுப்பு) பூ. ஜெகநாதன் ஆகியோர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

மாநகராட்சி 26-வது வார்டு எல்.ஐ.சி. மற்றும் பி அன்ட் டி காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், குடிநீர் இணைப்புகளில் புளோ கண்ட்ரோல் வால்வு திட்டத்தை அமல்படுத்தியும் குடிநீர் விநியோகம் சீராகக் கிடைக்கவில்லை. இப்பகுதியில் தார்ச் சாலைகள் சேதமடைந்துள்ளது. தாமிரபதி காலனி தென்பகுதியில் இருந்து பொதிகை நகர் வரை செல்லும் அரை கி.மீ. மண் சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும். பி அன்டி டி காலனியில் மேற்கு எல்லையில் இருந்து பொன்விழா நகர் வரை அரை கி.மீ. தொலைவுள்ள மண் சாலையை சீரமைத்து தார்ச் சாலையாக மாற்ற வேண்டும்.

இப்பகுதியில் கூடுதலாக தெரு விளக்குகள், கூடுதலான குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். இப்பகுதி பெயரை குறிக்கும் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி 2ஆவது வார்டு புறவழிச்சாலையில் கழிவுநீர் ஓடை அமைக்க வேண்டும். மாநகராட்சி 33 ஆவது வார்டு ஆசுரா தெருவில் சாலையை முறையாக அளந்து சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.

கூட்டத்தில் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர்கள் நாராயண்நாயர், சௌந்தரராஜன், மண்டலத் தலைவர்கள் கே. மாதவராமனுஜம், எஸ்.கே. ஹைதர்அலி, மாநகராட்சி உதவி ஆணையர்கள் து. கருப்பசாமி, பெருமாள், பாஸ்கரன், சாந்தி, உதவிப் பொறியாளர் அனிதா, மாமன்ற உறுப்பினர்கள் எம்.கணேஷ், வண்ணை கணேசன், உமாபதிசிவன், முகம்மதுமைதீன், நிலைக்குழுத் தலைவர் டி.எஸ். முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமலர்           29.01.2014 

பேரூராட்சி கூட்டம்

வடமதுரை: வடமதுரை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பாப்பாத்தி தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் விஜயநாத், துணைத்தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நன்னி ஆசாரியூர், ஏ.வி.பட்டி, போஜனம்பட்டி, ரெட்டியார்களம், சக்கரவர்த்தி நகர் பகுதிகளில் குடிநீர் பணிகள் செய்ய ஒப்புதல் தரப்பட்டது. வார்டு பகுதிகளில் ஆங்காங்கே புதிய ஆழ்குழாய் அமைத்து மின்மோட்டார் பொருத்த அனுமதிக்கப்பட்டது.

 

மாநகராட்சி ஊழியர்களுக்கு தியான பயிற்சி வழங்கல்

Print PDF

தினமலர்           29.01.2014 

மாநகராட்சி ஊழியர்களுக்கு தியான பயிற்சி வழங்கல்

ஈரோடு: பிரம்ம குமாரிகள் சபா சார்பில், ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்களுக்கு, இயற்கை பேரிடரில் இருந்து காக்கும், தியானப்பயிற்சி வழங்கப்பட்டது.

மனிதர்களின் மனமாற்றத்தால், இயற்கை பேரிடரை தவிர்க்க முடியும் என, நாடு முழுவதும், சென்னையில் இருந்து, கன்னியாகுமரி வரை, ஒரு குழுவும், சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஒரு குழுவாகவும், அறிவியல் அறிஞர்கள் மற்றும் இன்ஜினியர்கள் அடங்கிய குழு, தியானப்பயிற்சியின் பலன்களை, பொதுமக்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று எடுத்துரைத்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சேலத்தில் இருந்து ஈரோடு வந்த சென்னை - திருவனந்தபுரம் ஈஸ்வரன் தலைமையிலான குழு, ஈரோட்டில் கல்லூரிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீத்தடுப்பு அலுவலகங்களில் தியானப்பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, மாநகராட்சி கூட்ட அரங்கில், ஊழியர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவரும் சகோதரர் என்ற எண்ணம், பிற உயிர்களிடத்தில் அன்பு ஏற்பட வேண்டும். மனிதர்களிடம் மாற்றம் ஏற்பட்டால், அது இயற்கையையும் பிரதிபலிக்கும், என விளக்கினர். தொடர்ந்து இக்குழு, திருப்பூர் சென்று, கோவை, பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் செல்கின்றனர்.

 


Page 31 of 841