Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

"பாதிப்பை சமாளிக்க தயார் நிலையில் மாநகராட்சி'

Print PDF

தினமணி           24.11.2010

"பாதிப்பை சமாளிக்க தயார் நிலையில் மாநகராட்சி'

மதுரை, நவ. 23: கனமழை காரணமாக மதுரை பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டால், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் தயாராக உள்ளது. இது தொடர்பாக விழிப்புடன் இருக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என ஆணையர் செபாஸ்டின் தெரிவித்தார்.

கனமழையால் போடிலைன், முத்துப்பட்டி, மாடக்குளம், பைக்காரா, செல்லூர், பந்தல்குடி ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக போடி லைன் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.

தகவலறிந்த மேயர் கோ. தேன்மொழி, கமிஷனர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தது.

அப்போது கமிஷனர் எஸ்.செபாஸ்டின் செய்தியாளர்களிடம் கூறியது:

தொடர்மழை காரணமாக மதுரை மாநகராட்சி பகுதியிலுள்ள கண்மாய்கள் மற்றும் வாய்க்கால்கள் நிரம்பி வழிகின்றன. வைகை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் ஏற்பட்டால் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த, டீசல் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

200-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள், தாற்காலிக மையங்கள் அமைத்தல், மழைநீர் வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்தல், சாலைகளில் மரம் விழுந்தால் உடனுக்குடன் அப்புறப்படுத்துதல், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வண்டிகள், கட்டுப்பாட்டு அறை அமைத்தல், திருமண மண்டபங்களில் மக்களை தங்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைக் காலத்தில் 24 மணி நேரமும் மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், போடிலைன் பகுதியில் வீடுகளில் தேங்கியிருந்த மழைநீரை, கிருதுமால் வாய்க்காலில் கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கை எடுக்கவும், மழைநீர் தேங்காத வகையில் வாய்க்கால்களை சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முத்துப்பட்டி, மாடக்குளம், செல்லூர் பந்தல்குடி ஆகிய பகுதிகளில் கண்மாய்களில் நிரம்பி வெளியேறும் நீரினை, மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக வெளியேற்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார்.

ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எஸ்.கே. ராஜேந்திரன், கெüஸ்பாஷா, தலைமைப் பொறியாளர் சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாஸ்கரன், மண்டலத் தலைவர்கள் நாகராஜன், மாணிக்கம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 

413 பேருக்கு பணி நியமன ஆணைகள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Print PDF

தினமணி                24.11.2010

413 பேருக்கு பணி நியமன ஆணைகள்: மு..ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நவ.24: சென்னை தியாயகராய நகரில் நடைபெற்ற மாநகராட்சி விழாவில் 413 பேருக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

பணி நியமன ஆணைகளை வழங்கி அவர் பேசியதாவது:

இந்த விழாவில் சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறையில் 238 பேருக்கு மலேரியா தொழிலாளர்களாகவும், மின்துறையில் 175 பேருக்கு மின் தொழிலாளர்களாவும் என மொத்தம் 413 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

2006-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 வருடங்களில் சென்னை மாநகராட்சி சார்பில் 1266 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளும், 1042 பேருக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடி பணி நியமனமும் வழங்கப்பட்டன. 2016 பேர் சென்னை மாநகராட்சியில் கடந்த 4 வருடங்களில் காலமுறை ஊதிய விகிதத்தில் பணிவரன்முறைப்படுத்தப்பட்டார்கள். 2232 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த 2310 தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரமும் செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 4 வருடங்களில் பல்வேறு நிலைகளில் சென்னை மாநகராட்சியில் 8 ஆயிரத்து 866 பேர் பயனடைந்துள்ளனர்.

திமுக ஆட்சியில் கடந்த 4 வருடங்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 466 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என மு..ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனமழையால் தெருவிளக்குகள் பழுது சீர் செய்ய பேரூராட்சி முடிவு

Print PDF

தினகரன்            24.11.2010

கனமழையால் தெருவிளக்குகள் பழுது சீர் செய்ய பேரூராட்சி முடிவு

கரூர், நவ.24: புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் கனமழையால் பழுதான தெருவிளக்குகளை சீர் செய்ய பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சி கூட்டம் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், செயல் அலுவலர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் முருகன், தமிழரசி, முரளி, அன்பாகன், பெரியண்ணன், சசிகலா, நல்லசாமி, பழனிச்சாமி, முத்துசாமி, சக்திவேல், அன்னபூரணி கலந்து கொண்டனர்.

கனமழை காரணமாக இடி விழுந்ததில் ஆவாரங்காட்டுபுதூரில் 15மின்விளக்குகள், கீழ ஒரத்தையில் 8மின்விளக்குகள், அய்யம்பாளையத்தில் 16, காட்டூரில் 6, அம்மாபட்டியில் 5, மூனு£ட்டுப்பாளையத்தில் 5 உட்பட 55 தெருவிளக்குகள் பழுதடைந்தது. இதனை சீர்செய்ய தேவையான தளவாடங்களை வாங்குவது பொது நிதி திட்டத்தில் தர்மராஜபுரம், கணபதிபாளையம்புதூர், ஆவாரங்காட்டுப்புதூர், பகுதிகளில் உள்ள தெரு கைப்பம்புகளில் புதிய மினிபவர் மின்மோட்டார் அமைப்பது, அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் தோட்டக்குறிச்சி மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடத்திற்கு வாடகையை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பது, பேரூராட்சி அலுவலக பதிவறையில் உள்ள மின் இணைப்புகளை அலுவலகம் முன்புறம் இடமாற்றம் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 301 of 841