Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குடியரசு தின விழா

Print PDF

தினமணி           28.01.2014 

குடியரசு தின விழா

ஆலங்குடி பேரூராட்சியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி தலைவர் ஏ.டி. மணமோகன் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

செயல் அலுவலர் மார்கண்டேயன், துணைத் தலைவர் இளங்கோ, உறுப்பினர்கள் பனையப்பன், ஆறுமுகம், கணகன், அப்துல்லா, கலிபுல்லா, அழகர் மற்றும் பணியாளர் கலந்து கொண்டனர்.

 

பெ.நா.பாளையத்தில் சட்ட உதவி மையம் தொடக்கம்

Print PDF

தினமணி           28.01.2014 

பெ.நா.பாளையத்தில் சட்ட உதவி மையம் தொடக்கம்

பெரியநாயக்கன்பாளையத்தில் பொதுமக்கள் வசதிக்காக, கோயமுத்தூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கென பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் துவாரகநாத் சிங் வரவேற்றார்.

கோவை வழக்குரைஞர் பா.கணேசன், இந்த உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, கோவையிலுள்ள குண்டு வெடிப்பு வழக்குகளுக்கான விசாரணை நீதிமன்ற அமர்வு நீதிபதி கே.வி.செந்தூர்பாண்டியன் பேசியது:

பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மையத்தில் சட்டரீதியான உதவிகள் அனைத்தையும் பொதுமக்கள் பெறலாம். வாரம் ஒருமுறை இங்கு ஆணைக் குழுவினர் வந்து மனுக்களை பெறுவர் என்றார்.

பெ.நா.பாளையத்தில் நகைப் பறிப்பு சம்பவங்கள் குறித்து புகார் அளித்தும் போலீஸார் வழக்கு பதியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து  போலீஸாரிடம் விசாரித்த நீதிபதி, உடனுக்குடன் வழக்குப் பதிவு செய்து ரசீது தர வேண்டும் என உத்தரவிட்டார்.

வாரிசு சான்றிதழுக்காக வருவாய்த் துறையிடம் செல்லும்போது, நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் என அலைக்கழிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரன், சட்டப்பணிகள் தன்னார்வலர்கள் ஆர்.அங்குராஜ், வி.விஜயலட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் பரமசிவம் நன்றி கூறினார்.

 

மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பயிற்சி முகாம்

Print PDF

தினமணி           28.01.2014 

மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பயிற்சி முகாம்

மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்ககப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆணையர் கிரன்குராலா முகாமை துவக்கி வைத்துப் பேசியது: நகர்ப்புறங்களில் மிகவும் வறுமை நிலையிலுள்ள ஏழைகளின் துயர் துடைக்க 12 ஐந்தாண்டு திட்ட காலத்தில், நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் மூலம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. முன்மாதிரியாக இத்திட்டம் மதுரை, ஜெய்ப்பூர் மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், சமூக அமைப்புகள் உருவாக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி அளிக்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம்,    சுயவேலைவாய்ப்புத் திட்டம், நகர்ப்புற தெருவோர விற்பனையாளர்களுக்கு உதவி செய்யும் திட்டம், நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கான தங்கும் விடுதி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. நலிந்தோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரம் உயரவும், சொந்தமாக தொழில் செய்பவர்கள், சுயஉதவிக்குழுக்கள், வீடற்ற ஏழைகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கவும், சமூக அமைப்புகள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, அவற்றுக்கு நிதியுதவி வழங்கி வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்கிறது என்றார்.

முகாமில் நகர்நல அலுவலர் யசோதாமணி, சிப்போ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.ராஜகோபால், பொதுமேலாளர் பழனிவேல்முருகன், பிஆர்ஓ சித்திரவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 32 of 841