Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குழித்துறை நகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு

Print PDF

தினகரன்                  5.11.2010

குழித்துறை நகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு

மார்த்தாண்டம் நவ.15: குழித் துறை நகராட்சி உரக்கிடங்கு மார்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் நகரில் சேரும் 3 லாரி குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் உரக்கிடங்கில் மலைபோல் குப்பைகள் குவிந்து காணப் படுகின்றன.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் பல் வேறு தொற்று நோய்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதையடுத்து நகராட்சி சார்பில் உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி கள் செய்யப்பட்டன. எனினும் இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. தற் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த குப்பை களை தரம் பிரித்து உரம் மற்றும் மின் சாரம் தயாரிக்க நகராட்சி முடிவு செய்துள் ளது. அதன்படி தனியார் நிறுவனத்தின் உதவியோடு குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் இங்கு கொட்டப்படும் குப்பைகள் உலோகபொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மக்கும் குப்பை கள் என 3 ஆக தரம் பிரிக்கப்படுகின்றன. பின்னர் மக்கும் குப்பைகளுடன் சாணம், ஈயம் கலந்து ஏரோமிக் முறையில் காற்றின் உதவியுடன் கழிவு களை உரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதோ போல் உலோகம் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கு அனுப்பிவைக் கப்பட உள் ளன. மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் சிமென்ட் ஆலைகளுக்கு ஊடுபொருளாக அனுப்பப்பட உள்ளன.

கோழி போன்ற இறைச்சி கழிவுகளை வேதியியல் முறையை பயன்படுத்தி அவற்றில் இருந்து மின் சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 750 கிலோ கழிவுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந¢த திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்பட உள்ளது.

இதில் முதற்கட்டமாக தற்போது மக்கும் குப்பை களை உரமாக மாற்றுவதற் காக மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் சமப் படுத்தி அவற்றின் மீது மண் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இப் பணிகளை நகராட்சி தலை வர் பொன். ஆசைத்தம்பி, மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறு வன இயக்குனர் சந்திரகுமார், கவுன்சிலர் ரத்தின மணி, நக ராட்சி சுகாதார அலுவலர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குமரியில் உள்ள 4 நக ராட்சி பகுதிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது முதன்முத லாக குழித்துறை நகராட்சி யில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குழித்துறை நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்காக அங்கு குவிந்துள்ள குப்பைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்யும் பணி நடந்தது.

 

துணை கமிஷனர்கள் உட்பட மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் சீருடை

Print PDF

தினகரன்                15.11.2010

துணை கமிஷனர்கள் உட்பட மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் சீருடை

மும்பை, நவ.15: துணை மாநகராட்சி கமிஷனர்கள் உட்பட மும்பை மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் சீருடை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட வேண்டும் என்று நிலைக்குழுவின் தலைவர் ராகுல் ஷெவாலே யோசனை தெரிவித்து இருந்தார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மேயர் அறையில் நடந்தது. மாநகராட்சியின் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த குழு தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி கமிஷனர் ஸ்வாதீன் ஷத்திரியா, கூடுதல் மாநகராட்சி கமிஷனர் ஏ.கே.சிங் மற்றும் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக இந்த திட்டத்தை மிகவும் வரவேற்ற மாநகராட்சி கமிஷனர் ஷத்திரியா, "இது ஒரு நல்ல யோசனை மாநகராட்சி நிர்வாகம் இதை தீவிரமாக பரிசீலிக்கும். இந்த திட்டத்தை அமல் படுத்துவதற்கு ஆகும் செலவு மற்றும் இதை படிப்படியாக அமல் படுத்தலாமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்Ó என்றார்.

இத்திட்டம் குறித்து ஷெவாலே கூறுகையில், "சீருடை அணிவதால் ஊழியர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்களாகவே தங்களது கடமை மற்றும் பொறுப்புகளை உணரத்தொடங்குவார்கள். வார்டு அலுவலகங்களில் மட்டுமின்றி மாநகராட்சி தலைமை அலுவலகத்திலும் மாநகராட்சி ஊழியர்களை அடையாளம் காண இந்த சீருடை உதவும்Ó என்றார்.

மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்கள் சீருடை அணியும்போது மாநகராட்சி ஊழியர்கள் ஏன் அணியக் கூடாது? என்றும் அவர் கேட்டார். சீருடை அணிவதற்கு மாநகராட்சி பொறியாளர்கள் யூனியன் ஏற்கனவே விருப்பம் தெரிவித் துள்ளதாகவும் அவர் கூறினார்.

மும்பை மாநகராட்சியில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 60 சதவீதம் ஊழியர்கள் பியூன் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள். அவர்களுக்கு ஏற்கனவே சீருடை கொடுக்கப்பட்டுள்ளது. குமாஸ்தாக்கள் முதல் துணை மாநகராட்சி கமிஷனர் வரையில் உள்ள மீதமுள்ள 40 சதவீதம் ஊழியர்களுக்கும் இனி சீருடை வழங்கப்பட உள்ளது.

 

பெங்களூரில் 3 லட்சம் நாய்களுக்கு குடும்பகட்டுப்பாட்டு சிகிச்சை

Print PDF

தினகரன்                 15.11.2010

பெங்களூரில் 3 லட்சம் நாய்களுக்கு குடும்பகட்டுப்பாட்டு சிகிச்சை

பெங்களூர், நவ. 15: பெங்களூரில் கடந்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் தெருநாய்களுக்குகுடும்பகட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் சித்தையா தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநகரில் பெருகி வரும் தெருநாய்களின் இன பெருக்கத்தை தடுக்கும் நோக்கத்தில் இதற்கு முன் 15 பேக்கேஜ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதை தற்போது 20 ஆக உயர்த்தியுள்ளோம். மாநகரில் உள்ள 198 வார்டுகளிலும் ஏ.பி.சி. (அனிமல் பர்த் கண்ட்ரோல்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. .பி.சி. திட்டம் செயல்படுத்துவதற்காக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 2, மகாராஷ்டிராவை சேர்ந்த 2 மற்றும் கர்நாடகாவில் இயங்கி வரும் 3 என்ற வகையில் பிராணிகள் நல சங் கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இயங்கி வரும் அனிமல் பிராணிகள் நலம் மற்றும் ஊரக மேம்பாடு என்ற பிராணிகள் நல அமைப்பு தென் மாநிலங்களில் தெருநாய்கள் இன பெருக்கம் செய்வதை தடுக்கும் ஏ.பி.சி. அறுவை சிகிச்சை செய்வதை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. டெண்டர் மூலம் இந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாநகரில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்களுக்கு ஏ.பி.சி. செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடமாடும் அறுவை சிகிச்சை வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஏ.பி.சி. செய்யும் நாய்களுக்கு மனநலம் பாதிக்காமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் ரேபிஷ்நோய் தாக்கிய நெருநாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் தெருநாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்துவதுடன், வெறிநாய்கள் தொல்லையும் குறையும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் சித்தையா கூறினார்.

Last Updated on Monday, 15 November 2010 06:10
 


Page 312 of 841