Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஓட்டேரி சமூக நலக்கூடத்தில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ தயாநிதி மாறன் நாளை தொடக்கம்

Print PDF

தினகரன்                   12.11.2010

ஓட்டேரி சமூக நலக்கூடத்தில் மக்களைத் தேடி மாநகராட்சிதயாநிதி மாறன் நாளை தொடக்கம்

சென்னை, நவ.12: மக்களைத் தேடி மாநகராட்சி நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, அங்கேயே தீர்வு காணப்படுகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி விதித்தல், திட்ட அனுமதி மற்றும் கட்டிட உரிமம், புதிய குடிநீர் இணைப்பு, பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு, எரியாத தெருவிளக்குகளை சரிசெய்தல் போன்ற நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி, மண்டலம்&7ல் நாளை (13ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை ஓட்டேரி, வெங்கடாத்திரி தெரு, மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் நடக்கவுள்ளது. செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னிலையில், மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்து பேசுகிறார்.

மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள், குடிசை மாற்று வாரியம், பொது வினியோகத்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று உடனுக்குடன் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்து தீர்வு காண்பார்கள். இதில் 97வது வார்டு முதல் 106வது வார்டு வரை உள்ள மக்கள்பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

 

குப்பை கொட்ட இடம்: கவுன்சிலர்கள் ஆலோசனை

Print PDF

தினமணி             11.11.2010

குப்பை கொட்ட இடம்: கவுன்சிலர்கள் ஆலோசனை

பண்ருட்டி, நவ. 10: பண்ருட்டி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட தாற்காலிக தீர்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

÷நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், துணைத் தலைவர் கே.கோதண்டபாணி மற்றும் திருவதிகை பகுதியைச் சேர்ந்த இந்நாள், முன்னாள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

÷பண்ருட்டி நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமின்றி நகர நிர்வாகம் ஆறு, குளம் உள்ளிட்ட பொது இடத்தில் கொட்டி பொது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. மேலும் பல ஆண்டுகளாக முயற்சித்தும் குப்பை கொட்டுவதற்கென நிலையான ஒரு இடத்தை நகர மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வாங்க முடியவில்லை. இதுகுறித்து "குப்பைகளால் பொலிவிழந்து காணப்படும் பண்ருட்டி' என்ற தலைப்பில் திங்கள்கிழமை தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

÷இச்செய்தியைத் தொடர்ந்து தாற்காலிகமாக குப்பைகளை திருவதிகை பகுதியில் உள்ள சுடுகாடு அருகே கொட்டுவது தொடர்பாக அப்பகுதி கவுன்சிலர்கள் முருகன், கார்த்திக், கதிரேசன், முன்னாள் கவுன்சிலர்கள் அன்பழகன், பட்டுசாமி உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்வு ஏதும் ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்தது. ÷இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரியை கேட்டதற்கு அவர் கூறியது:

÷பண்ருட்டி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திருவதிகை மற்றும் மணி நகர் பகுதியில் கொட்ட தீர்மானிக்கப்பட்டது. முன்னரே மணிநகர் பகுதியில் உரம் தயாரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை நடைமுறைப்படுத்த உள்ளோம். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் பணி ஆணை வந்தவுடன் செயல்பட தொடங்கும். திருவதிகை பகுதியில் குப்பை கொட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்மதிக்கவில்லை என ஆணையர் கூறினார்.

 

நகரின் மிக உயரமான கட்டிடம் மாநகராட்சி அலுவலகம் இன்று புது கட்டிடத்துக்கு மாறுகிறது

Print PDF

தினகரன்               11.11.2010

நகரின் மிக உயரமான கட்டிடம் மாநகராட்சி அலுவலகம் இன்று புது கட்டிடத்துக்கு மாறுகிறது

புதுடெல்லி, நவ. 11: மாநகராட்சி அலுவலகம் தன்னுடைய புது கட்டிடத்துக்கு இன்று மாறுகிறது. மாநகராட்சி அலுவலகம், சாந்தினி சவுக்கில் உள்ள டவுன் ஹால் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் மிகவும் பழமையாகிவிட்டதால், மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாந்தினி சவுக்கில் ரூ.650 கோடி செலவில் 28 மாடி கொண்ட மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு யார் பெயரை வைப்பது என்பதில் பா.. காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், பா..வின் தொடக்கக்கால அமைப்பான ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பெயர் வைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கட்டிடத்தை திறந்து வைத்தார். இக்கட்டிடத்தில் 28வது மாடியில் இருந்து பார்த்தால் நகரின் பெரும்பாலான பகுதியை காண முடியும். மேலும், நகரிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

மாநகராட்சியின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில், கட்டிடத்தின் சில பகுதிகள் அரசு நிறுவனங்களுக்கு நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், டவுன் ஹாலில் இயங்கி வந்த மாநகராட்சி அலுவலகம் இன்று முதல் புது கட்டிடத்துக்கு மாறுகிறது. டிசம்பர் 8ம் தேதி வரையில் நான்கு கட்டங்களாக மாநகராட்சி அலுவலகங்கள் இடம் மாற உள்ளன. மாநகராட்சியின் சுகாதாரம், கல்வி, பொறியியல், வீட்டு வரித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அலுவலகங்கள் புதிய கட்டிடத்துக்கு மாறுகின்றன.

எனினும், மேயர், அவை முன்னவர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகங்கள் பழைய கட்டிடத்திலேயே இப்போதைக்கு இருக்கும். புதிய கட்டிடம் தினமும் 20,000 பேர் வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி அலுவலகங்கள் அனைத்தும் புதிய கட்டிடத்துக்கு மாறிய பின்னர், பழைய கட்டிடம் பாரம்பரிய ஓட்டலாக அல்லது அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பரந்து விரிந்த கட்டிடம் ரூமாநகராட்சியின் புதிய கட்டிடம் 1.16 லட்சம் பரப்பளவில் மிக பரந்து விரிந்துள்ளது. இயற்கையில் கிடைக்கும் மழைநீர், காற்று, சூரிய ஒளி ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தும் வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. ரூபுதிய கட்ட 1994ம் ஆண்டு வாஜ்பாயால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், 2005ம் ஆண்டில்தான் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. கட்டி முடிப்பதற்கான கால அளவு பல முறை நீட்டிக்கப்பட்டு இறுதியாக ஏப்ரலில்தான் நிறைவடைந்தது. ரூமலேசியாவை சேர்ந்த ஐ.ஜே.எம். கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த கட்டிடத்தை கட்டியுள்ளது. ரூபுதிய கட்டிடத்திலும் மழைநீர் பெருமளவு தேங்குவதாக புகார் எழுந்துள்ளது. ரூபுதிய கட்டிடத்தில் 6 மாடிகளை கொண்ட நான்கு கட்டிடங்களும், 28 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடமும் உள்ளது. ரூ1,000 பேர் அமரும் வகையில் அரங்கம், ஓவிய வளாகம், உணவு விடுதி, 33 கே.வி. துணை மின் நிலையம், காத்திருக்கும் பகுதி, அழகிய நீரூற்றுகள், திறந்தவெளி அரங்கம், மாநகராட்சி கூட்டம் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்துக்காக 3 பிரமாண்ட ஹால்கள், பத்திரிகையாளர் மையம் என பல வசதிகள் இதில் உள்ளன.

Last Updated on Thursday, 11 November 2010 06:01
 


Page 313 of 841