Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

Print PDF

தினபூமி           27.01.2014 

சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா
 
சென்னை.ஜன.28 - சென்னை மாநகராட்சி மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 65_ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரிப்பன் கட்டடத்தில்...

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மேயர் சைதை துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியரின் அணிவகுப்பு மாஷயாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெநூரவித்தார்.

2013_14_ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருதுபெற்றவர்களுக்கும் கேடயங்களையும் அவர் வழங்கினார். செண்பகப்பூ மற்றும் செநூந்தரியம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, இந்தியன் வங்கி கிளைகளின் மூலம் வழங்கப்பட்ட தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மேயர் வழங்கினார். மேலும், 71 பயனாளிகளுக்கு தனி நபர் கடனாக ரூ.1.06 கோடிக்கான காசோலைகளையும், 21 அண்டை வீட்டுக் குழுக்களுக்கு ரூ.33 லட்சத்துக்கான காசோலைகளையும் அவர் அளித்தார்.

விழாவில் சென்னை மாநகராட்சி துணை மேயர் பெஞ்சமின், ஆணையர் விக்ரம் கபூர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ஈச்சம்பட்டியில் நியாயவிலை கடை கட்டிடம் திறப்பு

Print PDF

தினகரன்          27.01.2014 

ஈச்சம்பட்டியில் நியாயவிலை கடை கட்டிடம் திறப்பு

துறையூர், : உப்பிலியபுரம் பேரூராட்சியில் உள்ள ஈச்சம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.6.66 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் மைவிழி அன்பரசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் அழகாபுரி செல்வராஜ் வரவேற்றார். கடையை எம்எல்ஏ இந்திராகாந்தி திறந்து வைத்தார்.

உப்பிலியபுரம் ஒன்றியக்குழு தலைவர் லலிதா செல்லமுத்து, அவைத்தலைவர் வைரபெருமாள், பேரூராட்சி செயலாளர்கள் ராஜாங்கம், ராஜேந்திரன், கூட்டுறவு இயக்குனர் முத்துசாமி, தலைவர் மருதமுத்து, செயலாளர் அசோகன், துறையூர் ஒன்றியக்குழு தலைவர் பாலசுப்பிரமணியன், வட்ட கூட்டுறவு விற்பனையாளர் சங்க தலைவர் மோகன்தாஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் பாக்யலட்சுமி, கண்ணதாசன், செல்வம், கலைச்செல்வி துரைராஜ், சுந்தர்ராஜீ, அக்ரோ தலைவர் தர்மராஜ், சிக்கத்தம்பூர் கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.

 

நகராட்சி கவுன்சில் கூட்டம்

Print PDF

தினமலர்          27.01.2014 

நகராட்சி கவுன்சில் கூட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நேற்று<, நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். கமிஷனர்(பொறுப்பு) ராமசாமி முன்னிலை வகித்தார். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பராமரிப்பு, ரேஷன் கடை அமைப்பது மற்றும் அடிப்படை வசதி பணிகள் குறித்து, 39 தீர்மானங்கள் நிறைவேறின. பத்து நிமிடங்களில் கூட்டம் முடிந்தது. 

 


Page 33 of 841