Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உள்ளாட்சி தின விழாவில் ரூ. 1 கோடியில் நலத் திட்ட உதவி

Print PDF

தினமணி              02.11.2010

உள்ளாட்சி  தின விழாவில் ரூ. 1 கோடியில் நலத் திட்ட உதவி

மதுரை, நவ.1: மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தின விழாவில் 500 பேருக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை மாநகராட்சியில் திங்கள்கிழமை உள்ளாட்சி தினவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்து, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கும், அரசுக்கும் பாலமாகத் திகழ்ந்து வருகின்றன. உள்ளாட்சிகள் மூலம் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

குடிநீர், கல்வி, சுகாதாரம் என எந்தவொரு திட்டமும், உள்ளாட்சி மூலம்தான் பொதுமக்களுக்குச் சென்றடைந்து வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்தும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என உள்ளாட்சிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு திட்டங்கள் மக்களைச் சென்றடைய காரணமாக உள்ளது.

கடந்த 2007 முதல் இந்த உள்ளாட்சி தினவிழா தமிழக அரசு மூலம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விழா கொண்டாடப்படுகிறது என்றார் அவர்.

விழாவில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் 500 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டன.

விழாவில், துணை மேயர் பி.எம். மன்னன், துணை ஆணையர் தர்ப்பகராஜ், மண்டலத் தலைவர்கள் இசக்கிமுத்து, நாகராஜன், வி.கே. குருசாமி, தலைமைப் பொறியாளர் சக்திவேல், மக்கள் தொடர்பு அதிகாரி ஆர். பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியில் மாணவ, மாணவியர், செவிலியர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

பழனி நகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா

Print PDF

தினமணி                02.11.2010

பழனி நகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா

பழனி, நவ. 1: பழனி நகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் உள்ளாட்சிகள் தின விழா நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பழனி நகராட்சி சார்பில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

காலை நகராட்சி சார்பில், 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பங்கேற்ற மாஸ் கிளீனிங் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி பஸ் நிலையம் துவங்கி, பாளையம், தேவர் சிலை, அடிவாரம் என பல இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சாலையோர குப்பைகள், மணல் அகற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை, பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர் மூர்த்தி, பொறியாளர் முத்து உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

இதையடுத்து, இடும்பன் இட்டேரி சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நகராட்சி பணியாளர்களுடன், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் திருமலைசாமி, ஆசிரியர் ரெங்கநாதன் தலைமையில் ஏராளமான மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு, நகராட்சி வளாகத்தில் மாணவ, மாணவியர், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கங்களும், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளும் நடைபெற்றன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும், சான்றுகளும் வழங்கப்பட்டன.

இதில், கவுன்சிலர்கள் மகேஸ்வரி சக்திவேல், குமார், கார்த்திகேயன், கந்தசாமி, முருகபாண்டியன், பச்சைமுத்து, துப்புரவு ஆய்வாளர்கள் அபுதாகீர், மணிகண்டன், நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

ஒட்டன்சத்திரத்தில் உள்ளாட்சிகள் தின விழா

Print PDF

தினமணி            02.11.2010

ஒட்டன்சத்திரத்தில் உள்ளாட்சிகள் தின விழா

ஒட்டன்சத்திரம், நவ. 1: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆணையாளர் (பொறுப்பு) எம்.பி. மூர்த்தி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கட்டுரைப் போட்டி,விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் தீவிர துப்புரவுப் பணி முகாம் நடைபெற்றது. சிறப்பாகப் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பெண்கள் சுயஉதவிக் குழுவினருக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது. பின்னர் துப்புரவுப் பணியாளருக்கு 2010-11-ம் ஆண்டிற்கான சீருடைகள், காலணிகள் வழங்கப்பட்டன.

 


Page 327 of 841