Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தினவிழா

Print PDF

தினமலர்                    02.11.2010

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தினவிழா

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்த உள்ளாட்சி தினவிழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் கமிஷனர் குபேந்திரன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் மேயர் தலைமையிலான அணிக்கு பரிசு கிடைத்தது. தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினவிழா கொண்டாட வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு கடந்து மூன்று ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டி நடத்தி மக்கள் பிரதிநிதிகளை பங்கேற்க செய்து கலகலப்பாக இதனை கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று உள்ளாட்சி தின விழா மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் குபேந்திரன் வரவேற்றார், இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், வருவாய் அலுவலர் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் மற்றும் துரைமணி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்காக மாநகராட்சி புதிய அலுவலகம் முன்பாக போடப்பட்டிருந்த சாமியான பந்தலில் விழா மற்றும் போட்டிகள் நடந்தது. மாவட்ட இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பின்னர் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்குள் போட்டி நடந்தது. ஆண், பெண்களுக்கு தனித்தனியாக கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. பெண்கள் பிரிவுக்கு நடந்த போட்டியில் மேயர் தலைமையில் கவுன்சிலர்கள், பெண் ஊழியர்கள், மாநகராட்சி மேலாளர் (பொ) ஆறுமுகத்தம்மாள் தலைமையில் அணியும் மோதி கயிறுஇழுத்தனர். இதில் மேயர் கஸ்தூரிதங்கம் அணி வெற்றி பெற்றது. ஆண்களுக்கான பிரிவில் கமிஷனர் குபேந்திரன் தலைமையில் ஒரு அணியும், இன்ஜினியர் ராஜகோபாலன் தலைமையில் ஒரு அணியும் மோதியது. இரண்டிலும் ஊழியர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் கமிஷனர் குபேந்திரன் அணி வெற்றி பெற்றது. பெண்களுக்கான மியூசிக்கல் சேர் போட்டியில் மேயர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

முன்னதாக மாநகராட்சி பழைய கட்டடத்தில் உள்ள தலைவர்கள் சிலைக்கு உள்ளாட்சி தினவிழாவை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


 

செங்கம் பகுதியில் உள்ளாட்சிகள் தின விழா

Print PDF

தினகரன்                  02.11.2010

செங்கம் பகுதியில் உள்ளாட்சிகள் தின விழா

செங்கம், நவ.2: செங்கம் பகுதியில் நேற்று உள்ளாட்சிகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் நேற்று உள்ளாட்சி தின விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வேடியப்பன் தலைமை தாங்கினார்.

ஆணையாளர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் பரிதிமால் வரவேற்றறு பேசினார்.

சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு தலைவர் குமார் கலந்து கொண்டு பேசினார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

செங்கம் பேரூராட்சியில் உள்ளாட்சி தினவிழாவை யொட்டி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிறை வடைந்தது.

பேரூராட்சி தலைவர் பத்மா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அப்துல்சத்தார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மதிவாணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா நன்றி கூறினார்.

 

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ8 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் காந்தி எம்.எல்.ஏ. வழங்கினார்

Print PDF

தினகரன்                     02.11.2010

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ8 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் காந்தி எம்.எல்.. வழங்கினார்

ராணிப்பேட்டை,நவ.2: ராணிப்பேட்டை நகராட்சியில் நடந்த உள்ளாட்சி தின விழாவில் ரூ8 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை, எம்.எல்.. காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் நேற்று உள்ளாட்சி தின விழா நகராட்சி தலைவா¢ கிருஷ்ணமூ£¢த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எஸ்.எம்.சுகுமார் முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளா¢ முருகன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எல்.. காந்தி கலந்துகொண்டு 104 பெண்களுக்கு மகப்பேறு நிதி ரூ6 லட்சம், சொர்ணஜெயந்தியோஜனா திட்டத்தின் கீழ் கணினி பயிற்சி பயிலும் இளைஞா¢கள், இளம்பெண்கள் மற்றும் தனியார்கணினி நிறுவனத்தார் ஆகியோருக்கு ரூ2 லட்சத்து 32 ஆயிரம் நிதி உதவியை வழங்கி பேசினார்.

மற்றும் மாவட்ட கவுன்சிலர் நந்தகுமார், ஆற்காடு நகராட்சி தலைவா¢ ஈஸ்வரப்பன், கவுன்சிலா¢கள் தாமோதிரன், அப்துல்லா, முத்துகிருஷ்ணன், பரமேஸ்வரி, நகராட்சி மருத்துவா¢ வானதி, உள்பட பலர் பேசினர். முன்னதாக உள்ளாட்சி தினம் முன்னிட்டு நடந்த ஊர்வலத்தை நகராட்சித் தலைவா¢ கிருஷ்ணமூ£¢த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

என்.சி.சி. அலுவலார் அன்பழகன் முன்னிலையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊ£¢வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி வளாகத்தில் முடிவடைந்தது.

முடிவில் நகராட்சி மேலாளார் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

மேலும் ராணிப்பேட்டை கோட்டாட்சியா¢ அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவி சிறப்பு முகாம், கோட்டாட்சித்தலைவார் முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

வாலாஜா தாசில்தார்சிங்காரம், நகராட்சித் துணைத்தலைவர் எஸ்.எம்.சுகுமார், வட்ட வழங்கல் அலுவலா¢ மோகன், வருவாய் ஆய்வாளார் ராஜசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி அலுவலர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எல்.. காந்தி கலந்துகொண்டு கொண்டக்குப்பம் சிலோன் காலனி யை சேர்ந்த 36 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் 27 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், விவசாய தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 8 பேருக்கு உதவி தொயை£க ரூ36 ஆயிரம், ஈமச்சடங்கு நிவாரண நிதி 5 பேருக்கு ரூ50

ஆயிரம், நலிந்தோர் குடும்ப நல உதவி திட்டத்தின் கீழ் 7 பேருக்கு ரூ1 லட்சத்து 56 ஆயிரம், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

 


Page 330 of 841